சிதறல்கள்

“களங்கம் வந்தா என்ன பாரு
அதுக்கும் நிலாவுன்னு பேரு
அட மந்தையில நின்னாலும் நீ
வீரபாண்டி தேரு….” [ October 11, 2018 ]

Image may contain: one or more people and outdoor
==========================================================================

இன்று உலக பார்வை தினம்

பார்வை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்..

[ October 12, 2018 ]
Image may contain: one or more people and closeup
=========================================================================

மனிதர்களுடன் உரையாடும் முதல் ரோபோ விசாகப்பட்டினத்தில் அறிமுகம்

இதென்ன பிரமாதம்? தமிழகத்தில் ரோபாக்கள் ஆட்சியே நடக்கின்றது, கட்டுபாடு மட்டும் டெல்லியில் இருக்கின்றது [ October 12, 2018 ]

============================================================================

அந்த நடிகை விஜயலட்சுமி மி டூன்னு வந்துட்டா இந்த எளிய தமிழ்பிள்ளையின் நிலை என்னாகும் என் உறவே

அப்படி விஜயலட்சுமி வந்தால் ராஜபக்சே சதி, திமுக சதி என சொல்லிவிட வேண்டியதுதான் ஹாஹஹ்ஹஹஹஹஹா…

[ October 12, 2018 ]
Image may contain: 1 person, closeup
==========================================================================

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா லட்சியங்களை நிறைவேற்றுவோம்: அதிமுக தலைமை உறுதி

எது? கடைசிவரை டெல்லிக்கு அடிமையாக இருப்போம் எனும் லட்சியம்தானே, அதைத்தானே இப்பொழுது நிறைவேற்றி கொண்டும் இருக்கின்றார்கள்.

[ October 12, 2018 ]

============================================================================

இந்த சுப வீரபாண்டியன், தியாகு செய்த அனைத்து பாலியல் அட்டகாசங்களுக்கும் துணை போனவர், பாதுகாத்தவர் என்பதற்கு நானே சாட்சி என பகிரங்கமாக சொல்கின்றார் Kavignar Thamarai

இந்த தமிழ்தேசிய கும்பலினால் வாழ்க்கையினை தொலைத்தவர் என்றமுறையில் Kavignar Thamarai க்கு அவர்கள் மேல் குற்றம்சாட்ட முழு தகுதியும் உண்டு

சுபவீயின் சட்டை மட்டும் கருப்பு அல்ல மனமும் பயங்கர கருப்பு போல..

வைரமுத்துவினை காப்பாற்றுவதாக நினைத்துகொண்டு வார்த்தைகளுக்கு பதில் சொல்லமுடியாமல் தலை குனிந்து நிற்கின்றார் சுப வீரபாண்டியன் என்பவர்

சுபவீக்கு கொஞ்சமாவது மானம் இருந்தால் இத்தோடு பொதுவாழ்வு பகுத்தறிவு என எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடட்டும்

[ October 12, 2018 ]

============================================================================

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி ராமசந்திரன் பெயர் சூட்டபட்டது : செய்தி

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு குஷ்பு பெயரை சூட்ட வேண்டும் என சங்கம் வலியுறுத்துகின்றது, காரணம் முதன் முதலில் தலைவியின் திருப்பாதம் தமிழகத்தில் அங்குதான் பதிந்தது

அரசுகள் அதை செய்யாத பட்சத்தில் மாபெரும் போராட்டத்தை சங்கம் நடத்தும் என எச்சரிக்கின்றோம். [ October 12, 2018 ]

============================================================================

அந்த திருச்செந்தூர் வைரவேல் கொள்ளை அதை தொடர்ந்த சுப்பிரமணியம் பிள்ளையின் தற்கொலை என தமிழகமே அரண்டு கிடந்தது, சிலை திருட்டு போல் கொடும் விஷயம் அது

எம்ஜிராமசந்திரனின் ஆசிபெற்றவர்கள் அதில் சம்பந்தபட்டிருந்ததால் விஷயம் நிர்மலா தேவி விவகாரம் போல் அடக்கி வாசிக்கபட்டது

கலைஞர் எழுந்தார், திருச்செந்தூர் வரை நடந்தார். தமிழகம் கொந்தளித்தது, விஷயம் சீரியசாவதை அறிந்த ராமசந்திரன் பால் கமிஷன் என்றொரு கமிஷனை அமைத்தார்

பால் கமிஷனின் அறிக்கை ராமசந்திரனிடம் ஒப்படைக்கபட்டது, அதன் விளைவுகளை அறிந்த ராமசந்திரன் அமெரிக்கா ஓடிவிட்டார்

