சிதறல்கள்
கல்விக்கொரு தெய்வமுண்டு
அவளருள் கம்பனுண்டு
செல்வத்திற்கோர் தெய்வமுண்டு,
பெரும்செல்வர் பலருண்டு
வீரத்திற்கோர் தெய்வமுண்டு
வீராதி வீரருண்டு
அழகுக்கோர் தெய்வமேது?
அவளருள் பெற்றோர் உண்டோ?
மனக்குறை பட்ட கடவுள்
மனதார துடித்திட்டான்
மேனகை ரம்பை என
படைத்து பார்த்திட்டான்
ஆனாலும் முழு அழகில்லை
என்றே உணர்ந்திட்டான்
அழகிற்கோர் படைப்பு
உருவாக்க முனைந்திட்டான்
அதுவரை படைத்த
அழகெல்லாம் கொட்டி
புதிதாய் பல வண்ணம் கலந்தே
இதுவரை இல்லா ஓவியமாய் வரைந்தே
மதுவிலும் இனிதாய் படைத்தே எடுத்தான்
மங்கையர் விளக்கே,
மரகரத சிலையே
பூவையர் வியக்கும்
முக்கால அழகே
பூலோக நாளேல்லாம்
புகழால் நிலைப்பாய்
அழகென்னும் சொல்லுக்கு
தெய்வமாய் ஜொலிப்பாய்
என்றே சொல்லி அனுப்பிய நாளிது
பொன்நிகர் தெய்வம் அடிவைத்த நாளிது
மண்ணோர் எல்லாம் மகிழும் நாளிது
தேவதை ஒன்று தோன்றிய நாளிது
மாசறு பொன்னே,
வலம்புரி சங்கே
உயிர்பெற்று வந்த
ரத்தின சிலையே
தங்க கோபுரமே,
மங்கா விளக்கே
வாழ்த்துக்கள் கோடி
இந்நன்னாளிலே
மங்கா செல்வமும்,
குன்றா வளமும்
மனம்நிறை மகிழ்வும்
என்றும் களிப்பும்
என்றும் ஏற்றமும்,
எங்கும் செல்வாக்கும் பெற்று
வாழிய தாயே, வாழிய பல்லாண்டு
ஆலய மணிகள் கோடி முழங்க
அழகு பூக்கள் ஆயிரம் மலர
கடலும், தென்றலும் இனிதாய் பாட
கடவுளும் தூதரும் பூமாலை கொட்ட
சூரியன் உன்பெயர் சொல்லி உதிக்க
ஆலயமணிகள் உனக்காய் முழங்க
கடலலை உன்பெயர் சொல்லி கத்த
புள்ளினம் உன்பெயர் பாடி வர
வாழ்துக்கள் கோடி பிரார்தனைகள் கோடி
வாழட்டும் பொன்மகள் ஆளட்டும் கலைமகள்.
வாழ்வாய் வாழ்வாய் அழகின் பிறப்பே
ஆள்வாய் ஒருநாள் அவனியை நீயே
[September 28, 2018 ]

“செக்க சிவந்த நிலா” தலைவி குஷ்பு இல்லாததால் அந்த “செக்க சிவந்த வானம்” படத்தை சங்கமும் அதன் கோடான கோடி தொண்டர்களும் புறக்கணிக்கின்றார்கள்.
“ஏகாதிபதிய மணிரத்னமே, அடுத்த படத்தில் தலைவியினை காவிய தலைவியாக்கவில்லை என்றால் கடும் விளைவுகள் ஏற்படும்
நாங்கள் ஆணையிட்டால் உலகம் தாங்காது”
என்னதான் மணிரத்னம் தலைவியினை சந்தித்து பரிகாரம் தேடினாலும் சங்கம் தன் முடிவில் உறுதியாய் இருக்கின்றது
(தன் படத்தின் புரமோஷனுக்காக மணிரத்னம் குஷ்புவினை தேடி படமெடுத்திருக்கின்றார் என்றால் தலைவியின் அவரின் கோடான கோடி தொண்டர்களின் பலம் என்ன என அவர் உணர்ந்திருக்கின்றார் என பொருள்.)
[ September 28, 2018 ]

பரியேறும் பெருமாள் படம் இன்னும் பார்க்கவில்லை, ஆனால் சாதியின் கொடுமையினை மிக உருக்கமாக சொன்ன படங்களில் “பாரதி கண்ணம்மா” என்றுமே கிளாசிக்
அப்படி ஒரு வலியினை எந்தபடமும் சொல்லிவிட முடியாது
[ September 30, 2018 ]
============================================================================
பங்கு இந்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தை தடை செய்ய முயன்றது திமுக என அடுத்த போராட்டத்தை தொடங்கிவிடுவோமா? [ September 30, 2018 ]

