சிதறல்கள்
இவ்வளவு நாள் இல்லாமல் சிபிஐ, ரா மேல் மோடிக்கு என்ன அக்கறை? அதுவும் ஆட்சி முடியும் பொழுது என்ன அக்கறை
ஆழ யோசித்தால் புரியும் விஷயம் இதுதான்
ரபேல் விவகாரத்தில் அடுத்த ஆட்சி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு விட்டால் தீரா சிக்கலில் விழநேரிடும் எனும் அஞ்சும் பாஜக அதற்கான தற்காப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது
ஆதாரங்களை அழிக்க பொம்மை அதிகாரிகளை வைக்கும் வேலை நடைபெறலாம்
ரபேலின் தொடர்புகள் வெளிநாடுகளில் இருப்பதால் ராவிலும் ஆதாரம் சிக்காமல் இருக்க சில வேலைகள் நடக்கலாம்
இப்போதைக்கு சிபிஐல் குழப்பம் வர இதை தவிர வேறு வாய்ப்பு இல்லவே இல்லை…
அவ்வளவு நல்ல அரசு என்றால் தமிழக அரசு மீது சீர்திருத்தம் செய்யட்டும் பார்க்கலாம் [ October 24, 2018 ]
============================================================================
”ஏழை, பணக்காரர் இடையிலான வித்தியாசத்தைக் குறைத்தவர்” :-
மோடிக்கு 2018 க்கான சியோல் அமைதி விருது வழங்குகின்றது தென்கொரியா
எப்படி குறைத்தார் என்பது நமக்குத்தான் தெரியும்?
தொழில் நடத்த முடியாமல் பலர் கம்பெனி மூடி தெருவுக்கு வந்தாயிற்று
பெட்ரோல் விற்கும் விலையில் காரினையும் பைக்கினையும் விட்டு விட்டு பலர் ரோட்டில் ஏழைகளோடு நடக்க ஆரம்பித்தாயிற்று
சிலிண்டர் விலை கூடியதால் பலருக்கு பழையபடி விறகு அடுப்பு
பணக்காரர்களை எல்லாம் ஏழையாக்கி ஒரே வரிசையில் உட்கார வைத்தார் மோடி , ஏழைகள் ஏற்கனவே ஏழைகள் என்பதால் இழக்க ஒன்றுமில்லை
ஆக வித்தியாசம் குறைந்தது என்பதால் விருது கொடுக்கபடலாம்
ஏம்பா தென் கொரியா பயலுகளா, உங்க சாம்சுங் போன் விற்கணும், ஹூன்டாய், கியா கார் விற்கணும் இன்னும் நிறைய எலக்ட்ரானிஸ் பொருள் எல்லாம் விற்கணும்ன்னா அதுக்காக இந்த அளவு பொய் சொல்வீர்களா?
உங்களுக்கெல்லாம் வடகொரிய தக்காளிதான் சரி.
[ October 24, 2018 ]
============================================================================
`சர்கார்’ படத்தை தீபாவளிக்கு முன்பே ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு
பின்னே?
யார் கதையினையோ ஏ.ஆர் முருகதாஸ் திருடிவிட்டார் என்ற சலசலப்பு வந்தாயிற்று, சம்பந்தபட்டவர் கோர்ட்டுக்கு செல்லுமுன் படத்தை வெளியிட்டால் சிக்கல் இல்லை என்பது தயாரிப்பாளருக்கு தெரியாதா?
[ October 24, 2018 ]
============================================================================
ஆத்தா, உனக்கு தெரியாததில்ல
நம்ம தலைவருக்கும் வாரிசு இல்ல, உனக்கும் வாரிசு இல்ல. இதனால எவ்வளவு கஷ்டம் ஆத்தா
அந்த கஷ்டம் உங்களோட போகட்டும், வருங்காலத்துல கட்சி நல்லா இருக்கட்டுமேன்னு சில வாரிசுகள நான் கூட உருவாக்குனது தப்பா ஆத்தா?

