சிதறல்கள்
ஐ.எஸ் இயக்கத்தை தாக்குகின்றோம் என சிரியா மசூதிகளை தாக்கி இருக்கின்றது அமெரிக்கா
இதுவே ரஷ்யா தாக்கி இருந்தால் அய்யகோ மசூதியினை தாக்குவதா இஸ்லாமியரே கொந்தளிப்பீர் என உலகில் சென்னை வரை கிளம்புவார்கள்
ஆனால் அமெரிக்கா தாக்கினால் சத்தம் இருக்காது, உலக மீடியா தர்மம் இப்படி
[ October 24, 2018 ]
============================================================================
இந்த உலகம் இன்றல்ல, அன்றே வியாபார ரீதியானது. ஒன்றை கொடுத்து ஒன்றை பெறுவது என்பது ஆதாமின் அடுத்த காலத்திலே இருந்திருக்கின்றது
உலகின் ஆதி தொழில் அப்படித்தான் உருவானது, பெண் ஆணுக்கு எது தேவையோ அதை கொடுத்து தனக்கு தேவையானதை வாங்கி இருக்கின்றாள்
இது பைபிளில் இருக்கின்றது, சங்க இலக்கியத்தில் இருக்கின்றது
ஏன் உலகில் எந்த இனங்களுக்கு வரலாறு, கலாச்சாரம் , இலகியம் என உண்டோ எல்லா இனங்களிலும் இது பதிவு செய்யபட்டிருக்கின்றது
இதை கொடுத்தால் இதை தருவேன் என்பது வியாபாரம், சினிமா எனும் வியாபார உலகிலும் அது நடந்திருக்கலாம்
கல்லா கட்டும் வரை கட்டிவிட்டு இப்பொழுது குதியோ குதி என குதிப்பது நியாயம் ஆகாது
பத்தினி தெய்வங்கள் அன்றே “ஏ துச்சாதனா..” என சீறி இருக்கலாம், ஆனால் அன்றோ கண்ணனிடம் கோபியர் போல இருந்துவிட்டு இப்பொழுது “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா..” என சீறினால் சிரிப்புத்தான் வரும்
[ October 24, 2018 ]
============================================================================
தமிழகத்தில் ஆத்தூர் கிராமத்தில் 13 வயது சிறுமியினை பாலியல் பலாத்காரம் செய்யும்பொழுது கொன்றிருக்கின்றான் கிராதகன் ஒருவன்
அதுவும் தாய் முன்னாலே அந்த பிஞ்சின் கழுத்தை வெட்டி எடுத்திருக்கின்றான்
மிகபெரும் கொடுமையும், சமூக அவலமும் இது
ஆனால் ஒரு ஊடகமும் பேசவில்லை, ஒருவரும் பொங்கவில்லை
அந்த பிஞ்சு குழந்தைக்காக அழுகின்றோம், அந்த கயவனை உடனே கொல்லாவிட்டால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு செத்துவிட்டது என்றே அர்த்தம்
ஊடகங்கள் என்பது ஏற்கனவே செத்துவிட்டது என்பது வேறு விஷயம்
[ October 24, 2018 ]
===========================================================================
ஈழத்தில் தமிழக பகுதியில் ராணுவம் வெளியேற வேண்டும் , தமிழர் பகுதியினை தமிழரிடம் ஒப்படைக்க வெண்டும் என்றெல்லாம் ஆளாளுக்கு இங்கு முழங்குவார்கள்
அதிலும் சிக்கல் உண்டு , புலிகள் சும்மா செல்லவில்லை ஏராளமான கண்னி வெடிகளை புதைத்துவிட்டே சென்றனர், மக்களிடம் அப்பகுதியினை கொடுத்தால் நிச்சயம் பலி எண்ணிக்கை கூடி கொண்டே இருக்கும்
இதனால் கண்னிவெடிகளை அகற்றும் பணி 2009லே தொடங்கியது, கண்னி வெடி என்பது சந்தையில் கிடக்கும் காய்கறிகளை பொறுக்குவது போல் எளிதானது அல்ல
அதை கருவி வைத்து தேட வேண்டும், அங்குலம் அங்குலமாகத்தான் நகர முடியும், ஒரு அடி அவசரபட்டு எடுத்து வைத்தாலும் முடிந்தது விஷயம்
இதனால் ஜப்பான் நாட்டு நிறுவணத்தின் உதவியோடு அகற்றினார்கள், இன்னும் அகற்றியபாடு இல்லை
கிட்டதட்ட 11 ஆயிரம் கன்னிவெடிகள் அகற்றபட்டு அங்கு மக்கள் குடியேற அனுமதிக்கபட்டிருகின்றனர், இன்னும் மீட்பு நடக்கின்றது
இதில் என்ன செய்திருக்க வேண்டும்?
புலிகள் புதைத்ததை அவர்கள் தம்பிகளும் அண்ணனும் எடுக்க வேண்டும் , தமிழருக்காக அந்த தியாகத்தை அவர்கள் செய்தாக வேண்டும் என இந்த சைமன், வை.கோ, நெடுமாறன், திருமுருகன் காந்தி, வேல்முருகன், கொளத்தூர் மணி , திருமா கோஷ்டியினை அனுப்பி இருக்க வேண்டும்
எதையுமே செய்யதெரியாத இவர்கள் கண்ணிவெடியினை மட்டும் சரியாகவா எடுப்பார்கள்?
தமிழகம் நிம்மதியாக இருக்கும் [ October 24, 2018 ]
