கில்லாடி கிளைவ் 12

கில்லாடி கிளைவ் 12

உண்மையில் இந்திய வரலாற்றை மாற்றியவன் யாரென்றால் அந்த மீர்ஜாபர், மிக பெரும் பேராசைக்காரனும் அதே நேரத்தில் மகா தந்திரகாரனுமாகவும் இருந்தான்
நவாபின் படையில் இருந்து கொண்டே கிளைவுடன் தொடர்பில் இருந்து, பின் யுத்தத்தில் கிளைவுடன் வருவதாக உறுதியும் சொல்லிவிட்டு கடைசியில் படையினை கலைத்துவிட்டு இருவருக்கும் பொதுவாக இருந்து கொண்டான்
நவாபினை தப்பி ஓடும்படி திட்டமிட்டு கொடுத்தவனும் அவனே, கிளைவிடம் சென்று தன்னை மன்னிக்கும்படி நின்றதும் அவனே
கிட்டதட்ட தமிழகத்து பன்னீர் செல்வத்தின் சாயல் அவனிடம் இருந்தது
மீர் ஜாபர் துரோகி என தெரிந்தாலும் வெளிகாட்டவில்லை கிளைவ், அவனுக்கு தேவை வங்கத்தில் தனக்கு தலையாட்டும் நவாப், இவனை நவாப்பாக்கிவிட்டு அவன் போக்கில் இருந்தாலும் மனம் நம்பவில்லை
அந்த ஓர்மிசென்ட் என்றொருவனை பார்த்தோமே நினைவிருக்கின்றதா? அவன் தன் பத்திரத்தோடு சபைக்கு வந்தான்
எந்த பத்திரம்?
வெள்ளை பத்திரம் ஒன்றை கிளைவ் மோசடியாகவும், சிகப்பு பத்திரம் ஒன்றை ஓர்மிசென்டிற்காகவும் எழுதினான் என பாத்தோமல்லவா? அந்த பத்திரத்தோடு வந்தான்
சபை கூடிற்று, தன் சிகப்பு பத்திரத்தை எடுத்து வாசித்தான் அதில் 3 லட்சம் பொன்னும் இன்னும் பல சலுகைகளும் இருப்பதாக எழுதபட்டு வாட்சன் முதலானோர் கையெழுத்தும் இருப்பதாக வாசித்துவிட்டு எப்பொழுது தரபோகின்றீர்கள் என்றான்
தர்க்கம் நீண்டது
“என்ன சொல்கின்றீர் ஓர்மிசென்ட், நாங்கள் ஒப்புகொண்டோமா?
ஆம் நீங்களே ஒப்புகொண்டு எல்லோரும் கையெழுத்து போட்டிருக்கின்றீர்கள் பாருங்கள்
இல்லை நாங்கள் சிகப்பு பத்திரத்தில் கையெழுத்து போடவே இல்லை, வெள்ளை பத்திரத்தில்தான் போட்டோம்
இல்லை இது மோசடி
எது மோசடி, நானும் சபையாரும் வாட்சனும் கையெழுத்திட்ட வெள்ளை பத்திரம் இதோ, 5 ஆயிரம் பொன்னுக்குத்தான் எழுதியிருக்கின்றொம் நீர் பொய் பத்திரம் வைத்திருக்கின்றீர்”
ஓர்மிசென்டுக்கு தலை சுற்றியது, ஆம் அப்படி ஒரு பத்திரம் தயாரித்தது கிளைவ் தவிர யாருக்க்கும் தெரியாது, வாட்சனே வெள்ளையில்தான் கையெழுத்திட்டார்
வசமாக தான் ஏமாற்றபட்டதை உணர்ந்த ஓர்மிசென்ட் அழுதான் புரண்டான்
கிளைவ் மெதுவாக சொன்னான், நீ வீரனென்றால் வீரத்தில் சந்திதிருப்பேன் நீ துரோகி, துரோகத்தால் சாய்த்தேன்
இதன் பின் ஓர்மிசெண் கிட்டதட்ட பைத்தியம் நிலைக்கு சென்றான் என்கின்றது வரலாறு, அவனும் என்ன செய்யமுடியும்? சதி ஆலோசனையினை சொல்லிவிடுவேன் என மிரட்டித்தான் காரியம் சாதிக்க எண்ணினான் , இனி என்ன செய்ய முடியும்? நவாபையே காணவில்லை
எண்ணி எண்ணி அழுது செத்தும் போனான் ஓர்மிசென்ட்
நிச்சயம் கிளைவ் செய்தது துரோகம் சந்தேகமில்லை ஆனால் துரோகிகளிடம் வாளா வீசமுடியும்? துரோகத்தால்தான் சரிக்க முடியும்
கிளைவிற்கு இந்தியர் மேல் மரியாதை ஏன் இல்லை என்றால் இம்மாதிரி ஆட்களால்தான்
பிரிட்டானியரின் அரச விசுவாசம் பிரசித்திபெற்றது, இன்றுவரை பிரிட்டன் அரச குடும்பத்தின் மீது மக்கள் கொண்டிருக்கும் அபிமானம் அப்படி
அரச விசுவாசம் என்பது ரத்தத்தில் கலந்தது, பின்னாளில் அகண்ட இந்தியாவினையே விக்டோரியா ராணி கேட்டவுடன் கொடுத்தது கம்பெனி
ஆனால் இந்தியர் நிலை?