Saravanan Chandran என்பவர் நல்ல எழுத்தாளர், இப்பொழுதும் சுபிட்ச முருகன் என்றொரு நாவல் எழுதியிருக்கின்றார்
நாவல் எழுதியது சரிதான், ஆனால் முன்னுரை எழுத ஜெயமோகனை அழைத்ததுதான் அதிர வைக்கின்றது
மனிதர் ஒரு முன்னுரை எழுதியிருக்கின்றார் பாருங்கள், தமிழ்தான்
ஆனால் பலமுறை வாசித்தும் புரியவில்லை, தலை ஒரு பக்கம் வாசித்தும் தலைகீழாக நின்று வாசித்தும், ஏன் கம்பியூட்டரை சரித்து போட்டு வாசித்தும் புரியவில்லை
இனி இரவு டாஸ்மாக் சரக்கு ஒன்றை அடித்துவிட்டு வாசிக்கலாம் என்ற முயற்சி தவிர வேறு வழி இல்லை
இந்த முன்னுரை வாசகனை பின்னங்கால் பிடறியில் அடித்து ஓட செய்துவிடும் என்பதால்
Saravanan Chandran என்பவர் கொஞ்சம் விளக்கவுரையினை எழுதி அதோடு இணைத்துவிடுவது நல்லது.

இன்னொரு புதிய படத்தில் நடிகின்றார் ரஜினிகாந்த்
என்ன நடந்திருக்கும்?
“யோவ் வீட்டில் வாக்கிங் போறத கேமரா முன்னால் போ, வீட்டில் சாப்பிடுவதை கேமரா முன் சாப்பிடு, வீட்டில் சண்டை போடுவதை கேமரா முன்னால் போடு
வீட்டில் தனியாக பேசுவதை கேமரா முன்னால் பேசு, அப்பாவி ரசிகர்களை நினைத்து சிரிப்பதை கேமரா முன்னால் சிரி
கொஞ்சம் மேக் அப் மட்டும் போட்டுக்கோ, கோடி கோடியாய் கொட்டும்..” என வீட்டில் அந்தம்மா விரட்டும் போல [ October 24, 2018 ]
============================================================================
கூத்துபட்டறை முத்துசாமி இறந்துவிட்டார் என செய்திகள் வருகின்றன
நாடக குருமார்களான அவ்வை சன்முகம், பம்மல் கல்யாண சம்பந்தம் முதலியார் போன்ற வரிசையில் வரும் நபர் முத்துசாமி
ஏராளமான அற்புத நடிகர்கள் அவரின் நாடக பயிற்சியிலிருந்து வந்தார்கள். மக்கள் ஜனாதிபதி சோமசுந்தரம் முதல் இன்று உச்சத்தில் இருக்கும் விஜய் சேதுபதி வரை அவரால் உருவாக்கபட்டவர்கள்
நடிகர்கள் பசுபதி, விமல், விதார்த், கலைராணி, தேவி, மீனாட்சி, ஜார்ஜ்,ஜெயராவ்,ஜெயக்குமார்,
குரு சோமசுந்தரம், குபேரன், சஞ்சீவி, கவின் ஜெ.பாபு என பெரும் வரிசையினை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு
ஆண்டவன் கட்டளை படத்தில் நாசர் பாத்திரத்தில் அவரின் சாயலும், கூத்துபட்டறையும் நன்றாக தெரிந்தது
திரையுலகம் அவருக்கு செய்த நன்றிகடன் அது ஒன்றுதான்
நல்ல நடிகர்களை உருவாக்கிய அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
[ October 24, 2018 ]

நிதி கொடுங்கள், கட்சியினை இத்தோடு மூடுகின்றோம் அரசியலுக்கு வரமாட்டோம் என மட்டும் சொல்லுங்கள்.
கடன் வாங்கியாவது மக்கள் கொட்டுவார்கள்

இந்த சிபிஐ, ரா எல்லாம் சீரமைக்கின்றார்களாம், மகா திறமையான ஆட்கள் வேண்டுமாம்
ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகரான தமிழக போலிசுக்கே தண்ணி காட்டிய எச்.ராசாவினையும் எஸ்.வீ சேகரையும் சிபிஐக்கும், ராவுக்கும் அனுப்ப முடியுமான்னு டெல்லியில இருந்து சீரியசா கேக்குறாங்க
முடியவே முடியாது, அவங்க கட்சிக்கு தேவைன்னு சொன்னாலும் விடவே மாட்றாங்க, ஹாஹஹஹஹஹஹ்
ஹய்யோ..ஹய்யோ..

