சிதறல்கள்
காலையிலே பிரகாசமாக இருப்பது சூரியனும் தலைவி முகமுமே….
[ October 9, 2018 ]
============================================================================
திரைதுறையில் பாலியல் குற்றசாட்டுக்கள் வருவது புதிதல்ல, வராமல் இருந்தால்தான் ஆச்சரியம். அங்கிருக்கும் பலவாறான சூழல்களும், இன்னும் பல விஷயங்களும் அதற்கு துணைபோகின்றன
விஷயம் இதுகாலம் நடிகர்கள்மேல் இன்னபிற கலைஞர்கள் மேல் இருந்தது, இப்பொழுது கவிஞர்கள் மேலும் திரும்பி இருகின்றது
பொதுவாக ரசனை மிகுந்தவர்கள் கவிஞர்கள், அழகில் மயங்கும் மனம் அவர்களுடையது சந்தேகமில்லை
ஆனால் மேக் அப் இல்லாத நடிகைகளை பார்த்ததால் என்னவோ இதுவரை கவிஞர்கள் மேல் பெரும் குற்றசாட்டுக்கள் எழவில்லை
மதுவும் மாதுவும் என் இரு கண்கள் என வாழ்ந்த கண்ணதாசனே அம்மாதிரி சர்ச்சையில் சிக்கவில்லை, நடிகையினை மேக் அப் இன்றி பார்க்கும் தைரியம் எனக்கில்லை என அவரே சொன்னார்
அப்படிபட்ட தமிழ் திரையுலகில் இப்பொழுது வைரமுத்து மேல் சில சர்ச்சைகள் வருகின்றன, மனிதர் எப்படி எதிர்கொள்ள போகின்றார் என்பத்தான் தெரியவில்லை
அண்ணாவும் , கண்ணதாசனும் மிக தைரியமாக எதிர்கொண்டவர்கள். வைரமுத்து எப்படி எதிர்கொள்வாரோ தெரியவில்லை
ஆனால் கம்பன் முதல் ஏராளமான கவிஞர்கள் இப்படித்தான் இருந்து தொலைத்திருக்கின்றார்கள் என்பது கவிஞர்களுக்கே உரித்தான ஒருவகை சாபம்.
[ October 9, 2018 ]
============================================================================
ஆளுநர் கன்னத்தை கிள்ளினார் என பொங்கிய கூட்டத்தில் ஒரு பயலையும் இப்பொழுது காணவில்லை
திராவிடன் என்றால் யார் கன்னத்தையும் கிள்ள இங்கு அனுமதிக்கபட்டிருக்கின்றது போல.. [ October 9, 2018 ]

ஆட்டோ சங்கர் போலவே எல்லோரையும் நினைத்து எழுதி குவித்த பத்திரிகை நக்கீரன்
ஒரு விஷயத்தை வெளிகொண்டு வருகின்றோம் என சொல்லி ஆயிரம் ஆதாரமில்லா செய்திகளையும் கொண்டு வருவார்கள்
சந்தண வீரப்பனை ஆயிரகணக்கான போலிசார் செத்து செத்து தேடிகொண்டிருக்க இவரோ பின் வாசல் கதவு வழியாக பார்ப்பது போல் சர்வ சாதாரணமாக பார்த்து கொண்டிருந்த காலமும் உண்டு, அதற்கு ஜெயா பதிலடி கொடுத்த காலமும் உண்டு
இப்பொழுது ஆளுநர் பற்றி சில செய்திகளை வெளியிட்டு சிக்கி இருக்கின்றது நக்கீரன் பத்திரிகை
எப்படியோ பத்திரிகை சுதந்திரம் காக்க இனி பலர் கிளம்புவதும், பெரும் போராட்டங்களும் காண தமிழகம் தயாராகின்றது [ October 9, 2018 ]
============================================================================
நக்கீரன் கோபாலை சந்திக்க கோரி கலிங்கபட்டி கோபால் தர்ணா செய்த காட்சி
ஒரு புலிபிம்ப பத்திரிகைக்கு ஒரு கழுதை புலி இந்த ஆதரவு கூட கொடுக்காவிட்டால் எப்படி?
கலிங்கபட்டி கோபாலை அடுத்த செல்லில் போடுதல் நலம்.