கலைஞரோ அந்த அறிக்கையினை அட்டகாசமாக வெளியிட்டு சுப்பிரமணியபிள்ளை கொல்லபட்டிருப்பதை வெளிகொணர்ந்தார்

ராமசந்திரன் என்ன செய்தார், அந்த அறிக்கையின் முடிவினை பற்றி பேசாமல் கலைஞர் ஊழல் செய்து அறிக்கையினை கொண்டுவந்தார் என சொல்லி இரு அதிகாரிகளை பதவிநீக்கம் செய்தார்

அவரின் நியாயம் அப்படியானது, பின்பு காவல்துறை ஏதோ தகிடதொம் செய்து ராமசந்திரனை காப்பாற்றியது

எப்படி ஆயினும் திருசெந்தூர் கொடுமையில் பல உண்மைகளை வெளிகொண்டுவந்த ஹீரோ கலைஞர் என்பதை மறுக்க முடியாது

ஏன் சொல்கின்றோம் என்றால் நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தாணம் கமிஷன் முதல் ஏகபட்ட கமிஷன்களின் முடிவு ஒப்படைக்கபட்டாயிற்று

ஆனால் முடிவு தெரியவில்லை

கலைஞர் இருந்தால் இந்நிலை வந்திருக்காது, தமிழகத்தில் அவரை போன்ற விடாபிடியான, தைரியமான‌ போராட்ட குணம் இல்லா அரசியல்வாதிகள் இல்லாதது வெறுமை அளிக்கின்றது

அவர் இல்லாத அரசியலில் எல்லாமே மர்மமாக சென்றுகொண்டும் இருக்கின்றது

அந்த மனிதரை இப்பொழுதெல்லாம் அடிக்கடி தேட வேண்டி இருக்கின்றது

[ October 12, 2018 ]

Image may contain: one or more people, sunglasses and closeup
============================================================================

அது என்ன புஷ்கரமோ நமக்கு தெரியாது, விரும்பியர்கள் கொண்டாடுகின்றார்கள்

நமக்கு தெரிந்த புஷ்கர் எல்லாம் சுனந்தா புஷ்கர் என்பவர்தான், அவர் சாவும் மர்மமாக போனது

அவர் படத்திற்கு பூ போட்டு புஷ்கரம் செலுத்த சங்கம் முடிவு செய்திருகின்றது

[ October 12, 2018 ]
Image may contain: 1 person, smiling, closeup
=========================================================================

பிடர்கொண்ட சிம்மமே நீ இல்லை
இடர்கொண்ட எனக்கு ஆறுதலும் இல்லை

நீ இல்லாத தைரியத்தில் இந்த சின்மயி எல்லாம் என் மேல் ஏறிவிளையாடுகின்றது சிம்மமே….

[ October 12, 2018 ]
Image may contain: one or more people, people standing, crowd, flower and outdoor
=========================================================================

கிறிஸ்தவர்களின் புண்ணிய பூமி என இஸ்ரேலை சொல்வார்கள் அதற்கு அடுத்து கத்தோலிக்கர்கள் வாடிகனை சொல்வார்கள்

ஆனால் கிறிஸ்தவர்களின் மகா முக்கிய புண்ணிய பூமியில் துருக்கிக்கும் இடம் உண்டு

ஆம், திருச்சபை தொடங்கிய காலங்களில் முக்கிய சபைகள் அங்குதான் அமைக்கபட்டன, இந்த 7 சபைகள் எனப்படும் ஆதிகால சபைகள் அங்குதான் அமைக்கபட்டன‌

இதனால் உலகெங்கிலும் இருந்து கிறிஸ்தவர்கள் அங்கு குவிவார்கள், இன்று துருக்கி இஸ்லாமிய நாடாயினும் அந்த புண்ணிய ஸ்தலங்களுக்கான முக்கியத்துவத்தை அது தடுக்கவில்லை

நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியனில் ஒரே இஸ்லாமிய நாடு என்பதால் சில விஷயங்களில் அனுசரிக்கும் கடப்பாடும் அதற்கு உண்டு

இந்நிலையில் அந்த நாட்டிற்கு ஏகபட்ட கிறிஸ்தவர்கள் செல்வதுண்டு அப்படி சென்றவர்தான் அமெரிக்க போதகர்
ஆன்ட்ரூ புரூன்சென்

சென்றவர் போதனை எனும் பெயரில் துருக்கிக்கு எதிராக மக்களை திரட்டுகின்றார் , அவர் அமெரிக்க உளவாளி என பிடித்து உள்ளே போட்டது துருக்கி

