சிதறல்கள்

ஒரு நொடி சிந்திதது ஒரு “உறை” போட மறந்தவர்தான் , மாநில நிதி நிலையினை உரையாக வாசிப்பவராம்

தனிபட்ட முறையிலே பெரும் கவனகுறைவில் இருந்துவிட்டவர், மாநில நிதி துறையில் என்னென்ன கவன குறைவுகளை வைத்திருக்கின்றாரோ??

[ October 22, 2018 ]

============================================================================

இப்பொழுதும் என்ன நடந்தது என கேளுங்கள், அக்கட்சியிலிருந்து “நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவள் மாம்பழம் வேண்டுமென்றாள்..” என்ற பாடல்தான் வரும்

உண்மையில் அவர்கள் இப்பொழுது பாட வேண்டிய பாடல் எது தெரியுமா?

“இளமை எனும் பூங்காற்று, பாடியது ஓர் பாட்டு….” [ October 22, 2018 ]

============================================================================

லஞ்ச குற்றச்சாட்டில் சிபிஐ, ‘ரா’வின் முக்கிய அதிகாரிகள் சிக்குகின்றனர்

உள்நாட்டில் சிபிஐ விசாரித்த எந்த வழக்கிற்கும் முடிவு தெரியவில்லை, எந்த சோதனைக்கும் விளக்கம் இல்லை

வெளிநாட்டில் ரா உளவாளிகளை கோழி அமுக்குவது போல் அமுக்குகின்றனர் அல்லது முந்தி கொண்டு தலையினை கொடுக்கின்றனர்.

கூட்டி கழித்து பார்த்தால் விஷயம் சரிதான். [ October 22, 2018 ]

===========================================================================

தமிழகத்தை மிரட்டும் டெங்கு, பன்றிக்காய்ச்சல்; மருத்துவ அவசர நிலையைப் பிரகடனம் செய்க: அன்புமணி

சாதி அபிமானத்தை மட்டும் விட்டுவிட்டால் இந்த ராமதாசும், அன்புமணியும் நல்ல அரசியல்வாதிகள் சந்தேகமில்லை

ஆனால் அந்த சனியனை விடாமல் அல்லது விடமுடியாமல் சிக்கிகொண்டார்கள்

நிச்சயம் அவசர நிலையினை பிரகடனம் செய்யும் நேரமிது, தமிழக நிலவரம் குறிப்பாக தென் பகுதி நிலவரம் அப்படித்தான் இருக்கின்றது.

[ October 22, 2018 ]

============================================================================

பருவமழை விரைவில் தொடங்கும் என எப்படி கணித்தார்கள்?

விஷயம் மிக எளிதானது

இதோ மயில் தோகையினை விரித்துவிட்டது, இதை விட என்ன ஆதாரம் வேண்டும்???

{ October 22, 2018 ]
Image may contain: 1 person, smiling, selfie and closeup
========================================================================

கண்ணதாசன் முதலில் திமுகவில் இருந்தார், நாத்திகம்தான் பேசினார்

மதுவும் மாதுவுமாக அவர் வாழ்வும் கழிந்தது, எவ்வித வரையரைகளுக்கும் கட்டுபடாமல் வாழ்ந்தார், ஆனால் பாடல்களில் கம்பனின் துல்லியம் இருந்தது

வாழ்க்கை சுழலும், சுயநல அரசியலும் அவருக்கு பல தத்தவங்களை உணர்த்தின, குடித்தார், குழம்பினார், தவித்தார், துடித்தார்

ஒரு விபத்தொன்றில் சிக்கி மருததுவனையில் இருந்தபொழுதுதான் காஞ்சி பெரியவர் அவருக்கு பிரசாதம் கொடுத்து அவரை இந்துமதம் பற்றி எழுத சொன்னார்

அதன் பின் அவர் கொடுத்ததுதான் இரண்டாம் கீதையான அர்த்தமுள்ள இந்துமதம்

கவிஞர்கள் ரசனையும் உணர்ச்சி குவியலும் கொண்டவர்கள் அந்த மாபெரும் ரசனையின் உச்சத்தில்தான் அவர்களால் அழியா காவியங்களை படைக்க முடியும்