மன்னனை சுற்றி ஒருவனும் விசுவாசமாக இந்தியாவில் இல்லை, பூராவும் சுயநலம். எங்கிருந்தோ வந்த தனக்காக வெறும் அதிகாரத்திற்காக அரசனையே காட்டி கொடுக்க இந்தியர் ரெடி
இதில்தான் அதுவும் மீர் ஜாபர், இந்த ஓர்மிசென்ட் போன்றோரை பார்த்தபின்புதான் நெல்லில் இருந்து உமி நீங்குவது போல் கிளைவின் இந்தியர் மீதான அபிமானம் கீழானது
இந்தியர் பதவிக்காகவும் அதிகாரத்திற்காகவும் எந்த இழி செயலையும் செய்வர் என மனமார நம்பினான், இந்திய ஆட்சியாளர்களும் அதை நிரூபித்தனர்
சிராஜின் கொடுங்கால் ஆட்சியே தான் இங்குகாலூன்ற வாய்பாயிற்று என கருதிய கிளைவ், நல்லாட்சி கொடுக்க தொடங்கினான்
வியாபாரமோ ஆட்சியோ ஆங்கிலேயர் நேர்மையானவர்கள், நாணயமானவர்கள் யாரையும் ஏமாற்றமாட்டார்கள் என்ற எண்ணம் மக்களிடம் ஏற்பட கடும்பாடுபட்டான்
அது வேலையும் செய்தது, வெள்ளையர் வங்க மக்களின் அனுதாபத்தை உடனே பெற்றனர்
மக்களுக்கு வசதி பெருக பெருக வெள்ளையர்களை அவர்கள் எதிரிகளாக கருதவில்லை கிளைவ் எதிர்பார்த்தது இதுதான்
இந்நேரம் இந்த மீர்ஜாபரின் நரிமூளை வேறுவிதமாக சிந்தித்தது
எப்படியும் இனி வெள்ளையர் நம்பக்கம் ஆனால் அடிபட்ட பாம்பான உத்தவ்லா சும்மா இருக்கமாட்டார், நிச்சயம் வந்து தன்னை நொறுக்குவார் என்ன செய்யலாம்?
தன் ரகசிய படையினை நவாபிடம் அனுப்பினான், அவர்கள் செய்தி சொன்னார்கள்
நவாபே மீர்ஜாபர் உங்கள் விசுவாசி, இப்பொழுதும் நாட்டை உங்களிடம் ஒப்படைக்க துடிக்கின்றார். அவர் ராஜதந்திரமாக வெளளையரிடம் நடிக்கின்றார், இப்பொழுது நீர் வரவேண்டும் வந்து அரியணையில் அமரவேண்டும் அதன் பின் கிளைவிற்கு இருக்கின்றது வேட்டு
நவாபும் அதை நம்பி சென்றான், மீர்ஜாபரை நம்பி சென்றான்
நம்பி வந்தவனை தன் வாளால் வெட்டி கொன்றான் மீர்ஜாபர்
அப்படி ஒரு மிக தந்திரமான மனமும் மூர்க்கமான குணமும் அவனிடம் இருந்திருக்கின்றது
கிளைவ் துடித்து போனான், நிச்சயம் சிராஜ் உத்தவ்லாவினை கொல்வதை அவன் விரும்பவில்லை. மீர் ஜாபரின் கீழ்தரமான புத்தி அவனுக்கு கடும் எச்சரிக்கையினை கொடுத்தது
என்றாவது ஒரு நாள் மீர்ஜாபர் தனக்கு எதிராக திரும்புவான் அதற்கு தயாராக இருக்கவேண்டும் என மகா எச்சரிக்கையாக இருந்தான் கிளைவ்
மீர்ஜாபரோ எந்த புள்ளியில் வெள்ளையரை விரட்டலாம் என திட்டமிட்டு கொண்டிருந்தான்
வீரத்தில் மட்டுமல்ல சாதுர்ய்யத்திலும் தேர்ந்தவனான கிளைவ் அதற்கான சந்தர்ப்பத்தை பார்த்துகொண்டிருந்தான்
அது டச்சுகாரர் வடிவில் வந்தது [ October 11, 2018 ]
(தொடரும்)
Image may contain: one or more people and text