மத நம்பிக்கை

loy

இந்நாடு மத சார்பற்ற நாடு, அதற்காக இன்னொரு மத நம்பிக்கைகளை சீண்டுவோம் என இன்னொரு மதப்பிரிவு இறங்குமாயின் அது நிச்சயம் கண்டிக்கதக்கது, தண்டிக்க தக்கது

அப்படி மாபெரும் பாதகத்தை செய்திருக்கின்றது லயோலா கல்லூரி, ஜெயா இருந்தால் இந்நேரம் நிச்சயம் விளைவுகள் பயங்கரமாக இருந்திருக்கும், அம்மணி இல்லை

விஷயம் என்னவென்றால் நாம் ஏற்கனவே சொன்னதுதான் சில கிறிஸ்தவ கல்லூரிகளில் இத்தேசத்திற்கும் இந்து மதத்திற்கும் எதிரான கருத்துக்கள் விதைக்கபடும், விஷ செடிகள் வளர்க்கபடும்

அதுவும் எனப்படும் கத்தோலிக்க இயக்கம் இருக்கும் இடமெல்லாம் இந்த அட்டகாசம், தேசவிரோதம் நிறைய நடக்கும்

நக்ஸலைட் சிந்தனை, திராவிட பிரிவு சிந்தனை, தமிழ் தேசிய சிந்தனை எல்லாம் இங்கேதான் கொடூர பொய்யாக விதைக்கபடுகின்றன, வைகோ போன்றவர்கள் அப்படித்தான் உருவாக்கபட்டனர்

இந்த திருச்சி வளனார் கல்லூரியும், சென்னை லயோலா கல்லூரியும் அதில் கைதேர்ந்தவை. திருச்சி கல்லூரி அடிக்கடி இந்த சர்ச்சையில் சிக்கும், அங்கிள் சைமனை பேச அழைப்பார்கள் , இன்னும் பல மதவிரோத, தேசவிரோத காரியங்களை , கசாப்புகடைக்காரன் கடமை உணர்ச்சியில் ஆடுவெட்டுவது போல மனசாட்சியே இல்லாமல் செய்வார்கள்

அவர்கள் பயிற்சி அப்படி

அப்படிபட்ட லயோலா கல்லூரி நேற்று ஒரு கண்காட்சி என்ற பெயரில் இந்துமக்களையும் இத்தேசத்தையும் கடுமையாக சீண்டி இருக்கின்றது, சபரிமலை விவகாரத்தையும் இழுத்திருக்கின்றது

இந்துமதம் பெண்களை அடிமை செய்கின்றது என்றும், இந்து மதத்தின் பெரும் அடையாளங்களை எல்லாம் மிக அசிங்கமாக கொச்சைபடுத்தி செய்ய கூடா பாதகங்களை செய்கின்றது

இந்துக்கள் திரும்ப கேட்க நெடுநேரம் ஆகாது

கேரளாவின் பாவமன்னிப்பு சம்பபங்களும், சபையில் நடக்கும் அசிங்கங்களை வெளியில் சொன்ன கன்னியர்களை பழிவாங்கியதெல்லாம் என்ன வகை? இந்துக்கள் கண்காட்சி நடத்தினால் தாங்குவீர்களா?

போப்பாண்டவரே சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை புரியும் பாதிரிகளுக்கு எதிராக சொன்ன புகழ்பெற்ற வாசகங்களை படமாக வரைந்து கண்காட்சி நடத்த தயாரா?

இன்றும் கிறிஸ்தவம் பெண்களை பீடமேறி திருப்பலி நிறைவேற்ற அனுமதிக்கின்றதா?

அட அவ்வளவு ஏன் இயேசு சபை என சொல்லபடும் சபை , இந்த லயோலா கல்லூரியினை நடத்தும் சபையில் பெண் பாதிரிகள் உண்டா?

ஒரு பெண் கிறிஸ்தவ துறவி திருச்சி வளனார், சென்னை லயோலாவில் முதல்வராக முடியுமா?

பெண் அடிமைதனம் எங்கே இருகின்றது போலி பாதிரிகளே , பொய் வீசுன் அயோக்கியர்களே..

என்னென்ன படமெல்லாம் வைத்திருக்கின்றார்கள் என பார்க்கும் பொழுது மனம் பதறுகின்றது, நிச்சயம் கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நடத்தபட்டிருக்கின்றது

இந்துக்கள் கொந்தளிக்கின்றார்களே தவிர அமைதி காகின்றார்கள், இதுவரை இந்துக்களை சீண்டிய எல்லொரும் எப்படி அழிந்தார்களோ அப்படியே லயோலா நிர்வாகமும் அழிய ஒப்புகொடுக்கின்றார்கள்

லயோலா எனும் கொடூர புத்திபடைத்த கொடுமதியாளர்களுகு நாம் கேட்கும் கேள்வி இதுதான்

உங்கள் சபையின் ஸ்தாபகரான இக்னேஷியஸ் லயொலா இதைத்தான் சொன்னாரா? இந்தியாவிற்கு வந்த அவரின் சீடர் பிரான்ஸிஸ் சேவியர் இதற்குத்தான் கல்லூரி அவசியம் என கடிதம் எழுதினாரா?

