அற்புத மனிதர் வள்ளலார்

தமிழகத்தில் எப்பொழுதாவது அற்புதமான மகான்கள் தோன்றுவார்கள், அப்படி தோன்றிய அற்புத மனிதர் வள்ளலார்

தத்துவத்தில் அவர் புத்தர், போதனையில் இயேசு கிறிஸ்து, வாழ்க்கையில் அவர் விவேகானந்தர், பசித்தவருக்கு உணவழிப்பதில் அவர் குருநாணக் என எல்லோர் கலவையும் அந்த மகானிடம் இருந்தது

சுருக்கமாக சொன்னால் எல்லா மதத்தின் மிக உயர்ந்த கருத்துக்களும் கலந்து பிறந்த அவதாரம் அவர்

இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது.

உலகின் எல்லா உத்தம போதனைகளும் அதில் அடக்கம்

இன்று உலகம் மாறிவிட்டது, உலகில் எங்கோ ஒரு மூலையில் விளையும் உணவுபயிர் நொடிப்பொழுதில் எங்கும் சென்று சேர்கின்றது

ரசாயாணமோ எதுவோ கொட்டி விளையவைத்துவிடுகின்றோம்

அக்காலம் அப்படி அல்ல, கொஞ்சம் தான் விளையும் , அரைவயிறுதான் நிறையும், அதுவும் பொய்த்துவிட்டால் ஊரை விட்டு கிளம்ப வேண்டியதுதான்.

பசியில் உணவுக்காக அலைவது கொடுமையிலும் பெரும் கொடுமை, அக்காலத்தின் மிக பெரும் அவலம் அது.

பிறர்நலனுக்காகவும், மானிடரை நேசிக்கும் அற்புத பிறவிகள் இதனால்தான் உணவுசாலைகளை உண்டாக்கினார்கள்

இயேசு தன் மக்களுக்கு எல்லாம் உணவளித்த சம்பவம் பைபிளில் உண்டு

பஞ்சாபில் அப்படித்தான் குருநாணக் உருவாக்கினார், இன்றளவும் குருத்வாராக்கள் பசி போக்குவது அப்படித்தான்.

தமிழகத்தில் அந்த பசிபோக்கும் திட்டத்தை வள்ளலார் 
தொடங்கினார், அது இன்றளவும் நடக்கின்றது

பெரும் ஆண்மீக வாதிதான் ஆனால் முற்போக்காளர், இவர் காலத்தில் யாழ்பாணத்தில் ஆறுமுக நாவலர் என்றொருவர் இருந்தார், இன்றளவும் அவருக்கு அங்கு பெரும் பெயருண்டு

மதம் தொடர்பாக வள்ளலார் மீது வழக்கே தொடர்ந்தார் நாவலர், பின் அது தள்ளுபடியாயிற்று

இப்படி மதத்திற்குள்ளே எதிர்ப்பிருந்தாலும் தன் வழியில் நின்றவர்.

பெரும் புரட்சிவாதியும், அவதாரம் என நம்ப்படும் அய்ய வைகுண்டரும் இவரும் சமகாலத்தவர்கள், இருவரின் போதனையும் உருவமில்ல்லா கடவுளை சொன்னது, மனித நேயத்தை சொன்னது, பசி போக்க சொன்னது.

தமிழக ஆண்மீக உலகிலும், மானிட நேயத்திலும் மிக உயர்ந்து நின்ற பேரோளி வள்ளலார், மற்ற மகான்களை விட ஒருபடி மேலே நின்று “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என சொன்னவர்.

வாழ்த்தி சொல்லவேண்டுமென்றால் “மகா மகா ஆத்மா” அவர்.

அந்த அற்புத மகானுக்கு இன்று பிறந்த நாள்.

இந்துக்கள் எப்படி வாழவேண்டும் என இவர் சொன்ன வழியினைத்தான் பின்பு விவேகானந்தரும் சொன்னார். ஆனால் விவேகானந்தரை கொண்டாடும் அளவிற்கு வள்ளலாரை இந்தியா முழுக்க தெரியாது.

அய்யா வைகுண்டவரையும் தெரியாது.

வடக்கே உள்ளவர்களை இங்கே பிரபலபடுத்தும் அளவிற்கு தேற்கே உதித்த மகான்களை வடக்கே கொண்டு சேர்க்கமாட்டார்கள் அல்லது விடமாட்டார்கள்.

இவை எல்லாம் களையபட வேண்டும், களையபடாமல் இந்து எனும் வார்த்தையாலும் இந்தியாவில் பெரும் ஒற்றுமை கொண்டுவர முடியாது.

இந்து மதத்தின் மிக உன்னத கொள்கைகளை தன் வாழ்வாக கொண்டு உயர்ந்து நின்ற மகான் வள்ளலார்

அவருக்கு இன்று பிறந்த நாள், அவரை போற்றி வணங்குவோம்

தமிழகம் விடுமுறை விட்டு கொண்டாடவேண்டிய தினம், அடுத்தவர் பசிபோக்கி மானிட நேயம் வளர்க்கவேண்டிய தினம்

மக்கள் மறந்துவிட்ட அவரை வானம் மறக்கவில்லை, இன்று மழைக்காக தமிழகத்தில் விடுமுறை தினமாம்

“வாடும் பயிரை கண்டபொழுதெல்லாம் வாடிய” அந்த மகானை மிக சரியாக நினைவு வைத்து அவர் பிறந்தநாளில் எல்லா பயிருக்கும் நீர் இறைக்க மேகம் கறுத்து நிற்பது ஒன்றும் சாதாரண விஷயமல்ல‌

பசிபோக்க வந்த அந்த மகானுக்கு ஆழ்ந்த அஞ்சலி. [ October 5, 2018 ]

Image may contain: one or more people