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா – பிரபல பாடகி சுசீலாவுடன் பாட்டுப்பாடி அசத்த போகின்றார் அமைச்சர் ஜெயக்குமார்
அப்படியே சரோஜாதேவி, லதாவுடன் நடனம் எல்லாம் ஆடுவாரா என நாம் கேட்க கூடாது [ September 30, 2018 ]
============================================================================
கலைஞரால் கட்டபட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு ராமசந்திரன் பெயரை சூடியத்தற்கு முக ஸ்டாலின் கண்டனம்
ஆமாம் , வெள்ளையன் அமைத்த மவுன்ட் ரோடு முதல் இன்னும் அவன் தீட்டிய பல திட்டங்களுக்கும் , நிலையங்களுக்கும் அண்ணா பெயரை கலைஞர் இடுவார் , அதை எல்லாம் பற்றி நாம் பேசகூடாது
அப்படியே முன்பு ஒருமுறை ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு “சுதந்திர போராட்ட தியாகிகள்”, “நவீன தமிழக சிற்பிகள்” தம்பதியர் முத்துவேலர், அஞ்சுகம் பெயரை அப்பாவு சூட்டியபொழுது ஸ்டாலின் என்ன செய்தார் என்றெல்லாம் நாம் யோசிக்கவே கூடாது
இந்த மோடி பெயரையோ, எச்.ராசா பெயரையோ அந்த பஸ்நிலையத்திற்கு சூட்டாமல் போனார்களே அது வரை நாம் மகிழ வேண்டும் மிஸ்டர் ஸ்டாலின்
[ October 1, 2018 ]
============================================================================
அவங்க ரெண்டு பேரையும் சேகுவாரே, காஸ்ட்ரோன்னு சொல்றாங்க ஏன்?
அட இந்த அமெரிக்காகாரனுகளுக்கு இந்த இரண்டு பேரையும் பிடிக்காது அதனால இவங்க இப்படி சொல்றத கேட்டு அவங்களுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும்
அப்படியாண்ணே?
நீ வேணும்னா பாரு, ஜெயகுமாரை அமெரிக்கா அழைத்து விருது கொடுத்தாலும் கொடுக்கும், பின்ன இத விட எப்படி அவங்களை கேவலபடுத்த முடியும்?
அண்ணே எனக்கொரு சந்தேகம்ணே
என்னடா?
இவங்க சேகுவாரா, காஸ்ட்ரோன்னா டிடிடிவி தினகரன் அமெரிக்க சிஐஏ யாண்ணே??
அதெல்லாம் தங்க தமிழ்செல்வன் ஏரியாடா, அவங்க பார்த்துபாங்க..
[ October 1, 2018 ]

திடீரென உடல்நிலை மகா மோசமாகிவிட்டது, மூன்று நாளாக கடும் ஜூரம்
எல்லாம் தலைவியின் பிறந்தநாளில் அவருக்காக உபவாசமிருந்து பிரார்த்தித்ததால் வந்த சிக்கல்
இன்னும் சரியாகவில்லை, சரி ஆவதாகவும் தெரியவுமில்லை என்ன செய்யலாம்? தாங்கித்தான் ஆகவேண்டும்
நண்பர் ஒருவர் “கட்டிங்” அடித்தால் சரியாகிவிடும் என்றார், ஆனால் கடந்த வாரம் கள்ள சரக்கு குடித்ததில் மலேசியாவில் பலர் பலியானதால் நல்ல சரக்கும் தட்டுப்பாடு
அது குடித்ததால் 55 பேர் செத்தார்களாம், இப்பொழுது சரக்கு கிடைக்காமல் சாவோர் எண்ணிக்கை அதைவிட அதிகமாக இருக்கும் போலிருக்கின்றது அப்படி ஆலாய் பறக்கின்றார்கள்
விரைவில் மீண்டெழ முடிந்தவரை பார்க்கின்றேன், ஆனால் ஜூரம் நம்மை விடுவதாக இல்லை
நம்மை ஏன் அதற்கு அப்படி பிடித்திருக்கின்றது என தெரியவில்லை, மருத்துவத்திற்கு கட்டுபடாததால் இது மாய வேலையாக இருக்கலாம் என மந்திரவாதியினை கேட்டால் அவர் இப்படி சொல்கின்றார்
தம்பி எல்லாம் வயிற்றேரிச்சல் பிடித்த இருவர் செய்து வைத்த சூனியம், தலைவி பிறந்தநாளன்று நீ வெளிவரவே கூடாது என செய்திருக்கின்றார்கள், அவர்கள் இரண்டு பேர் என்றார்
இந்த பிரண்ட்ஸ் வடிவேலு போல, ஆமா பாஸ் அவங்க இரண்டு பேர் என சொல்லிவிட்டேன்
யார் அவர்கள்
இந்த குஷ்பு சங்கம் பிடிக்காத Babu Rao என்பவரும் , Chandran Kannan எனும் கிராதகர்களே அவர்கள்
அடேய் தலைவி நந்தினியில் வருவது போல வந்து உங்களை என்ன செய்கின்றார் என்றுமட்டும் பாருங்கள் [ October 1, 2018 ]
============================================================================