சிதறல்கள்
பூஜை திருநாட்களையொட்டி எல்லா வீடுகளிலும் கொலு வைக்கின்றார்களாம், அதாவது அழகான பொம்மைகளை சிலைகளை வைத்து அலங்கரிக்கின்றார்களாம்
இந்த பொம்மையினை விடவா அழகான கொலு பொம்மை உலகில் உண்டு?
ஆனால் ஏனோ இந்த பொம்மையினை யாரும் வைக்கவில்லை என தகவல்கள் சொல்கின்றன, பெரும் விசித்திரம் இது
இம்முறை சங்கத்தார் வீடுகளில் கொலுவில் இந்த பொம்மை இருந்தாக வேண்டும் என சங்கம் வலியுறுத்துகின்றது,
சங்கத்து செயலாளர் Periya Samy அவர்கள் வீட்டில் இந்த அழகிய பொம்மை முதன் முதலாக கொலு மேடையினை அலங்கரிக்க போகின்றது

மிஸ்டர் மீசை கோப்பால், இந்த வைரமுத்து மேல் வரும் புகார் பற்றி எல்லாம் கவர் ஸ்டோரி எழுத மாட்டீரா?
அதாவது திமுக, திமுகவின் அனுதாபி என்றால் நீர் எழுதவே மாட்டீராம், வேறு கட்சி என்றால் விழுந்தடித்து எழுதுவீர் என்கின்றார்களே உண்மையா?
திமுக அனுதாபிகள் என்றால் மூன்றாம் கண்ணை நக்கீரர் மூடிகொள்வாரா?
நடிகைகள் விவகாரம் என்றால் எண்ணெய் வயல் கண்ட அமெரிக்காவாக பறக்கும் நக்கீரன், வைரமுத்து என்றால் புட்டீனை கண்ட டிரம்பாக பம்முவது ஏன்?

ஆளாளுக்கு “மி டூ” #Metoo என கிளம்புகின்றார்கள், இந்த பெண்களின் அட்டகாசம் அளவுக்கு மீறி செல்கின்றது
ஆனால் தமிழக நிலை என்ன?
ஒரு பெண்ணை ஆளவைத்து, அவர் அருகில் ஒரு பெண் அமர்ந்து தமிழ்நாட்டினை பாடாய்படுத்தி அந்த கொடூரம் இன்றுவரை தொடர்கின்றது
எவ்வளவு ஆட்டம்? எவ்வளவு சுருட்டல்? எவ்வளவு பெரும் சீரழிவுகள்
இன்றைய மகா காமெடி அரசு அவர்களால் வந்து தொலைத்தது, இதனால் தமிழகமும் அதன் மக்களும் படும்பாடு கொஞ்சமல்ல
மொத்த தமிழகமும் “நாங்களும் பாதிக்கபட்டோம், பெண்களால் பாதிக்கபட்டோம்” #Wetoo என கிளம்ப வேண்டிய நேரமிது
[ October 10, 2018 ]


1972ல் இதே நாளில்தான் திமுகவில் இருந்து நீக்கபட்டார் ராமசந்திரன்
கலைஞருக்கு எதிரான அஸ்திரமாக ராமசந்திரன் இந்திராவினால் ஏவபட்ட நாள் இது, தன் வாழ்வின் மிகபெரும் பிழையாக கலைஞர் அந்த காரியத்தை செய்த நாள் இது
பாகிஸ்தானை பிரிய விட்டிருக்க கூடாது எனும் இந்தியாவின் பெரும் தவறு போல நிச்சயம் ராமசந்திரனையும் நீக்கி இருக்க கூடாது
இதயகனி என்றார்கள், முகம் காட்டினால் போதும் என்றார்கள் இப்படி எல்லாம் அவரை வளர்த்துவிட்டு நுனி கிளையில் இருந்து அடிகிளையினை வெட்டினார்கள்.
கட்சி உடைந்ததில் இருவருக்கும் சமபங்கு உண்டு, இருவரின் சுயநலத்திலே அது உடைந்தது
பெரியாரே மன்றாடியும் ராமசந்திரன் இறங்கிவரவில்லை
விளைவு இன்றுவரை தமிழக சோகம் தொடர்கின்றது
ஆனால் யானை தடம் தப்பியது போல தடுமாறிய கலைஞர் பின்பு கட்சிகளை இணைக்க விரும்பினார், பல நடவடிக்கைகளை எடுத்தார், அப்பொழுது இணைப்பு பற்றி விரும்பாமல் ஓடியது ராமசந்திரனே
இதில் ஒரு விசித்திரம் உண்டு
ஆனால் கட்சி கணக்கு வேண்டும் என கேட்டு கட்சி தொடங்கிய ராமசந்திரனின் கட்சி கணக்கும் கட்சிக்காரர் கணக்கும் இன்றுவரை தெரியாது
அப்படி ஒரு சவாலால் கட்சியே உடைந்தபின்னும் திமுகவின் சொத்து கணக்கும், கட்சிக்காரன் கட்சி கணக்கும் இன்றுவரையும் தெரியாது
இதெல்லாம் பற்றி நாம் பேச கூடாது, அரசியலில் இதெல்லாம் சகஜம்
[ October 10, 2018 ]