கம்பன் முதல் எத்தனையோ கவிஞர்கள் பெண் மோகம் கொண்டிருந்தார்கள், இலக்கியவாதிகள் பலரும் அவ்வழியே

அவர்கள் வாழ்வும் மனமும் அப்படித்தான் விதிக்கபட்டிருக்கின்றது

கண்ணதாசன் பெரும் இக்கட்டில் இருந்து மீண்டு அர்த்தமுள்ள இந்துமதம் எழுதினார்

யாரும் குடிகாரன் என்றோ, மாதுபிரியன் என்றோ அவரின் எழுத்தை புறக்கணிக்கவில்லை மாறாக கொண்டாடினார்கள்

வைரமுத்துவும் திராவிட இம்சைகளில் இருந்து தப்பி பகவானின் திருவடிக்கு வரட்டும்

அழியா இறைகாவியங்களை அர்த்தமுள்ள இந்துமதம் போல எழுதட்டும்

வைரமுத்து யார் வாழ்வினையும் கெடுக்கவில்லை, யாருடைய கண்ணீருக்கும் காரணமாகவும் இல்லை, நடப்பதெல்லாம் அரசியல் விளையாட்டு

ஆண்டவன் விளையாட்டாகவும் இருக்கலாம்

அவர் ஆத்திகராகட்டும், நிச்சயம் அவரின் எழுத்துக்கள் பெரும் பக்தி இலக்கியங்களை கொடுக்கும், அவரின் எழுத்து மேல் அவ்வளவு நம்பிக்கை இருக்கின்றது

நிச்சயம் அவரால் முடியும் என தெரிந்துதான் ஆண்டவன் அழைக்கின்றான்

ஒரு காலத்தில் திருடனாய் இருந்த வால்மிகிதான் ராமாயணம் எழுதினான்

திராவிட மேடையில் இந்து தெய்வங்களை கடுமையாக விமர்சித்த கண்ணதாசனே அர்த்தமுள்ள இந்துமதம் எழுதினார்

அப்படி வைரமுத்துவும் வரட்டும், வரலாற்றில் நிலைக்கட்டும்

கடும் சர்ச்சைகளில் ஒரு அற்புத கவிஞன், சொல் வித்தகன் , காலம் கொடுத்த அற்புத எழுத்தாளன் ஒருவன் தொலைந்துவிட கூடாது என்பதுதான் நம் அவா

அந்த தமிழ் கற்பூரம் கடவுளில் கரையட்டும் , அழியா காவியங்கள் எழும்பட்டும்

[ October 22, 2018 ]

============================================================================

பிரதமர் வேட்பாளராக நாங்கள் ராகுலை முன்னிறுத்தவில்லை : ப.சிதம்பரம்

இதை ராகுல் காந்தியும் ஒப்புகொண்டதாக தெரிகின்றது

அப்படியானால் காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் யார்? சந்தேகமே இல்லை தலைவி குஷ்பு தான்

அருமை இந்தியாவே, இரண்டாம் இந்திரா, இந்தியாவின் தாட்சர், பாரத்ததை காக்க வந்த கோல்டா மேயர் குஷ்புவினை விட்டு விடாதே

அவரையும் விட்டுவிட்டால் உனக்கு கதியே இல்லை

பல்லாயிரம் முனிவர்களும் யோகிகளும் வாழ்ந்த இந்நாட்டின் கடைசி காவல் அரண் குஷ்பு ஒருவரே [ October 22, 2018 ]

============================================================================

என் மீதான சர்ச்சை தினகரன் கோஷ்டியின் திட்டமிட்ட சதி, இதனை சட்டபடி சந்திப்பேன் : ஜெயக்குமார் பேட்டி

நாட்டாமை படத்தில் விஜயகுமார் சொல்லும் “நிறுத்துடா, அவங்களுக்கு பாய் நீதாண்டா கொடுக்கணும், அதில நீயே படுத்திட்டா எப்படிடா?” எனும் வசனம் நினைவுக்கு வந்து போகின்றது

எப்படியோ ஜெயகுமார் கோஷ்டியும் தினகரன் கோஷ்டியும் அடித்து கொண்டால் சரி, இதில் எது ஒழிந்தாலும் தமிழகத்திற்கு நல்லது

[ October 22, 2018 ]
Image may contain: 1 person, beard and outdoor
========================================================================