திரைச்செய்திகள்

இந்த நடிகையர் திலகம் படத்தை இப்பொழுதுதான் பார்க்க முடிந்தது , சாவித்திரி கதையின் 75% உண்மையினை சொல்லி இருக்கின்றார்கள் மற்றபடி ஜெமினி பற்றி சொன்னதெல்லாம் சரி அல்ல‌

ஜெமினி அவரை குடிக்க பழக்கவுமில்லை, அவர் வாழ்வு திசைமாற காரணமுமில்லை

மற்றபடி அற்புதமான படம் அது, சாதாரண ஏழை சிறுமி சாவித்திரி 20 வயதிற்குள் சினிமாவில் உச்சம் பெற்று மாபெரும் செல்வத்தில் புரள்கின்றார்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டு, அதாகபட்டது சாவித்திரி சிவாஜி எல்லாம் சினிமாவில் சம்பாதித்தார்கள், சாவித்திரி அன்றே லட்சம் லட்சமாக குவித்தார்

இதே காலத்தில் இவர்களுக்கு முன்பாக குவித்தவர்தான் கருணாநிதி, சந்தேகமில்லை 1955ளிலே அவர் வாங்கிய சம்பளமும் அன்பளிப்பும் அப்படி

சாவித்திரி அபியுலா சாலைக்கு வருமுன்பே கோபாலபுரத்தில் சொந்த வீட்டில் குடியேறியவர் அவர், அப்படியே தன் சம்பாததியத்தை முதலீடும் செய்திருந்தார்

சாவித்திரி சினிமாவில் சம்பாதித்தை ஒப்புகொள்கின்றார்கள், ஆனால் கலைஞர் மட்டும் திருட்டு ரயிலில் வந்து ஊழலில் சம்பாதித்தார் என சொல்லி மகிழ்கின்றார்கள்

அவர்கள் அப்படித்தான், ஆனால் சாவித்திரியினை விட அன்றே செல்வத்தை குவித்தவர் கலைஞர்

படத்தில் சொல்ல வேண்டிய விஷயம், கீர்த்தி சுரேஷ். மிக பிரமாதமான‌ நடிப்பு

சாவித்திரி போலவே கெட் அப் மட்டுமல்ல, தலைசாய்த்து ஆடுவது கையினை கன்னத்தில் வைப்பது, அவரை போலவே சிரிப்பது அழுவது என பின்னியிருக்கின்றார்

தட்டு நிறைய லட்டை வைத்துகொண்டு சாவித்திரி போலவே அசால்ட்டாக விழுங்கும் காட்சியில் எல்லாம் பின்னுகின்றார்

அட்டகாசமான நடிப்பு, சாவித்திரியினை கண்முன் நிறுத்திவிட்டார், வாழ்த்தாமல் இருக்க முடியாது

அவருக்குள்ளும் ஒரு மாபெரும் நடிகை இருகின்றார் என்பதை ஒப்புகொள்ளத்தான் வேண்டும்

இந்த வருடத்திற்கான குஷ்பு விருதினை கீர்த்தி சுரேஷுக்கு வழங்க சங்கம் முடிவெடுத்தாயிற்று

[ November 8, 2018 ]

============================================================================

நீர்தான் தைரியமான ஆளாச்சே, எங்கே உங்களின் வரப்போகும் படங்களில் இப்படி காட்சிகளை வைத்துவிடும் பார்க்கலாம்..

வைத்துவிட்டு சொல்லுமய்யா, சும்மா கண்டிக்க கிளம்பிவிட்டாராம்

[ November 9, 2018 ]
Image may contain: text
============================================================================

ஒன்றுமட்டும் நன்றாக புரிகின்றது

அன்றே குமாரசாமி ராஜாவோ, காமராஜரோ இல்லை பக்தவத்சலமோ இப்படி களமிறங்கி இருந்தால் அதாவது சினிமாவினை அடித்து துவைக்க ஆரம்பித்திருந்தால் பல விபரீத விஷயங்கள் நடந்திருக்காது

பின்னாளில் கலைஞரும் செய்திருந்தால் ராமசந்திரனின் இந்த இம்சை படங்களான இதயகனி போன்றவை வந்திருக்காது, உறுதியாக சொல்லலாம் கலைஞர் ராமசந்திரனை அரசியல் ரீதியாக எதிர்த்தாரே அன்றி சினிமா ரீதியாக அவர் முடக்க நினைக்கவே இல்லை

கலைஞரின் சுபாவம் அது, அரசியல் வேறு சினிமா வேறு என்பதில் மிக பெருந்தன்மையாக இருந்தார்

முதன் முதலில் சினிமாவினை கண் வைத்து தேவைபட்டால் மிதிக்க கால் வைத்தவர் ராமசந்திரன்

“அண்ணே, அண்ணே சிப்பாய் அண்ணே நம்ம ஊரு கெட்டு போச்சிண்ணே” என பாடல் எழுதிய கங்கை அமரன் பட்ட பாடு கொஞ்சமல்ல‌

அன்று வளரும் நடிகரான ரஜினி மேல் அவருக்கு அச்சமும் எரிச்சலும் இருந்தது , தன் முடியா படங்களின் இரண்டாம் பாகம் கூட ரஜினியால் முடிக்கபட கூடாது என்பதில் கவனமாக இருந்தார்

சினிமாவில் ஜெமினி கணேசனின் வாரிசாகும் பாக்யராஜை என் கலையுலக வாரிசு என சொல்லி காமெடி செய்யவும் அவர் தவறவில்லை