[ October 9, 2018 ]

உடன்பிறப்பே
நக்கீரன் பத்திரிகை அப்படி என்ன தேசதுரோகம் செய்தது? அதனால் இந்நாட்டுக்கு என்ன ஆபத்து வந்தது?
ஆபத்து தமிழக அரசுக்கு வந்தது, கவர்ணர் மாளிகைக்கு வந்தது, அதன் பெயர் தேசவிரோதமாம், விந்தையாக இல்லை. இடி அமீன்கள் ஆட்சியின் அலங்கோலமிது முசோலனிகள் ஆட்சியின் முணுமுணுப்பு இது
உடன்பிறப்பே, பெரியார் அண்ணா தொடங்கி என் 80 வருட அரசியல் வாழ்வினை எண்ணி பார்க்கின்றேன். ஒன்றா இரண்டா நம்மை பற்றி எழுதினார்கள்?
சாதாரண விசாரணைக்குள், அதுவும் சர்காரியா நம்மீது குற்றம் இல்லை என சொன்னபின்பும் எப்படி எல்லாம் எழுதி குவித்தார்கள்?
தனிபட்ட முறையில் எனக்குத்தான் எத்தனை மனைவிமார்களை இப்பத்திரிகைகள் கட்டி வைத்தன, தசரதனை விட எனக்கு அதிக மனைவிகள் கணக்கினை அவை காட்டின
அதன் பின்னும் ஒன்றா இரண்டா? எழுதினால் ஏடு தாங்குமா?
எல்லோரையும் சாதாரண கண்ணாடியோடும், திமுக என்றால் மைக்ராஸ்கோப் எனப்படும் நுண்ணோக்கி மூலமும் பார்த்துகொண்டிருந்த உலகமிது
உதாரணத்திற்கு ஒன்றை சொல்கின்றேன், அந்த அலைகற்றை ஊழல் என ஒன்று வந்ததே நினைவிருக்கின்றதா?
எப்படி எல்லாம் எழுதினார்கள்? எண்ணி வைத்தால் சனிகிரகம் வரை நீளும் பணம் எல்லாம் நாம் சுருட்டினோம் என்றார்கள். உலகின் மிக பெரும் ஊழல் அதுதான் என்றார்கள்
கண்மணி ராசா கப்பல் கப்பலாய் கொண்டுவந்ததாகவும் நானும் கனிமொழியும் எண்ணமுடியாமல் எண்ணி உலக சொத்துக்களை எல்லாம் வாங்கியதாகவும் கதை அளந்தார்கள்
அன்றெல்லாம் எந்த பத்திரிகை எழுதவில்லை? எல்லோரும் எழுதினார்கள், அவரவர் கற்பனாசக்திக்கு எட்டியபடி எழுதினார்கள்
நாம் வழக்கு தொடுத்தோமா, சிறை வைத்தோமா? இல்லை மிரட்டினோமா? உன்னால் இத்தேசத்திற்கு ஆபத்து என சிரிக்காமல் சிறை எடுத்தோமா?
இல்லை, ஒருகாலுமில்லை
இன்று தம்பி கோப்பாலுக்காக முதல் குரல் நம் இயக்கத்தின் தலைவரிடம் இருந்து வந்திருக்கின்றது. அதை நினைத்து அண்ணாவோடு சேர்ந்து நானும் இந்த இடத்திலிருந்து மகிழ்கின்றேன் பெருமைபடுகின்றேன்
அதிகாரம் கையில் இருப்பவர்கள் எப்படி எல்லாம் ஆடுகின்றார்கள் என்பதையும், எத்தனையோ முறை அதிகாரம் கையில் இருந்தும் நாம் அமைதி காத்தோம் என்பனையும் தமிழகம் இந்நேரத்தில் நினைவு கூறல் வேண்டும், திமுகவின் மாண்பினையும் பத்திரிகை உலகிற்கு அது கொடுத்த சுதந்திரத்தினையும் இனியாகிலும் தமிழ் கூறும் நல்லுலகம் புரிந்திடல் வேண்டும்
தமிழகத்து பாட்டாளி முதல் பத்திரிகையாளர் குரல் வரை காக்கும் ஒரே இயக்கம் திமுக என்பதை தமிழர்கள் புரிந்துகொள்ளும் நேரமிது உடன்பிறப்பே
உன்னை போலவே, தமிழகமும் நம்மையும் நம் இயக்கத்தையும் முழுக்க புரிந்துகொள்ள, அதன் மூலம் தமிழர் நலனை காத்து நிற்க களத்தில் இச்செய்தி எல்லாம் கொண்டு சென்று பகைவிரட்டுவாய், இனம் காப்பாய் அடலேறே..”
