சிதறல்கள்

வைகுண்டராஜன் 800 கோடி வருமான வரி பாக்கி : செய்தி

அண்ணாச்சி ஒரே போடாக 800 கோடி எங்கு கொடுத்தேன் தெரியுமா? என அரசியல்வாதிகளை கைகாட்டினால் முடிந்தது விஷயம், ஆனால் அண்ணாச்சி செய்யமாட்டார்

இப்பொழுது அரசு எழுப்பிவிடும் கேள்விகள் இதுதான், 800 கோடி பாக்கி என்றால் அவரின் வருமானம் எவ்வளவு? எத்தனை ஆயிரம் கோடிகளாக இருந்திருக்க வேண்டும்

எப்படி இவ்வளவு சாத்தியமாயிற்று?

அந்த ககன் தீப்சிங் அறிக்கை என்னாயிற்று? குமரிமாவட்ட கலெக்டர் ஜோதிநிர்மலா கொடுத்த அறிக்கை என்னாயிற்று என ஏக கேள்விகளும் அடுத்தடுத்து பல அஸ்திரங்களும் அண்ணாச்சி நோக்கி பாயும் நேரமிது

ஏதோ திட்டமிட்டு செய்கின்றார்கள், பல விஷயங்களை கசியவிட்டு நுட்பமாக செயல்படுகின்றார்கள் என்பது தெரிகின்றது

இதுவரை “அண்ணாச்சி சிங்கம்லே..” என சொன்ன குரல்கள் எல்லாம், “மக்கா அண்ணாச்சிய சாய்ச்சிட்டாங்கலே..” என்பது போல் மாறி ஒலிக்கின்றன‌

விஷயம் எங்கோ செல்கின்றது பார்க்கலாம்..

இதுவரை எந்த ரெய்டிலும் இத்தனை நூறுகோடி வரிபாக்கி என அறிவிக்கபட்டதில்லை என்பதால் விஷயம் கொஞ்சம் சீரியஸ்

[ November 1, 2018 ]

============================================================================

ஒரு விஷயம் உண்மை, பழனிச்சாமி அரசு அட்டகாசமாக ஆடுகின்றது, சச்சினுக்கு எல்கேஜி பையன் பந்து போட்டால் எப்படி இருக்குமோ அப்படி அசத்துகின்றார் பழனிச்சாமி

எதுவுமே அவர் ஆட்சிக்கு இடைஞ்சல் இல்லை, எதிர்கட்சிகளோ கொஞ்சமும் அவருக்கு சிக்கல் கொடுக்க முடியவில்லை

வழக்குகள் ஒரு பொருட்டே அல்ல என அவர்கள் போக்கில் செல்கின்றார்கள்

டெங்கு, பன்றிகாய்ச்சல் என்றாலும் அரசு சமாளிக்கின்றது, தீபாவளி நேரம் நெருங்கும்பொழுது எழுந்த அரசு போக்குவரத்து கழக ஊழியர் சிக்கலை சமாளிக்கின்றது

உச்சமாக மிக அழகாக தீபாவளிக்கு முன்பு ஒருநாள் விடுமுறை விட்டு நெருக்கடிகளை மக்களுக்கு கொடுக்காதவாறு மிக நேர்த்தியாக செயல்படுகின்றது

நிச்சயம் அதைத்தான் செய்ய வேண்டும், செய்கின்றார்கள்

ஆட்சிக்கு ஒரு நெருக்கடி இல்லை, பெரும் அதிருப்தி இல்லை அவர்கள் போக்கில் பின்னுகின்றார்கள்

இப்படியே போனால் காமராஜருக்கு அடுத்த மிகசிறந்த முதல்வர் என பழனிச்சாமி பெயரெடுத்தாலும் எடுக்கலாம்

முக ஸ்டாலின் என்பவருக்கு இதெல்லாம் ஜென்டில்மேன் எனும் பெயரை கொடுக்குமே தவிர, திறமையான அரசியல்வாதி எனும் பெயரை கொடுக்கவே கொடுக்காது

ஸ்டாலின், அன்பழகன், துரைமுருகன் என பெரும் அனுபவஸ்தர்களை கொண்ட கட்சி, அனுபவமே இல்லா எடப்பாடி கோஷ்டி முன் தோற்றுகொண்டுதான் இருக்கின்றது

எந்த பெரும் சிக்கலையும் அவர்களுக்கு இவர்களால் ஏற்படுத்த முடியவே இல்லை.. [ November 1, 2018 ]

