சிதறல்கள்
“அர்ரே ராகுல்ஜி, தெரியாம ரதம் எல்லாம் ஏறி கட்சி வளர்த்துட்டேன் , பெரிய தப்பு பண்ணிட்டேன்
எங்களுக்கு எல்லாம் மதவாதமுமில்ல மண்ணாங்கட்டியுமில்ல, ராமர் கோவில் எல்லாம் கட்டவே மாட்டோம்.
என்ன மன்னிச்சிருங்க ஜி, போபர்சுக்கு பொங்கியது நானேதான், ஆனா ரபேல் கொள்ள எங்கயோ போயிட்டு, மோடிய பிரதமராக்கி நாட்டை கெடுத்தது நானேதான், ராகுல்ஜி எப்படியாவது நாட்ட காப்பாதுங்க ஜி
அப்படியே என்னையும் காப்பாத்துங்க ஜி..”

முருகன் முப்பாட்டன் அவனுக்கும் வீரவணக்கம்
நரகாசுரன் பெரும்பாட்டன் அவனுக்கும் வீரவணக்கம், அவனை கொன்ற கண்ணனும் மூதாதை
கொல்லபட்டவனுக்கும் வணக்கம், கொன்றவனுக்கும் வீர வணக்கம்
ஏதாவது புரியுமா? புரியாது அதுதான் தமிழ் தேசியம்
அதாவது யார் பிறந்தநாள் வந்தாலும், யாருக்காவது இறந்த நாள் வந்தாலும் முஷ்டி தூக்கி வந்து வீரவணக்கம் செலுத்தும் விநோத நோய் இது
அது காந்தியாக இருந்தாலும் சரி, சந்தண வீரப்பனாக இருந்தாலும் சரி
கண்ணனாக இருந்தாலும் சரி, நரகாசுரனாக இருந்தாலும் சரி, அஞ்சலி செலுத்தியே தீருவார்கள்
அஞ்சலி செலுத்தி கொண்டே இருப்பதில் அவர்களுக்கொரு சந்தோஷம், யாருக்காக? எதற்காக என்பதுபற்றி எல்லாம் கவலையே படாத கூட்டம் அது.
ஒருவகையான மெண்டலி சேலன்ஞ் இந்த நோய், சிக்மென்ட் பிராய்டே இவர்களை கண்டால் தலை தெறிக்க ஓடிவிடுவார்.
முருகன் முப்பாட்டன் என்றோமே, கண்ணனை மூதாதை என்றோமே, அவர்களால் கொல்லபட்ட அசுரனையும் முப்பாட்டன் என்கின்றோமே அப்படியானால் நாம் யார்? என்ற விவஸ்தை எல்லாம் கொஞ்சமும் கிடையாது
ஆக தேவருக்கும் அசுரருக்கும் கிராஸில் பிறந்த கூட்டமா தமிழர், ஒரு தகப்பனுக்கு பிறக்காத கூட்டமா தமிழர்? என செவிட்டில் அடித்து கேட்டால் என்ன சொல்வார்களோ தெரியாது….
[ November 5, 2018 ]
============================================================================
தீபாவளி என்றால் ஒவ்வொரு வியாபாரியும் ஒரு ரகம், அரசு எனும் வியாபாரி இந்த ரகம்
அவரவர் கவலை அவரவர்க்கு..
திங்கள்கிழமை விடுமுறை என இதற்குத்தான் சொனனர்களோ என்னமோ

