சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
இந்த சைமன், திருமுருகன் காந்தி, திருமாவளவன், சத்தியராஜ், வைகோ, பழ.நெடுமாறன் போன்ற இன்னும் சிலரை பிய்ந்த செருப்போடு தேடிகொண்டிருக்கின்றேன், கைவசம் கொஞ்சம் சாணியும் இருக்கின்றது
முதலில் அவர்களை பிடித்து முகத்தில் அறைய வேண்டும், அறைந்துவிட்டுத்தான் இந்த செய்தியினை சொல்ல வேண்டும்
என்ன நடந்திருக்கின்றது?
இலங்கையோடு நல்லுறவு கொள்ள டெல்லி முடிவு செய்து, ராஜபக்சே வந்து நாங்கள் தமிழர்களை கொல்ல யுத்தம் நடத்தவில்லை, அது பிரபாகரனின் முடிவு எனசொல்லி மோடி, மன்மோகன், ராகுல் எல்லோரையும் சந்தித்துவிட்டு சென்றாயிற்று
ஆம் இலங்கையின் அடுத்த அதிபர் அவர்தான் என்ற வகையில் ராஜபக்சேயின் டெல்லி வருகை கவனம் பெற்றது
இந்நிலையில் டெல்லி அடிமையான தமிழக அரசிடமும் இலங்கையிடம் சமாதானமாக போகவேண்டும் புரிகின்றதா? என்ற கண்சிமிட்டல் டெல்லியில் இருந்து வந்திருக்கின்றது
அவர்கள் காலால் இட்ட வேலையினை தலையால் செய்துமுடிக்கும் தமிழக அரசு சும்மா விடுமா?
தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் , சைதை துரைசாமி, MGR பல்கலைக் கழக அதிபர் ஏ.சீ. சண்முகம் மற்றும் குழுவினர் இலங்கை வந்துள்ளனர்.
பல ஆண்டு காலத்துக்கு பின்னர் இவர்கள் அரச விருந்தினர்களாக இலங்கை வந்துள்ளனர்
கொழும்பு சென்றுவிட்டு அரச நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துவிட்டு பின்பு கண்டிக்கு சென்றுள்ளனர்
கண்டிக்கு எதற்கு? புத்தரின் பல்லை பார்க்கவா? இல்லை இவர்கள் பிதாமகன் ராமசந்திரன் பிறந்த இடத்தை பார்த்து பல்லை காட்டுவதற்கு
இப்படியாக இலங்கையினை சுற்றி சுற்றி வந்து சிங்கள அரசுடன் கைகுலுக்கி தோள்மேல் கைபோட்டு, பால்சோறு தின்று ஹாயாக பொழுதை போக்கி பரிசையும் வாங்கி சுற்றுகின்றார்கள்
இப்பொழுது இந்த ஈழ அழிச்சாட்டிய கும்பலை பிடித்து நாம் கேட்கும் கேள்வி இதுதான்
இலங்கைக்கு கப்பல் செல்லகூடாது, கிரிக்கெட் அணி செல்ல கூடாது என சத்தமிட்டவனெல்லாம் எங்கே?
இலங்கைக்கு ரஜினி சென்றால் விடமாட்டோம் என கத்திய திருமா எங்கே?
இலங்கை அரசின் தமிழரை கொன்ற ரத்த பழிஉள்ளது அதோடு கைகுலுக்கினால் தமிழருக்கு செய்யும் துரோகம் என முழங்கியவன் எல்லாம் எங்கே?
போர்குற்றத்தில் சிக்கியுள்ள இலங்கை அரசோடு தமிழகத்தார் உறவுபாராட்டினால் விடமாட்டோம் என கொதித்த வைகோ எங்கே?
பூரா ஈழவியாபாரிகளின் திருட்டு முகமூடிகளும் கிழிந்து தொங்கும் நேரமிது
ஏண்டா டேய்
ரஜினி போக கூடாது, ஆனால் ஓவியா செல்லலாம் அதை தொடர்ந்து தமிழக அரசே இலங்கைக்கு செல்லலாம், சத்தமே எழுப்ப மாட்டீர்கள்
650 தமிழ்மீணவனை கொன்ற சிங்கள அரசோடு தமிழக அரசு கை குலுக்குகின்றது என் இப்பொழுது சொல்லுங்கள் பார்க்கலாம்
நல்லவர்கள் என்றால், மானமுள்ள தமிழ்பிள்ளைகள் என்றால் சொல்லுங்கள் பார்க்கலாம். சொல்லாவிட்டால் நீங்கள் எல்லாம் இனி மானம்கெட்டவர்கள் ஆவீர்கள்
அடேய் பதர்களா
இனி எவனாவது ஈழம்பற்றி வாயினை திறந்தால் அதன் பின்பு இருக்கின்றது
எப்படியோ இலங்கைக்கும் தமிழகத்திற்கும் தொடங்கிவிட்ட நல்லுறவு நிலைக்கட்டும்
சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்ற பாரதியின் வரிகள் நனவாகட்டும்
ஆக ராமசந்திரன், கலைஞர், ஜெயா எல்லாம் ஒடுக்க முடியாத தமிழ்போராளிகளை, யாரும் அவர்கள் முகத்தில் பூசமுடியாத கரியினை பழனிச்சாமி பூசியிருகின்றார்
தமிழகம் கண்ட தனிபெரும் முதல்வர் பழனிச்சாமி வாழ்க, கடல் கடந்தும் தன் இரும்பு கரங்களை நீட்டிய இரும்பு கையோன் பழனிச்சாமி வாழ்க
அடேய் ஈழ அல்ட்ராசிட்டிஸ், முன்பு கலைஞரை “இனதுரோகி ” என காய்ச்சியது போல இப்பொழுது பழனிச்சாமியினை “”இனதுரோகி ” என காய்ச்சுங்கள் பார்க்கலாம்?
இவ்வளவிற்கும் பழனிச்சாமி பச்சை தமிழன், தமிழனே தமிழகத்தை ஆளும் பொழுது இப்படி நடந்தால் அதுதான் “இன துரோகம்””
ஆக நீங்கள் இப்பொழுது இனதுரோகி பழனிச்சாமி ஒழிக என சொல்லி ஆகவேண்டும் இல்லாவிட்டால் ஒழுங்காக கலைஞர் சமாதியில் மன்னிப்பு கேட்டுவிட்டு இனியாவது திருந்துங்கள்
இனியும் வாய்திறப்பீர்கள்? ரஜினி உங்களை எல்லாம் பார்த்து பரிதாபமாக சிரிப்பது கேட்கின்றதா இல்லையா?
மானமிருக்கின்றதா? இன்னுமா உயிரோடு இருக்கின்றீர்கள்??