விஷயம் பெரும் பிரச்சினையாகி டிரம்பிற்கும் துருக்கி எர்டோனுக்கும் கவுரவ பிரச்சினையாகிவிட்டது

இப்பொழுது அந்த புரூன்சனை விடுவதா வேண்டாமா? என மகா முக்கிய முடிவினை எடுக்கும் விசாரணை துருக்கி நீத்மன்றத்தில் நடக்கின்றது

மிக உன்னிப்பாக கவனித்துகொண்டிருகின்றார் டிரம்ப். அதனால் உலகமும் கவனிக்கின்றது [ October 12, 2018 ]

============================================================================

ஒரு வழியாக மகனுக்கு பாஸ்போர்ட் கிடைத்தாயிற்று, நீண்ட போராட்டம் வெற்றியாகிவிட்டது

இதற்கு இந்த அப்பாவி பாஜகவினர் நம்புவது போல சுஷ்மா எல்லாம் காரணமில்லை, அவரின் எஜமான் மோடியும் காரணமில்ல்லை

அவர்கள் எல்லா விளம்பர பார்ட்டிகளே தவிர ஒன்றும் உதவமாட்டார்கள், சுஷ்மாவிற்கு டிவிட் செய்ய சொன்னவர்களை செருப்புடன் தேடி கொண்டிருக்கின்றேன்

நாம் எதையும் சட்டபூர்வமாக அணுகுபவர்கள் என்பதால் தூதரகம் கேட்ட ஆவணங்களை தயார் செய்ய முயன்றோம், அதில் ஏகபட்ட முகநூல் நண்பர்கள் உதவினார்கள்

Somas Kandhan என்பவர் என்ன செய்யவேண்டும் என சொன்னார், தோழர் S Prema என்பவர் வெளியுறவு விவகார அலுவலகத்தில் விசாரித்து தகவல் சொன்னார்

பொறுப்பினை தன் தோளில் சுமந்தவர் Kennediஎன்பவர், உண்மையில் சகோதரன் இல்லா எமக்கு மூத்த சகோதரராக உதவினார்

அவரால்தான் எல்லாம் சாத்தியமாயிற்று

அவருக்கு உதவியாக பல உதவிகளை செய்தவர் பாஜக பிரமுகரும் வழக்கறிஞருமான Suresh Marthandamஎன்பவர். அவர் வள்ளியூர் பகுதியின் பெரும் வழக்கறிஞர். அப்பகுதியின் சட்டம் ஒழுங்கு அவரால்தான் காக்கபடுகின்றது

நீதிமன்றத்தில் “அப்ஜெக்சன் யுவர் ஆணர்” என அவர் முழங்கினால் நீதிபதியே எழும்பி நிற்பாராம், அப்படிபட்ட பிசியான வழக்கறிஞர் நமக்காக உதவினார்

இது போக நெல்லையில் எந்த உதவியும் செய்ய Kuttala Rajan Sundar G Santhoshஇருவரும் தயாராக இருந்தார்கள்

பாஜக தலைவர்கள்தான் சரியில்லையே தவிர தொண்டர்கள் உத்தமானவர்கள், எத்தனையோ பேர் அனுதினமும் தொடர்பு கொண்டு தங்களால் முடிந்த உதவியினை செய்வதாக சொல்லிகொண்டே இருந்தார்கள்

Pugal Machendran Pugalஎன்பவர் மட்டும் நான் இருக்கின்றேன் என சொல்லிவிட்டு காவிரிக்குள் மூழ்கிவிட்டார், இன்னும் காணவில்லை

உலகில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் எமக்கு இத்தனை பெரிய உதவி எப்படி கிடைத்தது என்றால் இந்த முகநூலால் மட்டுமே

அப்படிபட்ட நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கின்றார்கள், அதுவும் ஆபத்தில் உதவும் நண்பர்கள் கிடைத்திருப்பது நிச்சயம் வரம்

ஆறுதலாகவும், உதவியாகவும் இருந்த அனைவருக்கும் நன்றிகள், நண்பரும் அண்ணனும் ஆகிவிட்ட Kennedi என்பவருக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்

உறுதியாக சொல்லலாம், உங்களின் அன்பால்தான் இன்னும் இந்த முகநூலை விட்டு செல்லாமல் இருக்கின்றேன். அந்த அளவு நன்றிகயிறால் கட்டி போட்டிருக்கின்றீர்கள்

இப்படிபட்ட நண்பர்களுக்காக நாம் செய்ய கூடிய கைமாறு எதுவுமில்லை, அவர்களுக்கு இறைவன் எல்லா நலமும் வளமும் அருளட்டும் என்பதை தவிர வேறு பிரார்த்தனை இப்பொழுது இல்லை [ October 12, 2018 ]