சிதறல்கள்
அடேய் தமிழ் சினிமா அல்ட்ராசிட்டிஸ், தமிழ் சினிமாவில் மூலகதை ஆசிரியர்கள் பெயரை டைட்டிலில் போட வேண்டும் என்றால் யார் பெயரை போடவேண்டும் தெரியுமா?
ராமாயணம், மகாபாரத சாயல் அன்றி பெரும் திரைப்படங்கள் இல்லை, குறிப்பாக மணிரத்னம் படங்கள்
அவர் படம் மட்டும் என்றல்ல , எந்த தமிழ்படத்தை பார்த்தாலும் ராமாயணம், மஹாபாரதத்தின் ஒரு கிளைகதை இல்லாமல் இல்லை என்பது உண்மை
ஷங்கரின் ஐ படம் கூட நளன் கதையினை அடிப்படையாக கொண்டது
கலைஞரின் மருதநாட்டு இளவரசி கூட குண்டலகேசி கதையினை சார்ந்தது
ஆக இனி நன்றி தலைப்பு போட வேண்டுமென்றால் வியாசர், வால்மீகி போன்றவர்களையும் நக்கீரன், புகழேந்தி போன்றவர்கள் பெயரையும் கட்டாயம் போட்டாக வேண்டும்
[ October 31, 2018 ]
============================================================================
தீபாவளிக்கு வெடி வெடிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவை கட்டாயம் நடைமுறை படுத்த வேண்டும் : சுப.வீரபாண்டியன்
எத்தனை முறை இந்திய சட்ட நகலை எரித்திருக்கின்றார்கள், எத்தனை முறை உச்ச நீதிமன்ற தீர்ப்பினை எல்லாம் எரித்தார்கள் இந்த கருப்பு சட்டை கோஷ்டிகள்
அதை உச்சகுடுமி மன்றம் என்றது யார்? அதை பல இடங்களில் மீறியது யார்?
ஏன் நீட் தேர்வுக்கும் அப்படியே பின்பற்றினால் என்ன? எவ்வளவு அழிச்சாட்டியம்?
அவர்களுக்கு வேண்டாம் என்றால் உச்சநீதிமன்ற தீர்ப்பு ..க்கு சமமாம்
ஆனால் மக்கள் உற்சாகமாக கொண்டாடும் பண்டிகையின் பொழுது ஓடிவந்து உச்சநீதிமன்ற தீர்ப்பினை கொண்டாடுவார்களாம்.
மிகபெரும் சந்தர்ப்பவாத கோஷ்டி இவர்கள், முதல் வெடியினை இவர்கள் வாயிலே வைக்க வேண்டும்
[ October 31, 2018 ]
============================================================================
முன்னாடி அண்ணாச்சிய விஜயகாந்த் விமர்சிச்சார், உடனே நாம விஜயகாந்த் வந்தேறின்னு பயங்கர பில்டப் எல்லாம் கொடுத்தோம்
இப்போ வருமானவரிதுறையினர எப்படி வந்தேறின்னு சொல்ல?, பழனிச்சாமி வேற தமிழ் கவுண்டர் சாதின்னு லேப்ல தம்பிங்க சொல்லிட்டாங்க
ஏதும் சொல்லி ஆகணும், இல்லாவிட்டால் அண்ணாச்சி கல்ல கட்டி கடல்ல போட்ருவார்
வெரி டெலிகேட் பொஷிசன்..
அண்ணாச்சி மேல் நடவடிக்கை எடுக்க சொன்னது மகிந்த ராஜபக்சேன்னு சொல்லிர வேண்டியதுதான்
[ October 31, 2018 ]
============================================================================
மிஸ்டர் வீரமணி எங்கய்யா சென்றீர்?
பகுத்தறிவு பாசறையாம் திமுகவின் மகளிரணி தவப்புதல்வி தமிழச்சி தங்கபாண்டியன் தன் 60ம் வயது மணவிழாவினை எப்படி கொண்டாடுகின்றார் என பாருமய்யா
தாலி கட்டுகின்றார் அய்யா, அய்யகோ , இதை தாங்க முடியுமா?
ஒரு பகுத்தறிவு பெண்மணிக்கு தாலியினை கண்டவுடன் சிரிப்பை பாருமய்யா,
ஓடிவந்து செய்ய வேண்டியதை செய்யும், வரும்பொழுது பெரியாரின் கைதடியினை மறக்காமல் எடுத்து வாருமய்யா..
(அம்மணி எப்பொழுதும் சரோஜாதேவி போல மேக் அப்பிலே இருப்பதால் திருமண நாள் அன்று எடுத்தபடம் என யாரும் நம்பிவிட வேண்டாம்)
[ October 31, 2018 ]

தமிழிசை அக்கா இதை பார்க்க சகிக்காமல்தான் அமெரிக்கா சென்றுவிட்டார், இனி வரவே மாட்டார்
தமிழ் தெரிந்த ஒருவருமா பாஜகவில் இல்லை, பொன்னாருக்கும், நிர்மலா சீத்தாராமனுக்கும் தமிழ் வாசிக்க தெரியாது என்பது இப்பொழுது விளங்கிற்று
நாட்டினை ஒருங்கிணைத்த பட்டேல் சிலைக்கு இதைவிட அவமானம் வேறு இல்லை
(எமக்கென்னமோ ஆசான் ஜெயமோகன் தமிழ் மொழிபெயர்ப்பு செய்தது போல் தோன்றுகின்றது, புது புது தமிழ்வார்த்தைகளை ஆசானே இப்பொழுது உருவாக்குகின்றார்
படிமம், செவிலியம், உணரியம், திரிபறிதல், தற்குரியியம் என அவரின் அழிச்சாட்டிய மொழிபெயர்ப்பு ஏக பிரசித்தி)
[ October 31, 2018 ]

