சிதறல்கள்
கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தினார் ரஜினிகாந்த் : செய்தி
இதற்கு முந்தைய செய்தி பேட்ட திரைப்படத்தின் படபிடிப்பு நிறைவு பெற்றது என்பது
ஆக தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் விரைவில் ரஜினி படம் வெளிவர இருக்கின்றது என்பது. [ October 23, 2018 ]
============================================================================
ஜெயக்குமார் உடனே பதவி விலக வேண்டும், திமுக ஆர்.ராசா வலியுறுத்தல்
1968ல் இதே போன்றதொரு சிக்கல் கலைஞருக்கு வந்தபொழுது அவர் ராஜினாமா செய்தாரா? என யாரும் திருப்பி கேட்டால் ராசா என்ன சொல்வாரோ தெரியாது..
[ October 23, 2018 ]
============================================================================
அப்படி என்னய்யா பண்ணிட்டான் என் கட்சிக்காரன்?
கட்சி கலாச்சாரத்த காப்பாத்துனது ஒரு தப்பா?…
எப்படிபட்ட பாரம்பரியமுள்ள கட்சி இது தெரியுமா?…

பங்கு, இப்படி ஆளும் அமைச்சர்கள் ரகசியமாக பிள்ளை பெற்று பின் மாட்டிகொண்டு மறுப்பதும் பின் ஒப்புகொள்வதும் சாதாரண விஷயம் அல்ல,
அந்த பெரியவருக்கே அந்த காலத்தில் அப்படி ஒரு பெண்குழந்தை பிறந்து, அந்த ராசியில்தான் அவர் முதல்வர் ஆனார் என அக்கட்சியினரே சொல்வார்கள்
இவரும் அப்படி முதல்வர் ஆயிட்டா என்னய்யா பண்றது? கொஞ்சம் கவனமா இருக்கணும் பங்காளி

தினகரன் சார்பு எம்.எல்.ஏக்கள் எல்லாம் குற்றாலத்தில் சந்திக்கின்றனர் : செய்தி
பெரிய ஜி8 நாடுகளின் தலைவர்கள், இவர்கள் ஒரே இடத்தில் சந்திப்பது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி
அட தினகரன் உறுமினால் மொத்தமாக வந்து விழுந்துகிடக்கும் கோஷ்டி அது, அந்நிலையில் இப்படி ஒரு விளம்பரம்
ஏதோ சர்வதேச விஞ்ஞானிகள் கூடி ஆராய்ச்சி முடிவினை வெளியிட போவது போல ஒரு பிம்பம். [ October 23, 2018 ]
============================================================================
அந்த வாஷிங்டன் பத்திரிகையாளர் ஜமால் கொல்லபட்டதில் விஷயம் வெடிக்கின்றது
சவுதி அவ்விவகாரத்தை ஒப்புகொண்டாலும் டிரம்பிற்கு அழுத்தம் அமெரிக்க பத்திரிகைகள் கொடுக்கும் அழுத்ததில் டிரம்பால் தாக்குபிடிக்க முடியவில்லை
சவுதியின் செயல்பாட்டில் தனக்கு திருப்தி இல்லை என சொல்லிவிட்டார்
இப்பொழுது பிரிட்டன் பிரதமர் தெரசே மே காட்சிக்கு வந்து சவுதியினை கண்டிக்கின்றார், ஜெர்மன் பிரான்ஸ் நாடுகளும் கண்டிக்க தொடங்கிவிட்டன
சவுதியோ இதன்விளைவுகள் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கின்றது, என்ன விளைவு? எண்ணெய் தரமாட்டோம் என அடம்பிடிக்கும் அதுதான் விளைவு வேறொன்றுமில்லை
ஏன் விஷயம் இவ்வளவு பெரிதாகின்றது என்றால் பத்திரிகை உலகால், பத்திரிகைகள் இந்த படுகொலையினை விடுவதாக இல்லை
இன்னொரு கோணமும் உண்டு
அமெரிக்காவிடம் இருந்து 11,500 பில்லியன் டாலருக்கு ஆயுதம் வாங்க ஒப்பந்தம் செய்திருகின்றது சவுதி
இந்த ஆயுதம் வாங்கபட்டால் ஏமனில் சவுதி சதிராட்டம் ஆடும், ஈரானுக்கும் நல்லது அல்ல
இதனால் ஈரானிய கரங்கள் அமெரிக்க சவுதி இடையே பிளவை ஏற்படுத்த வந்திருகலாம் என்கின்றது ஒரு செய்தி
இல்லை சவுதி வாங்கும் ஆயுதம் ரகசியமாக தீவிரவாதிகள் கைக்கு சென்று இஸ்ரேலை தாக்கும் அபாயம் இருப்பதால் இஸ்ரேல் முந்திகொண்டது என்கின்றது இன்னொரு தரப்பு
