அந்த காலத்தில் ராஜாஜி என்றொருவர் இருந்தார், இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் மற்றும் தமிழர்
மகாத்மா காந்தியின் சம்பந்தி
பெரும் வழக்கறிஞரும், பெரும் அறிஞருமான அவர் மூதறிஞர் என போற்றபட்டார். பெரியாரும் அவரும் கருத்து ரீதியாக மோதினாலும் அவரை கலக்காமல் பெரியார் ஏதும் செய்ததில்லை மணியம்மை திருமணம் உட்பட
காங்கிரசுக்கும் நாட்டிற்கும் மிகபெரும் அடையாளம் மூதறிஞர் ராஜாஜி
அவரை குறிவைத்து அடித்தே திமுக வளர நினைத்தது, திமுகவின் தந்திரம் அது. யார் பெரியவர்களோ அவர்கள் முன்னால் நின்று குதிப்பது, அவர்கள் பதிலளிக்க அளிக்க பதில் சொல்லி சொல்லி வளர்வது
அப்பொழுது காங்கிரசில் படித்தவர்களும் பெரும் அறிஞர்களும் இருந்தார்கள் ஆனால் பெரியார் பக்கம் படித்தோர் என யாருமில்லை அண்ணாவினை தவிர
அண்ணா அவர்களுக்கு மிகபெரும் வரம், ஆங்கில புலமை அப்படி
பெரும் ஆங்கில கட்டுரைகளை, கம்யூனிச கட்டுரைகளை தமிழில் தமிழக மரபிற்கேப மாற்றி தூள் கிளப்புவார், அதில் திராவிட கருத்துக்களை தூவுவார்
ரஷ்ய பொதுவுடமை கட்டுரைகளை, கடவுள் மறுப்பு கட்டுரைகளை தமிழில் மொழிபெயத்து திராவிட பொடி தூவினால் விஷயம் ரெடி
பெரியார் முரட்டு தலைவர், அவரிடம் படித்தவர்கள் என வேலை செய்தது அண்ணாவும் பின்னாளில் வீரமணியும்
இதில் அண்ணா பின்பு ராஜாஜியோடு மல்லுகட்ட ஆரம்பித்தபின் மூதறிஞர் ராஜாஜிக்கு போட்டியாக அண்ணாவிற்கு என்ன பட்டம் கொடுக்கலாம் என யோசித்தார்கள்
அட்டகாரமாக பேரறிஞர் அண்ணா என்றார்கள் அவர்களாகவே சொல்லிகொண்டார்கள்
அண்ணா பேரறிஞரானது அப்படித்தான்,” ஏ அதிகார பிராமண வர்க்கமே, மற்ற சாதிகள் படிப்பது எப்பொழுது?” என பேரரிஞர் கேட்டபொழுது மூதறிஞர் ராஜாஜி போன்றவர்கள் “அண்ணா இரண்டு எம்.ஏ வாங்கவில்லையா?” என பதிலுக்கு கேட்டபொழுது பேரறிஞர் பதில் சொல்லவில்லை
அன்று அந்த கூட்டத்தில் சொல்லிகொள்ளும் ஒரே தகுதி உள்ளவர் என்பதால் அண்ணா பேரறிஞர் ஆனார், ஆக்கபட்டார்
இன்றும் திமுக என்பது பட்டம் கொடுப்பதில் மகத்தான கட்சி
புரட்சி நடிகர், இலட்சிய நடிகர், தளபதி என மகத்தான பட்டங்களை அதுதான் அறிமுகபடுத்தியது
பின்னாளில் அது அதிமுகவாக பரிணமித்தபொழுது புரட்சி தலைவன், தலைவி, என வந்து பின் சின்னம்மா, திராவிட செல்வன் என்றெல்லாம் வந்து நிற்கின்றது
திமுக இளம் கலைஞர் , இரண்டாம் கலைஞர் என்பதோடு நிறுத்திகொண்டது
இன்று காணும் இம்சை பட்டங்களுக்கு எல்லாம் அன்றே தொடங்கி வைக்கபட்ட அடைமொழிதான் பேரறிஞர்
அவர்களாகவே பட்டம் கொடுத்து அவர்களாகவே மகிழ்ந்து கொண்டார்கள்