[ October 9, 2018 ]

மன்னார்குடி குடும்பத்தை நக்கீரன் கிழித்த கிழி கொஞ்சமல்ல, அவர்களின் முகத்திரை அகத்திரை எல்லாம் அது கிழித்து தொங்கவிட்ட அளவு இன்னொரு பத்திரிகை இல்லை
தினகரன் இப்பொழுது ஆனந்த கண்ணீர் விட்டுகொண்டிருக்கின்றார், அதன் பெயர் தைரியம், கெத்து என அறியாத பதர்கள் சொல்லி கொண்டிருப்பதுதான் ஆச்சரியம்
உண்மையில் தினகரன் இந்த சிகப்பு ரோஜாக்கள் கமல் போல “குத்துங்க எசமான் குத்துங்க..” என வெறுப்பிலும் பதற்றத்திலும் சொல்வதுதான் நிஜம்
{ October 9, 2018 ]
============================================================================
நக்கீரன் கோபால் கைதில் மிக முக்கிய திருப்புமுனையினை ஏற்படுத்தியிருப்பவர் இந்து ராம் அவர்கள்
அவர் நீதிமன்றத்தில் புகுந்து வைக்க வேண்டிய கருத்துக்களை வைத்தபின் நீதிபதியின் வேலை எளிதானது, கோபால் விடுவிக்கபட்டார்
இந்த பிராமணர் தமிழர் எதிரி, பிராமணர் எல்லாம் அயோக்கியர் என சொல்லும் கும்பல்கள் எல்லாம் இப்போது வாய்திறக்குமா என்றால் இல்லை, நிச்சயம் இல்லை
இந்த ராம் என்பர் பிராமணர், ஆனால் எதை எதிர்க்க வேண்டும் எதை ஆதரிக்கவேண்டும் என்ற ஊடகதர்மம் மிக்கவர் என்பதில் சந்தேகமில்லை
கொள்கை ரீதியாக நக்கீரனுக்கும் இந்துவிற்கும் பொருந்தாது, இந்து ஒரு தேசாபிமான பத்திரிகை நக்கீரன் திராவிட வட்டத்தை தாண்டாது
ஆனாலும் பத்திரிகை சுதந்திரம் பொதுவானது என தானே களமிறங்கிய இந்து ராம் பாராட்டுகுரியவர் சந்தேகமில்லை
முன்பு புலிகளை எதிர்த்தார் என்பதற்காக அவரை பிராமண வெறியன் என வசைபாடியவர்களும், இன்னும் சில இடங்களில் “மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு” என பேசியவர்கள் எல்லாம் இப்பொழுது கனத்த அமைதி
பிராமண வெறுப்பு என்பது களையபட வேண்டியது என்பதையும் அது பிழைப்புவாதம் என்பதையும் நேற்றைய சம்பவம் அறுதியிட்டு காட்டியிருக்கின்றது [ October 10, 2018 ]

“ஏம்பா நாங்க சொல்லித்தானே அனுப்பினோம், தமிழ்நாடு ஒரு மாதிரி, ஆனானபட்ட இந்திராவே அலறி அடிச்சு ஓடின இடம், கொஞ்சம் சூதானமா இருந்துக்கன்னா கேட்டியா? இப்போ பாரு ஒரு கேஸ் கூட ஒழுங்கா போடமுடியாமா அவமானமா போச்சு
ஒண்ணுமே புரியல தலைவரே, எங்க இருந்து அடிக்கிறாங்கண்ணும் தெரியல. ஆனா அடி மட்டும் பயங்கரமா இருக்கு
பின்ன நாங்கல்லாம் ஏன் ஒதுங்கி இருக்கோம், நம்மள கிறுக்கனாக்கி விட்டுருவாங்க அங்க உள்ளவங்க, பயங்கரமான ஆளுங்க.
