தாமிரபரணி நதியில் புஷ்கரணி விழா

தாமிரபரணி என்பது கங்கை காவேரி போல புண்ணிய நதி, அதன் கரைகளில் ஏராளமான புண்ணிய ஸ்தலங்கள் உண்டு

அந்த புனிதமான நதியில் புஷ்கரணி விழா கொண்டாட கூடாது என திருமா, வைகோ , நல்லகண்ணு எல்லாம் கிளம்புவது சரியல்ல. கண்டிக்க வேண்டிய விஷயம்

இவர்கள் இந்துமதம் தொடர்பான பண்டிதர்களோ இல்லை மத அபிமானிகளோ அல்ல, மக்கள் தாமிரபரணியில் விழா கொண்டாடினால் அதை தடுக்க கிளம்பும் உரிமையினை இவர்களுக்கு யார் கொடுத்தது?

விட்டால் நெல்லையப்பர் கோவில் தேர் எங்களை கேட்டுவிட்டுத்தான் நகர வேண்டும் என கிளம்புவார்கள் போலிருக்கின்றது


 

இதோ தாழ்த்தபட்டவர்களுக்காக கட்சி நடத்தும் ஜாண்பாண்டியனும் , அய்யரும் ஆண்டவன் சன்னிதானத்தில் ஒன்றாக மரியாதையாக நிற்கும் காட்சி

புரட்சிகளை செய்ய பெரியார் வேண்டுமென்றில்லை, ரவுடிகளும் செய்யலாம்

Image may contain: 4 people, people standing
—————————————————————————————————————————————–

 

விநாயகர் சதுர்த்திக்கு எல்லோரும் வாழ்த்து சொல்லும்பொழுது மு.க ஸ்டாலினை காணவில்லை

இந்துக்களுக்கு வாழ்த்து சொல்லாமல் புறக்கணித்துவிட்டு பக்ரீத்துக்கும், கிறிஸ்மஸ்தக்கும் வாழ்த்து சொல்லி உங்களுக்கு திமுக செய்த சலுகைகளை பாரீர் என்பதெல்லாம் சரி அல்ல‌

புது வழி, நேர்வழி, பின்வாசல் வழி இல்லா முன்வாசல் அரசியல் என நடக்கும் ஸ்டாலின் இந்துக்களுக்கு வாழ்த்து சொல்வதால் ஒன்றும் குறைந்துவிட மாட்டார்

கலைஞர் டிவி, சன்டிவியில் எல்லாம் இந்துமத கடவுள்களின் சீரியல், சாமி சீரியல் ஓடும்பொழுது ஸ்டாலின் இப்படி பகுத்தறிவில் நிற்பது நகைப்புகுரியது

எங்கள் டிவியில் ராமானுஜர் சீரியல் முதல் பல சீரியல்களை ஒளிபரப்பி சம்பாதிப்போம், ஆனால் இந்துக்களுக்கு வாழ்த்து சொல்லாமல் புறக்கணிப்போம் என்பதெல்லாம் அப்பட்டமான காமெடி

இன்னும் இந்து விரோத போக்கினை திமுக கொண்டிருந்தால் அது பலன் தராது

காலத்திற்கு ஏற்ப மாறாத எதுவும் நிலைக்காது


 

ஆக திமுகவில் இருக்கும் யாரும் பிரியாணி கடையில் யார் முகத்திலாவது குத்தலாம், அழகு நிலையத்தில் கிக் பாக்சிங் செய்யலாம்

கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்குவார்கள், அதன் பின்னர் பின்வாசல் வழியாக சேர்த்துகொள்வார்கள் அதன்பின் அவர்கள் கட்சிபணி ஆற்றலாம்.

இனி முக ஸ்டாலின் அந்த அழகு நிலையத்திற்கு ஆறுதல் சொல்ல செல்வார், அவர்களும் ஆறுதலடைவார்கள்


இந்த பக்கமாவது அடிதடி என்றால் தற்காலிக நீக்கமாவது உண்டு, பழனிச்சாமி பக்கம் பலநூறு கோடி ஊழல் என்றாலும் சிக்கலே இல்லை, அமைச்சர்களை அருகிலே வைத்து கொள்வார்கள்

அவர்கள் மகா மோசம்


 

தரம் கெட்ட செயலை செய்த தன் கட்சிக்காரனை கட்சியினை விட்டு நீக்கி, மற்ற அடாவடி திமுகவினருக்கும் எச்சரிக்கை செய்திருக்கின்றார் ஸ்டாலின்

அப்படியே முகநூலில் அழிச்சாட்டியம் செய்யும் திமுகவினரையும் அவர் கண்டிப்பது நல்லது

தன் கட்சிக்காரன் அழிச்சாட்டியம் செய்தவுடன் களையும் ஸ்டாலின், தன் அமைச்சர்கள் மேல் ஊழல் குற்றசாட்டு வெடித்தாலும் அடைகோழி போல காக்கும் பழனிச்சாமியினை விட மேலானவராகத்தான் நிற்கின்றார்


அடிதடியில் ஈடுபடுவோரை கட்சியிலிருந்து நீக்கத்தான் வேண்டும்

திமுக அப்படியான கட்சி என்பதை நிரூபித்துவிட்டது, கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனிலே கும்மாங்குத்து குத்தியும் கட்சியில் விட்டு வைக்க அது என்ன தமிழக காங்கிரஸ் கட்சியா?

காங்கிரஸார் இனியாவது பாடம் படிகட்டும்