பெரியாரால் கூட கொண்டுவரமுடியா சாதி ஒற்றுமையினை பல நூறு சொத்துமதிப்பு கொண்ட சங்கங்களால் செய்ய முடிகின்றது
தெட்சன நாடார் சங்கம் என்பது அபராதத்தில் ஓடும் சங்கம் அல்ல, கிட்டதட்ட 500 கோடிக்கும் மேற்பட்ட சொத்துக்களை கொண்டது என சொல்லபட்டாலும் மதிப்பு அதை விட அதிகம் இருக்கலாம்..
வியாபாரத்தில் கொடிகட்டி பறந்த சிவகாசி விருதுநகர் நாடார்கள் தங்களுக்காக உருவாக்கியது நாடார் சங்கம்
நாடார்கள் கல்வியிலும் வியாபாரத்திலும் வளர வேண்டும், அச்சமூகம் வளர வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கபட்டது அது
அதாவது கால சூழல் அப்படியானது, திராவிட குரல்களுக்கும் முந்தைய காலமது
ஆனால் தென்னகத்து நாடார்கள் அதில் ஒட்டமுடியவில்லை, பெயர்தான் நாடார் சங்கமே தவிர, விருதுநகர் நாடாருக்கும் நெல்லை நாடாருக்கும் இடைவெளி அதிகம்
இதில் இந்த ஆதித்த வம்சவளி நாடார்கள் என சொல்லிகொண்டவர்கள் தெட்சன நாடார் சங்கத்தை தொடங்கினார்கள், அவர்கள் தலைநகரம் நெல்லை
வியாபார கோட்டையான சிவகாசி சாத்தூருக்கு பதிலாக தூத்துகுடி மற்றும் நாகர்கோவில் கோட்டார் வளர தொடங்கியதும் சங்கம் உருவாக இன்னொரு காரணம்
சிவந்தி ஆதித்தனின் முப்பாட்டன் காலத்தில் தொடங்கபட்டது , நெல்லை தூத்துகுடி நாடார்கள் பணத்தில் அது வளர்ந்தது
நெல்லையர் எங்கெல்லாம் உண்டோ அங்கெல்லாம் வளர்ந்தது மும்பையிலும் வளர்ந்தது
பள்ளி, கல்லூரிகள் அது இது என வளர்ந்த சங்கம் பல நூறு கோடிகளை இன்று கொண்டிருக்கின்றது, பெரும் பணம் புரளும் இடம் அது
அப்படிபட்ட சக்திவாய்ந்த சங்கத்தை
சிவந்தி ஆதித்தன் குடும்பம் அதை வைத்திருந்தது, பின்பு தென்னகத்து அம்பானி வைகுண்டராஜன் கைபற்றினார்
மணல் விவகாரத்தில் அவருக்கு நெருக்கடி வந்தபொழுது எதெல்லாம் தனக்கு இல்லாததை உணர்ந்தார், அவரின் சிந்தனையில் தனக்கென ஒரு ஊடகம் , பெரும் சங்கம் இல்லை என்பது அவருக்கு தெரிந்தது
நியூஸ்7 வந்தது போலவே சங்கமும் அண்ணாச்சி கைக்கு சென்றது, ஆனால் இதுவரை சங்கம் அண்ணாச்சிக்கு ஆதரவாக என்ன குரல் எழுப்பிற்று என்றால் ஒன்றுமே இல்லை, ஒரு முறை விஜயகாந்தினை கண்டித்ததோடு சரி.