============================================================================

ஜெருசலேமிற்கு தூதரகத்தை மாற்ற பிரேசில் முடிவு

அமெரிக்கா, ஆஸ்திரேலியாவினை தொடர்ந்து இந்த முடிவிற்கு வருகின்றது பிரேசில்

இஸ்ரேலிய வெளியுறவுதுறை எவ்வளவு ராஜதந்திரமாக சாதிகின்றது என்றால் இப்படித்தான்

இனி ஜெருசலேம் பாலஸ்தீனியருக்கு வெறும் பழம் கனவு

[ November 2, 2018 ]

============================================================================

“ராமர் கோயில் வாக்குறுதி நிறைவேற்றாவிட்டால், அடுத்த தேர்தலில் 2 இடங்கள்தான் கிடைக்கும்”: பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

கோவில் கட்டினால் இரண்டு இடங்கள் கூட கிடைக்காது தாக்கரே

[ November 2, 2018 ]

============================================================================

ராகுல்காந்தி அகில இந்திய அளவில் அணிதிரட்ட ஆரம்பித்துவிட்டார், இதுகாலம் பாஜக அனுதாபியான சந்திரபாபு நாயுடுவினை கூட சந்தித்திருப்பது பலரின் புருவங்களை உயர்த்துகின்றது

பலவீனமான நிலையில் பலமிக்க எதிரியினை வீழ்த்த கூட்டணி என்பது அரசியல் தர்மம், சுதந்திர இந்தியாவில் அதை முதலில் சொன்னது திமுக‌

அது தொடக்கத்தில் திணறிகொண்டிருந்த காலத்தில் ராஜாஜி, தேவர் என யாரையெல்லாமோ இழுத்து போட்டுத்தான் காமராஜருக்கு நெருக்கடி கொடுத்து அவரை விரட்டினார்

1984ல் இந்திரா படுகொலை நிகழவில்லை என்றால் ராமசந்திரன் தோற்றிருக்கும் அளவு கலைஞரின் கூட்டணி விளையாட்டு இருந்தது

ஜெயா அக்கிரமம் உச்சத்தில் இருந்தபொழுது கூட்டணி அஸ்திரம் மூலமே திமுக வென்றது, தனிபட்ட வாக்குவங்கி அல்ல‌

2011ல் விஜயகாந்த் வரமறுக்க திமுக தோற்றது

ஆக திமுகவின் கடந்தகால வெற்றி எல்லாம் கூட்டணி தத்துவத்திலேதான் இருந்தது

நிச்சயமாக சூடத்தில் அடித்து சத்தியமாக சொல்லலாம் கலைஞர் இருந்திருந்தால் இப்பொழுது விஜயகாந்த், ராமதாஸ் உட்பட எல்லோரையும் அழைத்து ஒரே மேடை ஏற்றி அக்கிரம ஆட்சிக்கு எதிராக முழுங்கியிருப்பார்

(அப்படியே தேர்தலுக்கும் கொண்டு சென்று வென்று அதன்பின் அவர்களை கழற்றிவிடுவார் என்பது வேறுகதை)

முக ஸ்டாலின் இதில் சொதப்புகின்றார், எல்லோரும் தன்னை தேடிவரவேண்டும் என்ற ஒருவித மகோன்னத மன்னப்பான்மை அவருக்கு இருப்பது போல் தெரிகின்றது அதாவது ஜெயாவிற்கு இருந்த மனப்பான்மை

ஆனால் ஜெயா வேறுஸ்டாலின் வேறு

ஆனானபட்ட ராகுலே இறங்கி வரும்பொழுது ஸ்டாலின் இல்லாத கிரீடத்தை இருப்பதாக நினைத்து கொண்டிருப்பது சரி அல்ல‌

நிச்சயம் காங்கிரஸ் சுருங்குவது நாட்டுக்கு நல்லது அல்ல, பாஜகவிற்கு ஒரு எதிர்சக்தி வேண்டும்

அப்படியே திமுக பலவீனமாவதும் தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல, நிச்சயம் இங்கு வலுவான சக்தியாக திமுக வேண்டும்

ஸ்டாலின் இதை மனதிற்கொண்டு ராகுல் வழிக்கு திரும்பினால் திமுகவிற்கு நல்லது, தமிழகத்திற்கும் நல்லது

இந்த படத்தை கவனியுங்கள், இங்கு இருக்க வேண்டியவர் முக ஸ்டாலின், அவர் சொன்னது போல பாஜகவினை வீழ்த்த அவர் இங்குதான் இருந்தாக வேண்டும்

மற்றபடி வாய்ப்பே இல்லை

ஆனால் அவரோ குங்குமம் வைப்பதும் அழிப்பதுமாக விளையாடி திரிகின்றார், இதை சொன்னால் உபிக்கள் ஓவர்டைம் எல்லாம் எடுத்து திட்டுகின்றார்கள்

( ஆழமாக யோசித்தால் என்ன சொல்லமுடியும், இங்கு வராத ஸ்டாலின் என்ன செய்கின்றார்?

