அணுவுலை முதல் ஏராளமான சிக்கலுக்கு காரணம் தேசிய கட்சிகள்
“ராமேஸ்வரம் மீணவர் பிரச்சினையினை தேசிய கட்சிகள் கண்டுகொள்ளவில்லை, காவேரி பிரச்சினைக்கு காரணம் தேசிய கட்சிகள்
இங்குள்ள அணுவுலை முதல் ஏராளமான சிக்கலுக்கு காரணம் தேசிய கட்சிகள்
இந்த பெட்ரோல் விலை உயர்வுக்கும் காரணம் மத்திய அரசு
இப்படி இந்த திராவிட கட்சிகளும் அதன் கூட்டு ஒட்டு கட்சிகளும் சொல்லிகொண்டே இருக்கின்றன”
மக்கள் யாருக்கு வாக்களித்தார்கள்? சாட்சாத் இவர்களுக்கு, ின் யாரிடம் எதிர்பார்ப்பார்கள்? இவர்களிடம்தான் எதிர்பார்ப்பார்கள்
எல்லா சிக்கலுக்கும் மத்திய அரசே காரணம் என்றால் தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு வாக்களித்து தங்களை சரிசெய்து கொள்ளட்டும், தேசிய கட்சிக்கு வாக்களித்தோமே என்னாயிற்று என கேட்கட்டும்
தேர்தலில் குறுக்கே வராமல் இருக்க இவர்கள் தயாரா? நிச்சயம் இல்லை
உண்மையில் இவர்களால் இந்திய அளவிலானா பிரச்சினைகளை தீர்க்கவே முடியாது, இவர்களின் எல்லை எல்லாம் மேம்பாலம் கட்டுதல், குடிநீர் குழாய் பதித்தல், குட்டியாக அணைகட்டி போஸ் கொடுத்தல், டாஸ்மாக்கில் கொள்ளை அடித்து ஸ்கூட்டியோ இல்லை மிக்ஸியோ கொடுத்தல்
இவர்கள் எல்லை அவ்வளவுதான், அந்த எல்லைக்குள் இவர்கள் நின்றால் சிக்கலே இல்லை
பெட்ரோல் விலை கொழுந்துவிட்டு எரிகின்றது, நாடாளுமன்றத்தில் 36 அதிமுக எம்பிக்கள் என்ன செய்கின்றார்கள் என யாராவது கேட்டோமா?
இல்லை இருக்கின்றோம் என அவர்கள்தான் சொல்வார்களா?
தமிழ்நாடு நலம்பெற தேசிய அரசியலில் இந்த திராவிட கட்சியும் அதன் ஒட்டுண்ணி இம்சைகள் தலையிடாமல் இருப்பது நல்லது, மாநில அரசியலில் தலை இடாமல் இருப்பது அதை விடவும் நல்லது