ராஜபக்சே டெல்லி வந்திருக்கின்றார்

மறுபடியும் ராஜபக்சே டெல்லி வந்திருக்கின்றார் , அதுவும் சும்மா வரவில்லை மகன், அப்பா, அப்பப்பா, அம்மா அம்மம்மா , அக்கா அக்கக்கா என குடும்பதோடு வந்திருக்கின்றார் போல

பஸ் பிடித்து செல்லும் வைகோவுமில்லை, இங்கே அழிச்சாட்டியம் செய்யும் சைமனோ, திருமுருகன் காந்தி போன்றோர் சத்தமுமில்லை

“அடேய் ராஜபக்சே வந்திருக்கின்றார், அதுவும் முள்ளிவாய்க்கால் கொள்ளி வைத்த ராஜபக்சே வந்திருக்கின்றார்..” என்றால் “அட போடா..” என சொல்லிவிட்டு எல்லாம் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாயிற்று

எப்பொழுது இவர்கள் கத்துவார்கள் என்றால் திமுக காங்கிரஸ் கூட்டணி இருந்து டெல்லிக்கு ராஜபக்சே வந்தால் கத்துவார்கள்

இப்பொழுது பழனிச்சாமி முதல்வராகவும், மோடி பிரதமராகவும் இருப்பதால் சத்தமே இல்லை

ராஜபக்சே சென்னை வந்து சாதாரணமாக டீ குடித்தாலும் இவர்கள் கண்டுகொள்ள போவதில்லை

இவர்கள் கண்டுகொள்ள வேண்டுமென்றால் மாநிலத்தில் திமுக ஆளவேண்டும் , மத்தியில் காங்கிரஸ் இருக்க வேண்டும்

இல்லாவிட்டால் ராஜபக்சே மெரீனா பக்கம் கிரிக்கெட் விளையாடினாலும் கண்டுகொள்ள மாட்டார்கள்

Image may contain: 2 people, people smiling, people standing and beard
—————————————————————————————————————————————–

 

ஈழமக்கள் இந்த புலி இம்சைகளை சுத்தமாக மறந்து வாழ ஆரம்பித்தாயிற்று, அந்த கொடும் காலங்களை மறக்க நினைகின்றார்கள்

கம்போடியாவின் போல்பாட் போல புலிகள் கசந்த அனுபவத்தின் எச்சம் ஆகிவிட்டார்கள், அவர்களை நினைக்க யாரும் விரும்பவில்லை

அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வந்தாயிற்று, இலங்கை சென்ற ஓவியாவிற்கு கிடைத்த பெரும் வரவேற்பே அதற்கு சான்று

கவனியுங்கள் அவ்வளவு பெரிய கூட்டம் ஓவியாவிற்கு கூடி இருக்கின்றது, தமிழர் கூட்டம்

ஒருவனாவது ராஜிவ் கொலையாளியான‌ முருகனை விடு, சாந்தனை விடு என கத்தினானா? இல்லை. அவர்கள் அந்த நினைப்பே இல்லாமல் இருக்கின்றார்கள்

சத்தம் உள்நாட்டில்தான் கேட்கின்றது

ஓவியாவிற்கே இப்படி என்றால் ரஜினி சென்றால் எப்படி இருக்கும்?

ஈழமக்கள் முழுக்க மகிழ்வாய் இருப்பதாக தோன்றும், இந்த சைமானிய திருமா திருமுருகன் கதை எல்லாம் கிழிந்துவிடும்

இதனால்தான் ரஜினி செல்வதை குறுக்கே விழுந்து தடுக்கின்றார்கள்

எமது அனுமானம் சரியென்றால் நிச்சயம் 2.0 படத்தினையொட்டி ரஜினி இலங்கை செல்லலாம், ராஜபக்சே போன்றோரின் வருகையும் இன்னபிறவும் அதற்கு கட்டியம் கூறுகின்றன‌

அன்று எவனாவது ரஜினி ஈழம் போக கூடாது என சொன்னால், அவனை பிடித்து முருகன், நளினி இடையே ஆயுள் கைதியாக வைத்துவிட வேண்டும்