சினிமாவினை குரங்காக ஆட்டி வைக்க வேண்டும் என்பது அதிமுகவின் கொள்கை

ராமசந்திரன் செய்ததை ஜெயா தொடர்ந்தார், ஜெயா தொடர்ந்ததை இப்பொழுது இந்த அரசும் தொடர்கின்றது

[ November 9, 2018 ]

============================================================================

என்ன சொன்னாலும் யாரும் கண்டு கொள்ள மாட்டேன் என்கின்றார்கள் , பழனிச்சாமியினை அனுதினமும் கண்டித்தாலும் சத்தமில்லை

என்னடா செய்யலாம் என மல்லாக்க படுத்திருந்த பாமாகாவிற்கு சர்க்கார் கிடைத்துவிட்டது

கதை அவர்களுக்கு சிக்கலே இல்லை, புகையே சிக்கல்

ஆம், படத்தில் 5 முறை விஜய் புகை பிடித்தாராம், விடுவார்களா? புகை பிடித்த விஜயண்ணாவின் படத்தினை சிறைபிடிப்போம் என கிளம்பிவிட்டார்கள்

நாம் முன்பே சொன்னதுதான்

தமிழகம் ஒரு வித்தியாசமான மாநிலம், யார் எங்கிருந்து எப்பொழுது அடிப்பார்கள் என்றே தெரியாது ஆனால் ஒருவனை குறிவைத்துவிட்டால் இருட்டறையில் முரட்டு குத்தாக குத்துவார்கள்

இந்திராவும், மோடியுமே அலறி அடித்து ஒடிய தமிழகம் இது

இங்கு விஜயண்ணாவினை மட்டும் விடுவார்களா, அரசியலில் எப்படி எல்லாம் அடிப்பார்கள் என்பதற்கு ஆளுநரே சாட்சி

[ November 9, 2018 ]

============================================================================

சர்க்கார் விவகாரம் இன்னும் மகா காமெடி ஆகின்றது

ஏகபட்ட கோஷ்டிகள் ஊர்வலமாய் வந்து இந்த திருவிழாவில் ஆட்டம் போட வருகின்றன‌

ஏற்கனவே ஆசான் ஜெமோவின் கும்பல் ஒருபக்கம் குதிக்க, அதிமுகவினர் மறுபக்கம் குதிக்கின்றன‌

இதில் இந்த பாமக வேறு வந்தாயிற்று, பாமக வந்தால் விடுவாரா ரஜினி? பாபா நினைவுகள் எல்லாம் வந்து அவரும் வந்துவிட்டார்

இதில் முருகதாஸின் ரத்த சோதனை முடிவிற்காக காத்திருந்தவர்களும் வந்தாயிற்று ஆம் முருகதாஸ் நாடாராம், ராக்கெட் ராஜா என்பவர் எல்லாம் வந்துவிட்டதால் விஷயம் உண்மையாக இருக்கலாம்

இன்னும் யாரெல்லாம் வருவார்களோ தெரியாது, சிங்கம் , பிலி , கரடி , யானை என பல ஆட்டங்கள் நடக்கும் அரங்கம் போல சர்க்கார் அரங்கம் சர்கஸ் அரங்கமாக மாறி கொண்டிருக்கின்றது

இன்னும் ஜிம்னாஸ்டிக் விளையாட்டு ஆரம்பிக்கவில்லை, அதில் தலைகீழாக தொங்க போவது யார் என தெரிய மிக ஆர்வமாக சர்கஸ் ரசிகர்கள் உள்ளனர்

[ November 9, 2018 ]

===========================================================================

“இந்த கிறுக்கு கவிதை எழுதி என்னத்த கண்டோம், ஆசான் ஜெயமோகன் போல் ஆகவேண்டும்

என்ன செய்யலாம், மூன்றாம் கலைஞரின் அடுத்த படத்திற்கு வசனம் எழுதினால் ஆசான் அளவுக்கு ஹிட் ஆகிவிடலாம்.

தளபதியிடம் மெதுவாக‌ கேட்டு வைப்போம்..”

[ November 9, 2018 ]
Image may contain: 1 person, closeup
==========================================================================

“ஏனுங்க நாட்டு சர்க்கார் காரங்களா
உங்களுக்காக‌ தாமிரபரணியில் எல்லாம் முங்கி இருக்கேன், அடுத்து எங்கே மூழ்கணும் கங்கையிலா

சொல்லுங்க உடனே வந்து மூழ்குறேன், அகோரி சாமியார் ஆகணுமா ஆகுறேன், ஆனால் தம்பிய மட்டும் விட்ருங்க, பாவம் அவன் அழுகை தாங்க முடியல…”

[ November 9, 2018 ]
Image may contain: 2 people, people smiling, people standing
============================================================================

“நெலமையே சரியில்லை சார், டயலாக்கே வேண்டாம்

இங்க என்ன சொன்னாலும் அடிப்பாங்க போல இருக்கு அதுனால இந்த வாலி படத்துல வர்ற மாதிரி வாய் பேசாத கேரக்டரா வச்சிருங்க ப்ளீஸ்..”

[ November 9, 2018 ]
Image may contain: 2 people, beard
============================================================================

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

அடேய் சினிமா அல்ட்ராசிட்டிஸ், கலைஞர் எவ்வளவு பெருந்தன்மையான மனிதர் என இனியாவது உணர்ந்துகொள்ளுங்கள்

இன்று இருந்தாலும் திரைகலைஞர்களுக்கு ஒரு சிக்கல் என்றால் வரத்தான் செய்வார் அந்த மனிதர்

இனி சினிமா கோஷ்டி அடிக்கடி கோர்ட் பக்கம் செல்ல வேண்டி இருக்கும் , அப்படி போகுமுன் அவர் சமாதியில் மன்னிப்பு கேட்டுவிட்டு செல்லுங்கள்