பழனிச்சாமிக்கும் மோடிக்கும் ரகசிய ஆதரவு கொடுக்கின்றார் என்றுதான் விஷயம் முடியும்..)

[ November 2, 2018 ]

Image may contain: 7 people, people smiling

============================================================================

வ.உ.சியின் வாரிசுகள் வறுமையில் தவித்துக் கொண்டிருக்க, வல்லபாய் பட்டேலுக்கு 3,000 கோடியில் சிலை ஒரு கேடா : அங்கிள் சைமன்

மிஸ்டர் சைமன், ஈழமக்களில் பலர் இன்னமும் வீடு இன்றி விவசாய நிலமின்றி நோயிலும் அங்கவீனத்திலும் வாழ்ந்திருக்க, பல ஈழ சிறுவர்கள் கல்விக்காய் தவித்திருக்க உமக்கு மாளிகை வீடும், இட்சூ காரும் பிரியாணியும் தேவையா?

ஏன் முன்னாள் புலிகளே கை கால் இன்றி, சிலர் வாழ வழியின்றி தற்கொலை செய்யும் அளவு வாடியிருக்க உமக்கு இங்கு 10 பவுன்சர்களுடன் சுற்றிவரும் அலப்பறை காட்சி தேவையா?

அருகிருக்கும் அகதி முகாமில் ஒரு ஈழதமிழருக்கு அரை கரண்டி சோறு கொடுத்திருப்பீரா? [ November 2, 2018 ]

============================================================================

படேலைப் போல், மகாத்மா காந்திக்கு ஏன் மிகப்பெரிய சிலையை பாஜக எழுப்பவில்லை?’: சசி தரூர் கேள்வி

யோவ், இது பாஜக காங்கிரஸை பார்த்து கேட்க வேண்டிய கேள்வி.

ஆமாம் நீங்கள் ஏன் காந்திக்கு பிரமாண்ட சிலை வைக்கவில்லை?

[ November 2, 2018 ]

============================================================================

புத்தம் புதிய போன் வேண்டுமா? உங்கள் பழைய ஓட்டை போனை சிவகுமார் முன் நீட்டி செல்பி எடுப்பது போல் நடித்தால் போதும்

அட்டகாசமான போன் வீடுதேடி வரும்…

[ November 2, 2018 ]
Image may contain: 3 people, text
============================================================================

பிராமணர்களுக்கு தமிழ்பற்று இல்லை, தமிழ் விரோதிகள் என்பதெல்லாம் இங்கு வெறுப்பு அரசியல் அதில் வாக்கு வாங்கும் அயோக்கிய அரசியல்

அந்த உ.வே சாமிநாத அய்யரும், பாரதியும் இன்னும் பல பிராமணர்களும் தமிழ் வளர்த்த அளவு இன்னொருவர் வளர்க்க முடியாது

அப்படிபட்ட பிராமண வரிசையில் ஒருவர்தான் பரிதிமாற் கலைஞர், தமிழ் செம்மொழி என முதலில் முழங்கியவர் அவர்தான்.1903ல் அவர் சொன்னதுதான் 100 வருடம் கழித்து கலைஞர் ஆட்சியில் பலித்து தமிழ் செம்மொழி ஆனது

அவரின் இயற்பெயர் சூரியநாராயண சாஸ்திரி அது வடமொழி என்பதால் அதற்கு மிக சரியான பெயராக பரிதிமாற் கலைஞர் என மாற்றிகொண்டு தமிழராக நின்றார்

(இப்பொழுதெல்லாம் சைமன் என்பதை சீமான் என மாற்றி தமிழரறிஞர் ஆகிவிடுகின்றார்கள்..)

சாஸ்திரி எனும் சொல்லுக்கு சாதி அடையாளமின்றி கலைஞர் என தமிழ்படுத்தியவர் அவர்

தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டு கொஞ்சமல்ல, ஏராளமான நூல்களை எழுதினார், 10 நூல்களை எழுதினார் பல நூல்களை புதுப்பித்தார்

இவ்வளவிற்கும் அவர் வாழ்ந்தது 33 ஆண்டுகள் மட்டுமே

பாரதியினை விட குறைவாக வாழ்ந்த அந்த தமிழறிஞர் தமிழுக்கு செய்த தொண்டு அளப்பறியது

அவருக்கு இன்று நினைவு நாள், தமிழ் உலகம் மறக்க முடியா அந்த பரிதிமாற் கலைஞருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

[ November 2, 2018 ]

Image may contain: 1 person, closeup