சிதறல்கள்
ஆகமவிதிபடி அர்ச்சகர்கள் நியமிக்கபட வேண்டும் என முன்பு சொன்னதும் உச்ச நீதிமன்றம்
ஆகம விதியினை மீறி பெண்கள் சபரிமலைக்கு செல்லலாம் என சொல்வதும் உச்ச நீதிமன்றம்
ஆக நீதி என்பது ஒவ்வொரு நீதிபதிக்கும் மாறிகொண்டே இருக்கும் போல..
[ October 18, 2018 ]
============================================================================
ஆக அன்னார் திருமணம் செய்யாமல் இருப்பதிலும் பெரும் ரகசியம் இருக்கலாம்
பாவம், எந்த கிழவியினை அன்னார் மிரட்டுகின்றாரோ தெரியவில்லை

கல்வி, செல்வம், வீரம் என மூன்றின் அருளுக்கும் முப்பெருந்தேவியரை உலகம் வணங்கும், நவராத்திரி திருவிழா என்று அதனைத்தான் கொண்டாடி கொண்டிருக்கின்றது
ஆனால் அழகு என்றொரு நான்காம் விஷயத்திற்கு யார் இலக்கணம்?
முன்பு முழு அழகு என்றால் என்ன இந்த உலகிற்கே தெரியாது,
அதனை உலகிற்கு சொல்ல வந்தவர்தான் எங்கள் தலைவி.
அழகு என்றால் என்ன என்பதற்கு அரிச்சுவடி அவர்.
மற்றவர்கள் முப்பெருந்தேவியரின் விழா என தசராவினை கொண்டாடட்டும்
நாங்கள் ரம்பை, மேனகை, ஊர்வசி முப்பெரும் அழகிகளின் திருவிழாவினையும் குஷ்பூவில் ஒன்றாக கண்டு ஒரு ஓரத்தில் கொண்டாடுகின்றோம்
அதற்கு குஷ்பூ படமே பிராதானம். அதற்கு தங்க பிரேம் போட்டு, வைரம் தூவி கொண்டாடுவோம்.
கல்வி, செல்வம், வீரம் என சொல்ல தெய்வங்கள் உண்டு,அழகு என்பதற்கு எங்கள் குஷ்பூவினை தவிர யார் உண்டு?
ஆக சங்கத்து உறுப்பினர்களே நாம் தனியாக நமது தேவியினை கொண்டாடலாம்
[ October 18, 2018 ]
============================================================================
பாரதிராஜாவின் ஈழபயணம் குறித்து ஒரு ஈழ நண்பரிடம் கேட்டபொழுது அவர் சொன்ன பதில் இது
“போர் நடைபெற்ற கொண்டிருந்த காலங்களில் இந்திய சினிமா சாக்கடைகள் வெளிநாடுகளுக்கு வந்து ஈழத்தமிழர்களிடமிருந்து நன்றாக பணம் சம்பாதித்தார்கள்.
தற்பொழுது போர் முடிந்து நல்ல சூழ்நிலை உருவாகிய பின் இந்திய சினிமாகாரர்கள் இலங்கைக்கு சென்று நல்ல பணம் சம்பாதிக்க தொடங்கியுள்ளார்கள்.
ஈழத்தமிழர்களுக்கு இவர்களால் கிடைத்த நன்மை என்ன??..”
[ October 18, 2018 ]
============================================================================
வட சென்னை என்றொரு படம் வந்திருக்கின்றதாம், ரவுடியிசம் படமாம்
அது என்னமோ தெரியவில்லை வடசென்னை என்றாலே ரவுடி ஏரியா, ஒரு மாதிரி ஏரியா, காட்டுமிராண்டிகள் பகுதி என்றொரு பிம்பத்தை திரையுலகம் ஏற்படுத்தி இருக்கின்றது,
அப்படி வந்திருக்கும் பல படங்களில்தான் இதுவும் ஒன்று
இன்னொரு கூட்டம் வடசென்னை என்றாலே கறுப்பர் ஏரியா, அப்படி ஏரியா என சொல்லிகொண்டிருக்கின்றது
உண்மையில் வடசென்னை என்ன உகாண்டாவா?
இதெல்லாம் வட சென்னை மக்கள் கேட்க வேண்டிய கேள்விகள், அவர்களே மகா அமைதியாக இருக்கும்பொழுது நாம் ஏன் கேட்க வேண்டும்?
கேரளாவில் காவல்துறையினர் செய்வது பெரும் அராஜகம் : தமிழிசை
அக்கோவ், தூத்துகுடியில் தமிழக போலிசார் செய்தது என்ன தெய்வீக திருப்பணியா?
நீங்கள் ஏன் கேரளா பாஜகவிற்கு தலைவராக சென்று அங்கு தாமரையினை மலர வைக்க கூடாது? [ October 18, 2018 ]