இந்த மண்டபம் ராமநாதபுர மன்னன் சேதுபதியால் 1740 வருடம் கட்டபட்டது, முத்துகுளித்தல் வைகையாற்று நீர் என ராமநாதபுரம் செழிப்பாக இருந்த காலங்கள் அவை, கூடுதலாக செட்டியார்களின் வியாபாரமும் அவர்களுக்கு கை கொடுத்தன
அப்பொழுது கடபட்ட மண்டபம் அது
யாரோ ஒரு நாம் தமிழர் கோஷ்டி தன் வெறிகொண்ட கண்களால் இதன் வரலாற்றை வாசித்திருக்கின்றது, தன் வழக்கமான ஸ்லோகமான உரத்த குரலில் 1740ம் ஆண்டில் கட்டபட்ட ஆலயத்தை 1740 ஆண்டுகளுக்கு முன்பே கட்டியவன் தமிழன் என சொல்லிற்று
(தஞ்சை பெரியகோவிலே 1000 ஆண்டுகளுக்கு முன்புதான் கட்டபட்டது..)
ஆக ராமேஸ்வரம் கோவில் 1740 ஆண்டுகளுக்கு முன்பே கட்டபட்டது என யாரோ ஒரு சைமன் கோஷ்டி சொன்ன பொய்யினை நம்பி அதை டிவிட் செய்திருக்கின்றார் ஜிவி பிரகாஷ் எனும் போராளி
சைமன் கோஷ்டியினை நம்பினால் இப்படித்தான் அவமானபட வேண்டி இருக்கும் மிஸ்டர் பிரகாஷ்
சும்மாவே 2000 வருடத்திற்கு முன்பே கப்பல் படை வைத்திருந்த ஜூலியஸ் சீசர் , 1000 வருடத்திற்கு முன்பு வந்த ராஜராஜ சோழனின் கடற்படையினை காப்பி அடித்தான் என வெட்கபடாமல் சொல்லும் கோஷ்டி அது
அவர்களிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள், இல்லாவிட்டால் உங்களை கையில் இருக்கும் கீபோர்டு நான்காம் நெடுஞ்செழியன் கண்டுபிடித்தது என சிரிக்காமல் சொல்வார்கள்
[ November 5, 2018 ]

ரஜினிகாந்த் கட்சி தொடங்க மாட்டார் : ஈவிகேஸ் இளங்கோவன்
இது பெரிய கண்டுபிடிப்பா?, இதுதான் உலகிற்கே தெரியுமே அய்யா, லதா ரஜினிகாந்திடம் கேட்டாலே சொல்லிவிடுவார்
[ November 5, 2018 ]
============================================================================
எங்கள் மீதான தடையினை நீக்காவிட்டால் மீண்டும் அணு ஆயுதம் செய்வோம் : வடகொரியா மிரட்டல்
ஒழுங்காக திருந்தி ஆட்டோக்காரனாக இருந்த மாணிக்கம், மறுபடியும் பாஷாபாய் ஆகிவிடுவேன் என மிரட்டுகின்றார்
அவரும் என்ன செய்வார், அவரிடம் இருந்ததே அணுகுண்டு மிரட்டல்ஒன்றுதான், அதற்காக கடும் பொருளாதார தடையினையும் சந்தித்தார்
டிரம்ப் என்ன சொன்னார்? அணுகுண்டை தூர எறிந்தால் பொருளாதார தடை நீக்கபடும் என்றார் இதற்காக சிங்கப்பூர் எல்லாம் வந்து வணக்கம் வைத்தார் கிம், அதன் பின்னும் கடிதம் எல்லாம் எழுதினார்
ஆனால் டிரம்போ இப்பொழுதுதான் உன்னிடம் அணுகுண்டு இல்லையே, இனி ஏன் தடையினை நீக்க வேண்டும் என கடுப்பேற்ற மனிதர் கண்கள் சிவக்கின்றார்
ஏற்கனவே சீனாவுடன் முறுகல் ஏற்பட்டிருக்கும் நிலையில் அமெரிக்காவிற்கு கடுப்பெற்றும் விதமாக வடகொரியா ஏதும் அதிரடி காட்டினாலும் காட்டலாம்
[ November 5, 2018 ]
============================================================================
”சபரிமலை ஸ்வாமி ஐயப்பன், கடவுளே இல்லை” : பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ் மனிதனே இல்லை என முன்னாள் மனைவி லலிதா குமாரியும். அவரின் அண்ணி டிஸ்கோ சாந்தியும் சொல்லியிருப்பது குறிப்பிடதக்கது
இப்படி ஒருவிரலை தூக்கிவிட்டு வந்தால் அந்த விஷயம் மிகபெரும் தோல்வி என்றும் மக்கள் வெறுப்பை சம்பாதிக்கும் என்பதும் வரலாற்று பாடம்
சன்டிவி இப்பொழுதே சர்க்காரை தலை முழுகிவிட்டால் நல்லது