ஆனால் இஸ்ரேலோ நாங்கள் நடத்தும் படுகொலை இவ்வளவு மொக்கையாக இருக்காது என மவுனமாக சிரிக்கின்றது
விஷயம் சவுதிக்கு பெரும் தலைவலிதான் சந்தேகமில்லை
உலகில் ஒரு பத்திரிகையாளருக்கு நடந்திருக்கும் அநீதிக்கு மொத்த பத்திரிகை உலகமும் பொங்கி வல்லரசுகளை காட்சியில் இறக்குகின்றன
இங்கோ இந்த சவுக்கு சங்கர் என்பவரை சில நாட்களாக காணவில்லை, எந்த கட்சி அலுவலகத்திற்கு சென்றாரோ? யார் தூக்கி சென்றார்களோ தெரியாது
[ October 23, 2018 ]
============================================================================
பட்டாசுகளுக்கு நிச்சயம் சீனாதான் தாய்பூமி, அவர்கள் அந்த வெடிபொருட்களை வைத்து என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்றால் வான வேடிக்கை செய்து பேய் விரட்டினார்கள்
அரசன் முடி சூடுதல், வருடபிறப்பு கொண்டாட்டம் போன்ற நாட்களில் வெடித்து மகிழ்ந்தார்கள்
ஆனால் அதை வைத்து ஆயுதம் செய்யலாம் என அவர்களுக்கு தெரியவில்லை என்பதுதான் சோகம், சந்தோஷத்திற்கு வெடிப்பார்களே தவிர சண்டை என்றால் கத்தி, கோடாரி, அரிவாள் தான்
மங்கோலியரின் புண்ணியத்தில் சீனா ஐரோப்பா வரை நீண்டு ஆங்காங்கே அது யுத்த வெடிபொருளானது, பாபர் அப்படித்தான் பீரங்கியோடு இந்தியா வந்தான்
(பாஜக கும்பலிடம் கேளுங்கள் பீரங்கியால் ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டினான் என அளந்து விடுவார்கள்)
அதாவது மார்க்கோபோலோ சீனா செல்லும் வரை நிலை அப்படித்தான் இருந்தது, வெடி பொருட்கள் ஐரோப்பியர் கண்களில் பட்டபின்புதான் யுத்தத்திற்கு அதை பயன்படுத்தும் நுட்பம் வந்தது
சுரங்கம் தோண்டுவதற்கு பெருமளவில் அது பயன்பட்டது, உலகம் மாற ஆரம்பித்தது அதன் பிறகுதான்
நமது பக்கங்களில் ஆழ் கிணறு தோண்டும் வேலையினை இந்த வெடிபொருட்கள் எளிதாக்கின, நிலத்தடி நீர்மட்டத்தின் ஆபத்திற்கு அதுதான் தொடக்கபுள்ளி
பின் யுத்த வெற்றியினை நிர்ணயிக்கும் சக்தியாக அந்த வேடிக்கை வெடிபொருள் ஆனது
விஷயம் இதுதான், சீனாதான் பட்டுக்கும், காகிதத்திற்கும், பட்டாசுக்கும் தாய்பூமி
சிவகாசி என்பது வானம் பார்த்த வறண்ட பூமி , அங்கிருந்து அய்ய நாடார் என்பவர் தொழில் வாய்ப்பிற்காக சீனா எல்லாம் சுற்றி வந்து சிவகாசியில் பட்டாசு ஆலையினை தொடங்கினார்
அதிலிருந்து சிவகாசி பட்டாசு பூமியாய் ஆயிற்று
இப்பொழுது சிக்கல் என்னவென்றால், தாராளமயமாக்கல் உள்ளிட்ட சட்டங்களில் இந்தியா கையெழுத்திட்டிருப்பதால் எல்லா பொருளும் இங்கு வந்து குவியும் இந்தியா தடுக்க முடியாது , ஒப்பந்தம் அப்படி
அப்படி சிவகாசி பட்டாசும் சீனாவிற்கு செல்லும் ஆனால் சீன பட்டாசுகளின் விலை முன் சிவகாசி பட்டாசு விலை அதிகம் என்பதால் சந்தை இல்லை
இப்பொழுது சீன பட்டாசை புறக்கணிக்க வேண்டும் சிவகாசியினை வாழவைக்க வேண்டும் என பெரும் குரல் எழுகின்றது, நல்லது
அப்படியே இந்த வியாபார உலகில் எங்கிருந்தெல்லாமோ விவசாய பொருட்கள் , உணவு பொருட்கள் இங்கு குவிகின்றன
அதை எல்லாம் விரட்டிவிட்டு உள்ளூர் விவசாயி பொருளை வாங்கி அவனை காக்க வேண்டும் என யாரும் குரல் எழுப்பவில்லை என்பதுதான் சோகம்
பட்டாசு என்பது கொழுத்த வியாபாரம் என்பதால் வியாபார குரல்கள் எழும்புகின்றன
விவசாயிக்கு யார் உண்டு? அவன் அற்ப அழிந்துவரும் உயிரினம்
[ October 23, 2018 ]
============================================================================