தைவான், துபாய்,மலேசியா, அமெரிக்கா எல்லாம் மிக உயர்ந்த கட்டிடத்தினை கட்டி வணிகநோக்கில் சம்பாதிக்கின்றது, நாம மிக உயர்ந்த பட்டேல் சிலை வைத்து என்ன செய்ய போகின்றோம்?
அட இதற்கே இப்படியா இனி பல்லாயிரம் கோடியில் ராமர் கோவில் கட்டுமோமே, அதற்கென்ன சொல்ல போகின்றீர்?
டாலருக்கு எதிரான இந்தியபணம் இப்பொழுது என்ன தெரியுமா?
அதெல்லாம் உங்க ஏரியாஜி, எங்க ஏரியா இதுதான்
இல்லை மோடி, இது சீரியஸ் விஷயம்
அட போங்க சார், இன்னும் 5 வருஷம் நாடு கிடைத்தால் 1 அமெரிக்க டாலரை 3000 கோடிக்கு கொண்டு வந்துவிடுவேன், இந்த சிலை கட்டிய செலவு 1 டாலருக்கு வந்துவிடும் இது கூட தெரியாமல் என்ன பொருளாதார மேதையோ நீங்கள்..
ஷ்ஷ்ஷப்பா…..பகவானே……..
[ October 31, 2018 ]
============================================================================
ரவுடியிசம் படங்களை யார் எடுத்தாலும் அது கேங்ஸ்டர் படமாம், நாயகனிலிருந்து இந்த வடசென்னை வரை ரவுடி கும்பல்களுக்கு இடையேயான படமாம்
குடும்பத்தோடு பார்க்க முடியாத ரத்த களறி படங்களாம்
ஆனால் பா.ரஞ்சித் என்பவர் ரவிடிகள் படம் எடுத்தால் மட்டும் தலித்திய, அம்பேத்கரிய சாதி ஒழிப்பு புரட்சி படமாம்
இதுவும் ஒருவகை சினிமா நீதி என சொல்லி திரிகின்றன, அம்பேத்கரிய சினிமா விமர்சக கோஷ்டிகள்
[ October 31, 2018 ]
============================================================================
முன்பெல்லாம் நீதிபதிகள் சட்டத்துடன் தர்மத்தையும் கலந்து தீர்பெழுதினார்கள்
அவர்கள் சட்டத்தை சமூக இயல்பான வாழ்க்கையோடு உணர்ந்து பார்த்து முடிவுக்கு வந்தார்கள், பல நல்ல தீர்ப்புகள் முன்பு வந்தன
இப்பொழுதுள்ள நீதிபதிகள் கணிப்பொறி போல முடிவுஎடுக்கின்றார்கள், கொஞ்சமும் மனதால் யோசிப்பதில்லை, சிஸ்டம் எனப்படும் அமைப்பு முறை முன்னால் வாத பிரதிவாதங்களை வைத்து முடிவு சொல்கின்றார்கள்
377 தீர்ப்பு, சபரிமலை தீர்ப்பு அதை தொடர்ந்த இந்த தீபாவளி பட்டாசு தீர்ப்பு எல்லாம் இந்த கணிப்பொறி வகை, மனதை கழற்றிவைத்துவிட்டு எந்திரம் போல் எழுதும் வகை
ரோபோ எனும் எந்திரத்தை மருத்துவ ஆப்பரேஷன் பண்ண சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கின்றது, ஆம் கட்டியினை அகற்று என உத்தரவிட்டால் ரோபோ அதை அகற்றுமே தவிர உயிர் பற்றி அதற்கு கவலை இல்லை அல்லது கவலைபட தெரியாது, நோயாளி செத்தாலும் அது கட்டியினை அகற்றிவிட்டு வெற்றி என சொல்லும்
இவர்களும் அந்த வகையே
இதற்கு கம்பியூட்டரிடமே சில சாப்ட்வேர்களை எழுதி கொடுத்தால் அட்டகாசமாக தீர்ப்பு சொல்லும் அதுவும் உடனடியாக நொடிப்பொழுதில் சொல்லும்
உடனே நல்ல மென்பொருள் ஒன்றை உருவாக்கி ஐபிசி செக்சன் எல்லாம் சேர்த்து 4 கம்பியூட்டர்களை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளாக அமர்த்த வேண்டும்
நிச்சயம் இவர்கள் சொல்லும் சில தீர்ப்புகளை விட அது நல்ல தீர்ப்பாக இருக்கும்
[ October 31, 2018 ]
============================================================================
எதற்கு அய்யா இவ்வளவு பெரிய பொய்?
காங்கிரசை வீழ்த்த கருப்புசட்டை திமுகவுடன் தேவர் கைகோர்த்த வரலாறு இல்லையா?
அப்பொழுது திமுகவின் நாத்திக வாதமும், தேவரின் தேசியமும் தெய்வீகமும் கண்களை மூடிகொண்டது
இருவரும் அப்பொழுது குருடராய் இருந்தார்கள்
உங்கள் அட்மினை வரலாற்றை படித்துவிட்டு பதிவுபோட சொல்லுங்கள், இல்லாவிட்டால் ஐகோர்ட்டில் கேட்ட மன்னிப்பை அடிக்கடி கேட்க வேண்டிய நிலை வரும்

தேவரய்யாவினை பொய்யான வழக்கில் சேர்த்ததால் காங்கிரஸ் தமிழகத்தில் தோற்க ஆரம்பித்து, ஒழிந்துவிட்டது : இரு கண்கள் குரூப்
சரி தேவரய்யாவின் பார்வர்ட் பிளாக் கட்சி எங்கிருக்கின்றது என கேட்டால் பதிலே இல்லை [ October 31, 2018 ]