ஆமா.. நா தெரியாமத்தான் கேக்குறேன், இங்க எவ்வளவோ ரெய்டு நடந்து, குட்கா ஊழல் கூட அமைச்சர் மேல வந்திச்சி, முதலமைச்சர் மேல கூட வழக்கு வந்திச்சி. அப்ப்பொல்லாம் கம்முண்ணு இருக்குற நீங்க, இந்த நிர்மலா தேவின்னா மட்டும் ஏன்யா பொங்குறீங்க?
ஊழல் ஊழல்னு முக ஸ்டாலின் கத்துனா கண்டுக்கவே மாட்டீங்க, ஆனா நிர்மலா தேவின்னா மட்டும் ஏன் அலறுறீங்க?
ஏற்கனவே சம்பவம் வெளிவந்த நேரம் ஒரு கமிஷன் போட்டு அறிக்கையினை நீங்களே வாங்கிட்டீங்க, இப்போ நக்கீரன்ல எழுதிட்டான்னு மறுபடியும் கைது அளவுக்கு போயிட்டீங்க
வேற ஒரு விஷயத்திலியும் வேகமில்ல, நிர்மலா விவகாரம்னா ஏன்யா இப்படி கால்ல வெந்நீர் ஊத்துனமாதிரி பறக்குறீங்க, யாருக்கும் ஒண்ணும் சரியாவே படவில்லை, என்னமோ போங்க..” [ October 10, 2018 ]


ஒரு விஷயம் உறுத்தி கொண்டே இருக்கின்றது
தமிழகத்தை காக்க ஒரே வழி இந்த சகாயத்தை ஆதரிப்பது என்றார்கள், அவர் போல் உத்தமர் இல்லை என சூடமேற்றி சத்தியம் செய்தார்கள். கலெக்டெருக்கு படித்த காமராஜர் என்றார்கள், ஏகபட்ட அலப்பறைகள்
அவரும் அதில் மகிழ்ந்தார், தமிழகத்தை காக்க போவது நானே என்றார்
உருப்படியாக ஏதும் செய்தாரா என்றால் இன்றுவரை இல்லை, அந்த கிராணைட் ஊழல்பற்றி விசாரித்தார் அறிக்கை எல்லாம் அனுப்பினார்
அது தூங்குகின்றது தெரிந்தததுதான். ஆனால் அறிக்கை தயார் செய்தவர் என்ற வகையில் அன்னாரிடமிருந்து ஒரு சத்தமும் வரவில்லை
சகாயத்திற்கு டிராபிக் ராமசாமி எவ்வளவோ பரவாயில்லை
போலி சகாயத்திற்கும் அவரின் அடிப்பொடி கும்பல்களுக்கும் முகமூடி கிழியும் நேரமிது
இன்னொரு பக்கம் பாருங்கள் தனி மனிதனாக கலக்குகின்றார் பொன் மாணிக்க வேல், எத்தனையோ எதிர்ப்புகள் வந்தாலும் அஞ்சாமல் அசரடிக்கின்றார்
சிலை திருட்டில் தொடங்கி இப்பொழுது ஆலயங்களே தரைமாக்கபட்டு வேலைபாடு அமைந்த தூண்கள் எல்லாம் கடத்தபட்டிருக்கின்றன என்ற அதிர்ச்சி தகவலை எல்லாம் வெளிகொணர்கின்றார்
எவ்வளவு மிரட்டல்கள்? எவ்வளவு சூழ்ச்சிகள் அத்தனையும் எதிர்த்து மனிதர் மிக பெரும் போராட்டம் நடத்துகின்றார்
ஆனால் ஒரு குரல் அவருக்கு ஆதரவாய் ஒலிக்கும்? எவனாவது அவர் அரசியலுக்கு வரவேண்டும் பொதுவாழ்விற்கு வரவேண்டும் என கிளம்புகின்றானா?
இல்லை
காரணம் சகாயம் கிறிஸ்தவர், பொன்மாணிக்க வேல் இந்து என்பது அன்றி வேறு காரணம் இருக்க முடியாது
ஆக தமிழகத்தை யார் ஆளவேண்டும் என வேறுயாரோ முடிவெடுத்து இங்கு சிலரை அடையாளம் காட்டுகின்றார்கள் என்பது தெரிகின்றது, அதற்கு மதிமயங்கிய கூட்டமும் பின் செல்கின்றது
எம்மை பொறுத்தவரை சகாயத்தை விட பொன்மாணிக்க வேல் ஆயிரம் மடங்கு சிறந்தவர், அவரை போன்றவர்கள் அரசியலுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை மிக சிறந்த முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகள் அவருக்கு கொடுக்கபட வேண்டும்
கிரானைட்டில் கள்ள மவுனம் காக்கும் சகாயத்தை விட கலையழகு பொக்கிஷங்களுக்காக பெரும் போராட்டம் நடத்தும் பொன்மாணிக்கவேல் நிச்சயம் உயர்ந்தவர்
அவரை அறநிலையத்துறை நிரந்தர பொறுப்பாளராக நியமித்தாலே அது மிகபெரும் நற்காரியமாகும்
பொன்மாணிக்கவேலுக்கு ஆதரவளித்து அவரை உற்சாகபடுத்தி அவர் இன்னும் செயற்கரிய சாதனைகளை செய்ய, தமிழர் அடையாளங்களை மீட்டெடுக்க துணை நிற்பது ஒவ்வொரு தமிழனின் பொறுப்பும்
கடமையாகும் [ October 10, 2018 ]


“யார் செஞ்ச புண்ணியமோ நம்ம காலத்துல இந்த “மீ டூ” இம்சை எல்லாம் இல்லை
இருந்தால் என்ன ஆயிருக்கும்.. அம்மா, நினைத்தாலே உடலெல்லாம் நடுங்குகின்றதே.
அண்ண்ணா…………..
நல்ல வேளை நான் பிழைத்துகொண்டேன்..”