என்னை இந்த கோவா, மேகலாயா மாதிரி இடத்துக்கு மாத்திவிடுங்க, முடியல
யோவ் கொஞ்ச நாளைக்கு இருய்யா, நீங்கல்லாம் பண்ற அக்கப்போர்லதான் இந்த பெட்ரோல் விலை , டாலர் பிரச்சினை எல்லாம் தமிழ்நாட்டுல மக்களுக்கு மறந்து போகுது, அதனால கொஞ்ச நாளைக்கு இப்படி வித்தை காட்டிட்டே இருங்க”
[October 10, 2018 ]

வடக்கே இருந்து வந்த “வந்தேறி” ஆளுநருக்கு பச்சை தமிழனை கைது செய்ய சொல்ல என்ன உரிமை, மானமுள்ள தமிழனே முதல்வராகவும் ஆளுநராகவும் வந்தால் இந்த சிக்கலுக்கு தீர்வு என ஒரு குரல் வருமா என நேற்று முழுக்க எதிர்பார்த்தால் ஒரு சத்தமும் அப்படி இல்லை
ஆக கலைஞர் முதல்வராக இருந்தால் மட்டும் வந்தேறி குரல் கேட்கும் போல
அங்கிள் சைமன் நீங்களுமா அமைதி, உங்கள் குருநாதர் பாரதிராஜாவுமா அமைதி
“வந்தேறி ஆளுநர்” பற்றி ஒரு கண்டனனும் இல்லையே ஏன்?
[ October 10, 2018 ]
============================================================================
ராஜிவிற்கு பின் ராகுல் வரவில்லையா? வடக்கே முலாயம்சிங் மகன் அகிலேஷ் வரவில்லையா? லாலு குடும்பத்தில் இல்லையா, காஷ்மீரில் இல்லையா? என இந்தியாவின் எல்லா வாரிசு தலைவர்கள் பெயரையும் சொல்லி அப்படித்தான் உதயநிதியும் வந்திருக்கின்றார் என மிக தீவிர முட்டுகொடுப்பில் சிலர் இறங்கி இருக்கின்றார்கள்
முட்டு கொடுக்கும் முன் வாரிசு அரசியலை கொண்டுவந்த கட்சிகள் நிலை என்ன என பார்க்க வேண்டும்
வாரிசு அரசியலால்தான் காங்கிரஸ் அதளபாதாளத்தில் கிடக்கின்றது, எதிர்கட்சியாக கூட அதற்கு எம்பிக்கள் இல்லை
அகிலேஷ் யாதவின் குளறுபடியால் பாஜக உபியில் மாபெரும் வெற்றி பெற்றது
ஆழ கவனித்தால் வாரிசு அரசியலால் எல்லா மாபெரும் கட்சியும் , எதிர்காலமிக்க எல்லா கட்சியும் அழிந்துதான் போனது, திமுகவிலும் அப்படி ஒரு நிலை வரவேண்டும் என பலர் விரும்புவது தெரிகின்றது
இவர்கள் நிச்சயம் பாஜகவின் ஸ்லீப்பர் செல்களாக இருக்கலாம்
[ October 10, 2018 ]

வடக்கே இருந்து வந்த “வந்தேறி” ஆளுநருக்கு பச்சை தமிழனை கைது செய்ய சொல்ல என்ன உரிமை, மானமுள்ள தமிழனே முதல்வராகவும் ஆளுநராகவும் வந்தால் இந்த சிக்கலுக்கு தீர்வு என ஒரு குரல் வருமா என நேற்று முழுக்க எதிர்பார்த்தால் ஒரு சத்தமும் அப்படி இல்லை
ஆக கலைஞர் முதல்வராக இருந்தால் மட்டும் வந்தேறி குரல் கேட்கும் போல
அங்கிள் சைமன் நீங்களுமா அமைதி, உங்கள் குருநாதர் பாரதிராஜாவுமா அமைதி
“வந்தேறி ஆளுநர்” பற்றி ஒரு கண்டனனும் இல்லையே ஏன்?
[ October 10, 2018 ]
============================================================================