இப்படியாக சங்கத்தை ஆளாளுக்கு வைத்திருந்தார்கள், சில நேரங்களில் சில ரவுடிகளின் கரங்களும் இருந்தன
இப்பொழுது என்னாயிற்று என தெரியவில்லை
கரகாட்டகாரன் கவுண்டமணி பாணியில் சொல்வதென்றால் சிவந்தி வைத்திருந்தார், தூத்துகுடி தொழிலதிபர்கள் வைத்திருந்தனர், வைகுண்டராஜன் வைத்திருந்தார், இப்பொழுது சங்கத்தை யார் வைத்திருக்கின்றார்கள் என்றே தெரியவில்லை
ஆனால் முதல் முறையாக தேவர் சமூகம் நாடார் சமூகத்திற்கு வாழ்த்து தெரிவித்திருப்பது மகிழ்ச்சி என்றாலும் உண்மை நிலவரம் அது அல்ல
ஒளித்து சொல்ல ஒன்றுமில்லை, திறந்தே சொல்லலாம். ஒரு காலத்தில் கமுதி மறவருக்கும் சிவகாசி நாடார்களுக்குமான கலவரங்களே இம்மாதிரி சங்கம் தொடர ஆரம்ப புள்ளி
பின் அது தொடர்ந்தது, இரு சமூகத்திற்கும் பசும்பொன் தேவர் காலத்தில் முறுக்கியது, சசிவர்ண தேவர் காலத்திலும் நிலமை சுமூகமாக இல்லை
1997 வரை இருபக்கமும் முட்டிகொண்டேதான் இருந்தது,இன்றும் கணல் உண்டு
இதில் இன்று
எப்படி சாத்தியம் என்றால் அதுதான் அரசியல் விளையாட்டு
சாதிகள் எல்லாம் அரசியலாகிவிட்ட நிலையில் எல்லா சங்கங்களிலும் எல்லா சாதியினையும் அனுசரித்து செல்ல வேண்டிய நிலை
காரணம் சங்கத்து சொத்து, பணம், பதவி, அனுகூலம் இன்னபிற, வளைந்து நெளிந்து செல்லாமல் எதிர்காலம் இல்லை
போதாதா?
நாடார் சங்கத்தை தேவர் வாழ்த்த தொடங்கியாயிற்று
அதைத்தான் சொன்னோம், பெரியாரால் முடியாத சாதி ஒழிப்பினை பணம் செய்கின்றது
அப்புறம் என்ன?
இனி பசும்பொன் குருபூஜைக்கு வரலாற்றில் முதல் முறையாக இந்த நாடார் சங்க தலைவர் காளிதாச நாடார் செல்ல வாய்ப்பு இருக்கின்றது
ஒழிக சாதிகள், பெருகட்டும் ஒற்றுமைகள்
பசும்பொன் தேவரையும், காமராஜரையும் ஒன்றாய் பார்க்க நன்றாகத்தான் இருக்கின்றது
அதற்காக விரைவில் சரத்குமாரையும், கார்த்திக்கையும் ஒரே போஸ்டரில் போடுவார்கள் பாருங்கள் அதுதான் சகிக்க முடியாதது
அதைவிட ஆபத்து இந்த கராத்தே செல்வினும் கட்டதுரையும் ஒரே போஸ்டரில் வந்துவிட்டாலும் உண்டு
அப்படி ஒரு போஸ்டர் வருமா என்றால் நிச்சயம் வரும், காரணம் அரசியலும், பணமும் எல்லாம் செய்யும்
(என்னை அடிக்கடி பஸ்டாண்டுக்கு வா என சொல்லும் சாதி வெறியர்கள் இந்த போஸ்டரை பார்த்து விட்டு எந்த மருத்துவமனையில் கிடக்கின்றார்களோ தெரியாது)
ஒரு கோஷ்டி இதில் தினகரனின் அரசியல் விளையாட்டும் உண்டு என்கின்றது , சொல்லமுடியாது ஆர்.கே நகர் இடைதேர்தலில் இதே நாடார் சங்க கோஷ்டியான சபாபதி, வைகுண்டராஜன் எல்லாம் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து அவர் வென்ற சம்பவமும் நடந்தது
அதனால் இதில் டிடிவி தினகரனின் கரங்கங்களும் உண்டு என்பதையும் மறுக்க முடியாது
அது ஒரு வேளை உண்மையாக இருந்தால்
“இரண்டாம் பெரியார்” யார்?
சாட்சாத் டிடிவி தினகரனே தான் [ October 25, 2018 ]