இந்த தீபாவளி பட்டாசு விவகாரம் பெரிதாகும் போலிருக்கின்றது, தமிழக அரசு மிக இறுக்கமான விஷயங்களை கையாளும் போல் தெரிகின்றது
இப்பொழுது இந்துக்கள் தவிர யாவரும் அமைதி
அதிகமில்லை, இன்னும் ஒரே மாதம்தான் கிறிஸ்மஸ் கொண்டாடடத்திற்கும், புதுவருட கொண்டாட்டத்திற்கும் இது நிச்சயம் பொருந்தும்
தீபாவளிக்கே காலை மாலை 1 மணிநேரம் வெடியுங்கள் என சொல்லிவிட்டு கிறிஸ்மஸ் மற்றும் புதுவருடத்திற்கு நாள் முழுதும் வெடியுங்கள் என சொல்ல முடியாது
இதே இரு மணி நேரம்தான் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக்கு
ஆனால் அப்பொழுது எப்படி கிளம்புவார்கள் தெரியுமா
“இந்துத்வா மோடி அரசு கிறிஸ்தவர்களை கொடுமைபடுத்துகின்றது, கிறிஸ்துமஸை கொண்டாட விடாமல் தடுக்கின்றது
அதோ இவர்களை அழிக்க இயேசு வருகின்றார், வந்தே விட்டார். மோடியின் இந்துத்வ வெறி அரசு ஒழிக, கர்த்தராகிய ஆண்டவர் மோடியினை ஒழித்து கட்டி நாளெல்லாம் வெடி வெடிக்க அதிசயம் செய்வாராக
இயேசுவின் ரத்தத்தால் மோடி ஒழியட்டும், வெடி வெடிக்கட்டும் அல்லேலூயா ஆட்டுக்கால் பாயா” [ November 5, 2018 ]
============================================================================
ஏர் ரகுமான் சொந்த வாழ்க்கையினை புத்தக மாக்கிவிட்டாராம், இன்னும் அவருக்கு காலம் இருக்கும் பொழுது இப்பொழுதே எழுதிவிட்டார், அநேகமாக முதல் பாகமாக இருக்கலாம்
அதில் தனக்கு தற்கொலை எண்ணம் இருந்ததாக சொல்லிவிட்டாராம், யாருக்கு இல்லை?
திறமைசாலிகளின் நெருக்கடியான நேரங்களில் எல்லாம் பலருக்கு இருந்திருக்கின்றது
ஆனானபட்ட ராபர்ட் கிளைவே அந்த முடிவில் இருந்திருக்கின்றான் அதன் பின்பே இந்தியாவினை ஆண்டான்
போராட்ட நேரங்களில் தற்கொலை எண்ணம் ஏற்படாமல் போராடியது கலைஞர் போல வெகு சிலரே
அது இருக்கட்டும், தன் சுயசரிதையில் எங்காவது இளையராஜா பற்றி ரகுமான் சொல்லியிருக்காரா என்றால் அதிகமில்லை என தலையாட்டுகின்றார்கள்
என்ன இருந்தாலும் ரகுமான் தன்னை கூர்தீட்டிய பட்டறை அது, அதனை அதிகம் சொல்லியிருக்கலாம்
அந்த வயலில் முளைத்த நாற்றான திலீப்குமார் பின்னாளில் மணிரத்தினத்தால் தனியாக ரகுமான் என நடபட்டார்
அதை பற்றி எல்லாம் ரகுமான் சொல்லவில்லை என்கின்றார்கள், எல்லோருக்கும் நன்றி இருக்க வேண்டுமென என்ன நியதி இருக்கின்றது?
[ November 5, 2018 ]
============================================================================
என்ன பெரிய தீப ஒளி பண்டிகை?
கோடி தீபம் எரிந்தாலும் இந்த முகத்தின் ஒளி வருமா? வரவே வராது
ஆக தீபாவளி கொண்டாடும் இந்தியாவின் ஒளியும் அழகும் மிகுந்த ஒரே தீபம் இந்த முகம்.
அந்த பெருமையில் சங்கம் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிகின்றது