பாரிசீலிருந்து வந்த குருக்கள் இப்படி அசிங்க படம் வரையவா கல்லூரி கட்டினார்கள்?

நீங்கள் உண்மையானவர்கள் என்றால் மேரி ஒரு இந்துபெண் என எழுதி இந்த திரிசூலம் இருக்குமிடத்தில் சிலுவையினை வைக்க தயாரா?

இயேசுவின் இரத்தத்தால் நனைந்த சிலுவை புனிதமானது அதை இந்த ரத்தத்தின் நடுவே வைக்க மனம் ஒப்புமா?

ஆனால் இந்து கடவுள்களின் புனிதமான கரங்களில் இருக்கும் ஆயுதத்தை மட்டும் இப்படி வைக்கலாமா?

உங்கள் மதத்தின் அசிங்களை முதலில் களையுங்கள், சிறுவர் மேலான பாலியல் வன்முறை முதல் கேரள பாதிரிகளின் அசிங்க வன்முறைகள், கொலைகள் என பட்டியல் ஏராளம் அதை கண்டியுங்கல்

தினகரனின் கொள்ளை முதல் ஐரோப்பாவில் காணிக்கை கொள்ளை அடித்து இங்கு சொத்து குவிக்கும் யூதாஸ்களை கண்டியுங்கள்

இன்னும் ஏராளம் இருக்கின்றது , கிறிஸ்தவம் எனும் பெயரில் அந்த மத குருக்களிடமும் சபையிலும் ஏக இம்சைகள் குற்றசாட்டுகள் உண்டு, அதற்கு முதலில் கண்காட்சி வையுங்கள்

வைக்க தயாரா? இல்லை அல்லவா?

அதனால் நடந்த சம்பவத்திற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டுவிட்டு மறுபடி கல்லூரியினை திறங்கள், இல்லாவிட்டால் இம்மண்ணில் நீங்கள் கல்லூரி நடத்த தகுதி இல்லாதவர் ஆகிவிடுவீர்கள்

முதலில் நீங்கள் செய்யவேண்டியது “மேரி ஒரு இந்துபெண்” எனும் பெயரில் இந்த கிறிஸ்தவ அசிங்க மோசடிகளை கொண்டு ஒரு கண்காட்சி நடத்தி, கிறிஸ்தவ பெண் அடிமை, பாதிரிகளின் பாலியல் இம்சைகளை உலகிற்கு சொல்வது

இதை நான் சொல்லவில்லை, கர்த்தராகிய இயேசு பைபிளில் இப்படி சொல்கின்றார்

“உன் கண்ணில் உள்ள துரும்பை எடு, பின்னர் உன் சகோதரன் கண்ணில் உள்ள துரும்பை எடுக்க நன்றாய் கண் தெரியும்”

அதனால் உங்கள் கண்ணில் உள்ள துரும்பை எடுக்க “மேரி ஒரு கிறிஸ்தவ பெண்” என இம்மாதிரி கண்காட்சியினை நடத்துங்கள்

அதன் பின் “ஆயிஷா ஒரு இஸ்லாம் பெண்” என கண்காட்சி நடத்த நன்றாய் ஞானம் வரும், தகுதியும் வரும்

லயொலா கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு கேட்டு பரிகாரம் தேடாவிட்டால் அரசு உடனே செய்யவேண்டியதை செய்யட்டும்

ஒரு கல்லூரியின் மதவெறுப்பால் இங்கு மாபெரும் கலவரம் உருவாகி, சமூக அமைதிகெடுவதை தடுக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு

சிறிய சிறுபான்மையான கிறிஸ்தவ கல்லூரிகளுக்கு இந்த தைரியத்தை , இப்படி எல்லாம் மாபெரும் பாதகங்களை செய்ய முடியும் என்ற தைரியத்தை கொடுத்தது யாரென்றால் திராவிட கட்சிகள்

இப்பொழுதும் பாருங்கள் கருப்பு சட்டைகளோ, திமுகவோ இல்லை தமிழ் தேசிய இயக்கங்களோ இதை கண்டிக்காது, நிச்சயம் கண்டிக்காது

காரணம் அந்த இந்து எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு இயக்கங்களின் மூல வேர் இந்த கல்லூரிகளில்தான் இருக்கின்றது

இந்த அயோக்கியதனத்தின் பெயர்தான் தமிழருக்கான‌ அரசியல்..