சிதறல்கள்

அடுத்த இரு நாட்களுக்கு முகநூல்பக்கம் தாங்காது, எப்படி எல்லாம் வருவார்கள் என்றால் இப்படித்தான்

சர்ச்சிலை அலற வைத்த சகலகலா வல்லவன் தேவர், ஹிட்லரை மிரள வைத்த வீரதிருமகன் என ஒருகோஷ்டி கிளம்பும்

இன்னொரு பக்கம் வேல்கம்பால் பிரிட்டன் பீரங்கியினை விரட்டிய தேவர், சிங்கத்தின் மேல் ஏறி சென்று சுதந்திரம் கொடுக்க சொன்ன தேவர் என இன்னொரு கோஷ்டி அழிச்சாட்டியம் செய்யும்

இன்னொரு கோஷ்டி சாதி ஒழித்த தேவர், அன்றே அவர் அமைத்த சமத்துவபுரத்தை கலைஞர் காப்பி அடித்தார் என கிளம்பும்

இன்னும் ஏகபட்ட அல்ட்ராசிட்டிகள் உண்டு

இன்னும் இரு நாட்களுக்கு பெரும் காமெடிகள் எல்லாம் காத்திருக்கின்றன‌

[ October 29, 2018 ]

============================================================================

ஒரு வீடியோவில் தன்னை செல்பி எடுத்தவனை படேர் என அடித்து போனை உடைக்கின்றார் நடிகர் சிவகுமார்

பாதிக்கபட்டவன் ஏனோ போல நிற்கின்றான், “சட்டென சிவகுமார் பின்மண்டையில் அடித்து எடுறா போன, இல்ல புது போன் வாங்கி கொடுத்து போ” என கீழே போட்டு மிதித்திருக்க வேண்டும..

இவனை அடிக்க சிவகுமாருக்கு என்ன உரிமை உண்டோ, அவ்வளவு சிவகுமாரை திருப்பி அடிக்க அவனுக்கும் உண்டு.

யோகா செய்தால் இவ்வளவுக்கு மதிமயங்கி கோபம் வரும் போல‌

[ October 29, 2018 ]

============================================================================

தமிழக முதல்வர் மீதான டெண்டர் முறைகேடு புகார்- சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்

எப்படி பங்கு?

வெள்ளக்காரன் காலத்துல பாதுகாப்பாகவும் சுகமாகவும் இருந்த சமஸ்தான ராஜாக்களுக்கு அப்புறம் நாமதான் அப்படி இருக்கோம் பங்கு, வரலாற்றுல நின்னுட்டோம் பங்கு”

[ October 29, 2018 ]
Image may contain: 2 people, people smiling, text
============================================================================

2 ஆயிரம் வருஷமா வெட்டரிவாளும் வீச்சரிவாளும் பிடிச்சி மாட்டு வண்டியிலும் குதிரையிலும் சுத்தின பயலுக‌

அவனுகளுக்கு பஸ் கிடைச்சா விடுவானா? அவன் விடவே மாட்டான், 4000 வருஷம் ஆனாலும் இப்படித்தான் தொங்குவான்

[ October 29, 2018 ]
Image may contain: one or more people and outdoor
============================================================================

யோவ் சிவகுமார், நன்றாக பாரும்

பெரிய மனுஷன், பெரிய மனுஷன்தான்யா, நீரேல்லாம் சுத்த வேஸ்ட்

பிரபலம்னா இப்படி இருக்கணும்யா..

[ October 29, 2018 ]
Image may contain: 11 people, people smiling
============================================================================

ராஜபக்சே குறுக்குவழியில் பிரதமாகிவிட்டார், அவருக்கு பெரும்பான்மை எல்லாம் இல்லை , அவர் பதவி விலக வேண்டும் : திருமாவளவன்

மிஸ்டர் திருமா, நம்ம பழனிச்சாமி மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட முதல்வரா? அவர் என்ன பெரும்பான்மையிலா ஆள்கின்றார்

இதை பற்றி ஒன்றுமே சொல்லாத நீர்? எங்கோ அடுத்தநாட்டு பிரதமருக்கு ஏன் குதிக்கின்றீர்

தைரியம் இருந்தால் பழனிச்சாமியினை சொல்லுங்கள் பார்க்கலாம்..

“அடங்க மறு..அத்து மீறு” என்பதெல்லாம் எங்கோ இருக்கும் அதுவும் தமிழே தெரியாத ராஜபக்சேவிடம் மட்டுமா?

[ October 30, 2018 ]

===========================================================================

உயிர் என்பது எப்படி இருக்கும்? அது காற்றா? உணர்வா? அதற்கு வடிவம் உண்டா என உலக விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள்

ஆனால் சங்கமோ அந்த ஆய்வில் வெற்றிபெற்றுள்ளது, ஆம் சங்கத்தாரின் உயிரின் உருவம் இப்படித்தான் இருக்கும்.