தீபாவளி இந்தியாவின் நம்பர் ஒன் பண்டிகை, ஆயிரம் தேர்தல் வந்தாலும் தீபாவளிக்கு போட்டி தீபாவளி மட்டுமே, பல வகையான காரணங்களை சொல்வார்கள்,
அதனில் முதலானது நரகாசுர வதம். இன்னொன்று ராவணனை வதைத்த ராமபிரான் அயோத்தி திரும்பியபொழுது மக்கள் தீப ஓளியேற்றி மகிழ்ந்தார்கள் என்பதும் இந்துசமய நண்பர்களின் நம்பிக்கை.
மிகபழமையான ஆனால் தற்போது சுருங்கிவிட்ட சமண மதத்தவருக்கு, அந்நாளில்தான் மகாவீரருக்கு அறிவொளி ஞானம் கிடைத்தது, அதனால் தீபமேற்றி கொண்டாடவேண்டும் என்பது அவர்களின் நம்பிக்கை, அவர்களும் கொண்டாடுவார்கள்.
இன்னும் ஒரு தீபாவளி நாளில்தான் அமிர்தசரஸ் பொற்கோயிலை கட்ட அடித்தளமிட்டார்கள் என்பது சீக்கியர்களின் நம்பிக்கை, அவர்களும் சிறப்பிப்பார்கள்.
இவ்வாறாக சகல மக்களும் கொண்டாடும் தீபாவளி பண்டிகை, ஒளி வந்தது அல்லது இருள் அகன்றது,தீமை அகன்றது என்பதனை குறிக்கின்றது.
தீமைகள் நம்மை விட்டு அகலவேண்டும் என்பதற்காக முதல்கடமையாக எண்ணெய் குளியலை கட்டாயமாக்கி வைத்திருக்கின்றது.
அவ்வகையில் நமது நண்பர்களின் இல்லங்களிலும் தொழிலிலும் தீமைகள் அகலட்டும், நன்மைகள் பெருகட்டும் என வாழ்த்துவோம்.
பல நண்பர்கள் தீபாவளிக்காக பெரும் பயணத்தில் இருப்பார்கள், அவர்களின் பயணம் பாதுகாப்பாக அமைய வாழ்த்துவோம்.
குடும்பத்தோடும், சொந்தங்களோடும்,சொந்த மண்ணில் தீபாவளி கொண்டாடுவது ஒரு பெரிய வரம்.
உறவுகள் ஒன்றாகி கொண்டாடும் தருணத்தை விட மேலான சொர்க்கம் எங்கு இருக்கின்றது??
பாதுகாப்பான பயணமும், ஆரோக்கியமான உணவும் அமைந்து எல்லோரும் தீபாவளியினை மகிழ்ச்சியாக கொண்டாட வாழ்த்துக்கள்.
தேசத்தில் இம்மாதிரி பண்டிகைகளை ஒற்றுமையினை வளர்க்கும் விஷயமாக எடுத்துகொள்ளவேண்டும், எல்லா மக்களும் இணைந்து கொண்டாடுவோம்
இந்து சகோதரர்களின் மகிழ்ச்சியில் பங்கெடுத்து, அவர்கள் மகிழ்வினை இரட்டிப்பாக்குவோம்
விழாக்களின் சுவாரஸ்யமே சந்திப்பும் , நல்ல விருந்து உணவுமே. அவ்வகையில் உறவுகளை சந்தித்து நல்ல உணவினை கொண்டாடி உண்ண வாழ்ந்த்துக்கள்
நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
[ November 5, 2018 ]

“ஏங்க, உங்க தம்பிங்க சும்மா இருக்க மாட்டானுக
அண்ணே நீங்க 10 ஆயிரம் சிங்களன் துப்பாக்கி எடுத்து சுடும்போதே , சிங்கள கடற்படை பீரங்கியால் சுடும்போதே ஈழத்துல பயப்படாம நடந்தவரு
தமிழ்நாட்டு போலிஸ் முன் வெடி வெடிக்க பயப்படலாமா? தமிழன் வீரம்னா என்னன்னு உலகத்துக்கு காட்டுவோம், வாங்க 10 மணிக்கு வெடிவெடிப்போம்னு கூப்பிடுவாங்க, போய்ராதீங்க முன் ஜாமீன் கூட இல்ல, சொன்னா கேளுங்க

பட்டாசுக்கு தடை என்பது நாடார்களை ஒழிக்கும் சதி : புலிப்பால் சித்தர்கள்
புலிப்பால் குடித்தால் இப்படி எல்லாம் பேச சொல்லும் போல.
[ November 5, 2018 ]
============================================================================
” திருட்டு கதை எடுக்கும் திருடர்கள்சினிமாவில்தான் சர்கார் அமைக்க முடியும்; நிஜத்தில் முடியாது, ’- விஜய் மீது தமிழிசை கடும் தாக்கு
அக்கோவ், அந்த படம் தானாவே கவிழும், இப்படி எல்லாம் பேசி படத்திற்கு பிரமோஷன் கொடுத்து ஓட வைத்துவிடாதீர்கள்
[ November 5, 2018 ]
============================================================================
கதை திருட்டை கண்டுபிடிப்பது சிரமான காரியம்: பா.ரஞ்சித்
அன்னார் ஏற்கனவே பல திருட்டுகதை விவகாரங்களில் சிக்கியவர் மெட்ராஸ் பட கதை திருட்டு முதல் மும்பை திரவியநாடார் கதையினை திருடியது வரை சர்ச்சை வரிசை அதிகம்
அதனால் அன்னார் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்
[ November 5, 2018 ]