“மாமா லேய் இங்க ஒரு பிரச்சினைல
என்னல பிரச்சினை
இங்க கொஞ்சம் பேர் ஒருமாதிரி அலைதானுவல, என்ன மட்டம் தட்டிகிட்டே இருக்கானுவல, அவனுக ஏதோ பிர்மானனாம்ல
ஒ பிராமணனா?
என்னமோல அப்படித்தான் சொல்றானுவல, கலரா இருக்கானுவளா நான் கருப்பா இருக்கேன்னு அவனுகளுக்கு இளக்காரமா இருக்குல. நானும் கருப்பு அப்பாவும் கருப்பா அம்மாவும் கருப்பா, அத வச்சி கிண்டல் பண்ணிட்டே இருக்கானுவல
அவனுக நல்லா படிப்பானுவல, அப்படித்தான் இருப்பானுக, நீனும் நல்லா படி
கிழிச்சானுவ நான் பத்து மார்க் எடுத்தா அவனுக 5 கூட இல்ல ஆனாலும் நாங்கதான் பெருசுன்னு நிக்கானுவல
அப்டியால
ஆமால ஆனா அடிச்சா செத்துருவானுவ அப்படித்தான் இருக்கானுவ ஆனாலும் கொசரு
அப்படி என்னதாம்ல செய்றானுவ
என்ன கூப்டுவச்சி நாங்க வெள்ளையா இருக்கோம் நீ கருப்புங்காரானுவ, ஏதோ சர்ஸ்வதியாம்ல அத கும்பிடனுமாம், ஜீசஸ்ன்னு ஒன்னு கிடையவே கிடையாதாம்
ஒஹோ
அவனுக செய்றது எல்லாம் சரியாம், நா செய்றது எல்லாம் தப்பாம். அவனுகளத்தான் நான் பாலோ பண்ணனுமாம்ல , சேட்டையா பண்றானுவல
அப்படியால.
ஆமால, எத சொன்னாலும் நீ சொல்றது தப்பு, நாங்க சொல்றதுதான் சரி, எங்க ஆத்துல பெரியவா சொல்லிருக்கான்னு சொல்லி சொல்லி அவனுக அதிகாரம் பண்ணிட்டே இருக்கானுவல
ஓஹோ வேற..
நிறையால… எதுக்கு எடுத்தாலும் கருப்பா இருக்கவனுக்கு ஒண்ணும் தெரியாது, நாங்க சொல்றத கேட்டுட்டு ஒழுங்க இருன்னு சொல்றானுவ, ஆனா சொல்றது பூரா தப்புல
அப்படியால, அவனுகளுக்கு எல்லாம் அந்த பெரியார் கிழவர்தாம்ல சரி
அவர் எங்கல இருக்காரு, போன் போட்டு இங்க வர சொல்லுல
அவர் இல்லல, ஆனா இவனுகள எப்படி அடக்கனும்னு அவர் நிறைய எழுதி வச்சிருக்காருல
அப்படியால மாமா
ஆமால, உனக்கு தமிழ் வாசிக்க தெரிமால
தெரியும்ல, உடனே புக் அனுப்பி வைல
சரில
அவனுகள விட கூடாதுல, ஓட ஓட அடிக்கணும்ல, பெரிய இவனுக மாதிரி அலையுறானுவல.
சரில அடிச்சிருவோம்ல
(இரண்டாம் வகுப்பு படிக்கும் தங்கை மகனுடன் பேசியது இது, நம் வீட்டிலும் ஒரு தீவிர பெரியாரிஸ்ட் உருவாகி கொண்டிருக்கின்றார்
[ October 24, 2018 ]
============================================================================