[ October 30, 2018 ]
Image may contain: 1 person, selfie and closeup
============================================================================

ராகுல்காந்தி பல இடங்களில் மக்களோடு நெருங்கி பழகுகின்றார், பாதுகாப்பினை மீறுகின்றார்

நேரு, ராஜிவ் எல்லாம் இப்படித்தான் இருந்தார்கள், மக்களோடு மக்களாக கலக்க ஆர்வமாய் இருந்தார்கள்

ஆனால் இந்திராவும், ராஜிவும் அஜாக்கிரதைக்கு கொடுத்த விலை அதிகம். இந்திரா எத்தனையோ எச்சரிக்கைக்கு பின்னும் தன் பாதுகாப்பு சீக்கிய வீரர்களை மாற்றமுடியாது என சொன்னார்.

ராஜிவோ மிக இயல்பாக தடைகளை தாண்டி கூட்டத்திடம் ஓடினார், திருப்பெரும்புதூரிலும் அப்படித்தான் வந்தார், அனுசுயா எனும் கான்ஸ்டபிள் தடுத்தும் தனுவினை வலிய அழைத்து மாலை வாங்கினார்

ராஜிவ் குடும்பத்திற்கு இன்னும் அச்சுறுத்தல் நீங்கவில்லை. அந்த காலிஸ்தான் கும்பல் இந்திரா வம்சமே இருக்க கூடாது என செய்த சபதம் நீடிக்கின்றது

இங்கோ சைமன் வீட்டு அடுப்பாங்கரையில் ஒளிந்திருக்கும் பிரபாகரனும் அவனின் கும்பலும் இன்னும் ஓயவில்லை

இதுபோக அகில இந்திய இளம்தலைவர் எனும் வகையில் பன்னாட்டு கண்களும் உண்டு

ராகுல் துளியும் மேட்டிமை மனப்பான்மை இல்லாத எளிய சாமன்ய மனநிலையில் இருப்பது நல்லது

அப்படியே தகுந்த பாதுகாப்போடு இருப்பது இன்னும் நல்லது, காரணம் தேசத்தின் எதிர்காலம் என இந்தியா அவரை நம்புகின்றது

[ October 30, 2018 ]

Image may contain: 8 people, people smiling, crowd
============================================================================

என்ன பெரிய பிரபலங்களின் எரிச்சல்? எங்கள் தலைவியினை விட மிக பிரபலம் யார்?

அவரே மிக பொறுமையாக தன் ரசிகர்களுடன் செல்பி எடுப்பார் தெரியுமா?

மேன்மைகுணம் , தலமைபண்பு என்றால் அதுதான்

[ October 30, 2018 ]
Image may contain: 1 person, text
Image may contain: 3 people, people smiling, selfie
Image may contain: 4 people, people smiling, people standing, selfie and indoor
============================================================================

Kavignar Thamarai மேடம் , பிரதமரை விடவா அகில உலக பிரபலம் நீங்கள்?

மனிதர் முகத்தில் எங்காவாது கோபம் தெரிகின்றதா? என் வேலைகளை கெடுக்கின்றீர்கள் என சீறுகின்றாரா?

இத்தனைக்கும் அடுத்தநாட்டுகாரர்கள் யாரென்றே அவருக்கு தெரியாது

ஆனாலும் உலகில் யார் கேட்டாலும் ஓடிவந்து கேமராவினை பார்க்கும் இந்த குழந்தை மனது எந்த பிரபலத்திற்கு வரும்??

அட ஒருவரும் இல்லை என்றால் தனக்குதானே செல்பி எடுக்கின்றார் பாருங்கள், அதுதான் தெய்வீகம்

[ October 30, 2018 ]
Image may contain: one or more people and phone
Image may contain: 2 people, people smiling, phone and beard
Image may contain: 2 people, people smiling, phone and beard
Image may contain: 6 people, phone
=========================================================================

இந்த நிர்மலா தேவியின் அறிக்கை என்றொரு அறிக்கை வெளி ஆகி இருக்கின்றது

அதில் வடிவேலுவிடம் ஒரு படத்தில் ஒரு பெண் சொல்வது போல, “மதுரை திருவிழாவுல கண்டமனூர் ஜமீன் கண்டம் பண்ணிட்டாரு, அத கேள்விபட்ட அண்ணன் அவங்க அண்ணன் வந்தாரு, அத வேலக்காரன் பாத்துட்டான்

வேலைகாரனோட முடிக்க தோட்டம் பக்கம் போனேன் தோட்டகாரன் பார்த்துட்டாரு, தோட்டகாரரோடு முடிக்கமாம்னு பார்த்தா வண்டிக்காரன் வந்துட்டான், கடைசியா டாக்டர்ட்ட கலைக்க போயி, டாக்டரே என்ன கலைச்சிட்டாரு. ”

அப்படி நீள்கின்றது அறிக்கை.

எப்படியோ ஆளுநர் உற்சாகமாக தீபாவளி கொண்டாட போகும் நேரமிது, சந்தோஷத்தில் அதிக இனிப்பு சாப்பிடாமல் இருந்தால் சரி

[ October 30, 2018 ]

============================================================================

சர்கார் படம் சம்பந்தமாக எழுத்தாளர் ராஜேந்திரனுடன் முருகதாஸ் சமரசம் : செய்தி

அங்கே முழு கதையினையும் பாக்யராஜ் உலகிற்கே சொல்லிகொண்டிருக்கின்றார், இவர் இங்கு சமரசம் பேசுகின்றாராம்..

[ October 30, 2018 ]

============================================================================