இன்றைய துளிகள்…

25 ஆண்டுகளுக்கு பிறகு குஜராத் காட்டில் புலியின் நடமாட்டம் : இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி

இதுவும் மோடிஜியின் சாதனை, காங்கிரஸ் ஒழித்த புலிகளை மோடி காப்பாற்றினார் என இனி பலர் கிளம்புவார்கள்

______________________________________________________________________________

மகாத்மா காந்தி சுட்டுகொல்லபட்டதை பேசியபொழுது கதறி அழுதார் வைகோ

ஆனால் ராஜிவ்காந்தி கொல்லபட்டது பற்றி எல்லாம் அன்னார் பேசவும் மாட்டார், அழவும் மாட்டார் அதனால் உருப்படவும் மாட்டார்

_____________________________________________________________________________

தலைவி குஷ்பு மீது மறுபடியும் சர்ச்சை கிளப்ப கிளம்பிவிட்டார்கள் சதிகாரர்கள், சண்டாள பாவிகள்

ரஜினி தமிழக அரசியலுக்கு வரலாமா அவர் அந்நியர் இல்லையா என்றெல்லாம் அவரிடம் கேட்டிருக்கின்றார்கள்

எல்லா கேள்விக்கும் நியாயமாகவும், மகா நேர்மையாகவும் பதிலளிக்கும் நம் தலைவி இக்கேள்விக்கும் தனக்கே உரிய நிதானத்துடனம் அறிவுடனும் பதிலளித்திருகின்றார் இப்படியாக‌

“ராமசந்திரன் இலங்கையில் பிறந்த மலையாளி வம்சம், ஜெயலலிதா கன்னட பிறப்பு அவர்கள் எல்லாம் இங்கு மக்களால் பதவிக்கு அமர்த்தபடவில்லையா?

ஏன் கலைஞர் கருணாநிதியே தமிழர் இல்லை என்றொரு செய்தி உண்டல்லவா? அவரை போல் தமிழின தலைவர் உண்டா? தமிழறிஞர் உண்டா? அரசியல்வாதி உண்டா?

அதனால் இங்கு வந்து தமிழகத்தாராக வாழ்ந்து அவர்கள் பெற்ற மக்கள் அபிமானமே முக்கியமே தவிர வேறொன்றுமில்லை

தமிழர் ராஜ்குமார் கன்னடத்தில் சூப்பர் ஸ்டார் ஆகி காங்கிரஸ் வெற்றிக்கு உழைக்கவில்லையா? இன்னும் பலர் அடுத்த மாநிலத்தில் முதல்வராகவில்லையா? நாமெல்லாம் இந்தியர் என்றுதான் பார்க்க வேண்டும். “

எவ்வளவு அழகான , பொறுப்பான, தீர்க்கமான பதில்.

இதற்குத்தான் வாய்பிளந்த ஓநாயாக, வட்டமிட்ட கழுகாக, பதுங்கிய புலியாக, சேறுக்கு காத்திருந்த எருமையாக காத்திருந்த சிலர் பொங்கி எழுகின்றார்கள்

குஷ்பு கலைஞரை வந்தேறி என்றார், ஜெயா தமிழச்சி இல்லை என்றார் அவரை விட கூடாது என கடுமையாக பேசிகொண்டிருக்கின்றார்கள்

இவர்களை சங்கம் வன்மையாக எச்சரிக்கின்றது

தலைவி சொன்னது ஒன்றும் புதிதல்ல, தமிழகத்தில் பல இடங்களில் கேட்ட குரலைத்தான் அவரும் சொன்னார்

ராமசந்திரன் மலையாளி, ஜெயா கன்னடத்தி என சொன்னது சாட்சாத் திமுகவினர்

அதன் பின்பு கலைஞர் தெலுங்கர் பரம்பரை என சொன்னது அதிமுகவினரும் இன்னும் பலரும்

இப்படியாக யாரெல்லாமோ கிளப்பிய சர்ச்சைகளின் அன்றைய நிலையினைத்தான் தலைவி சொன்னார்

அதற்குள் இன்றைய திமுகவினர் தலைவி கலைஞரை கொச்சைபடுத்திவிட்டதாக பொங்கி எழுந்து சீறிகொண்டிருக்கின்றனர்

தலைவி கலைஞர் தன் அரசியல் தந்தை, அவர் வீடு என் கோவில், நான் அவரை கொச்சைபடுத்தவில்லை என்பதோடு விஷயத்தை முடித்துகொண்டார்

ஆயினும் உபிக்கள் பொங்கி கொண்டிருக்கின்றன‌

தலைவி சொன்னது ஒன்றும் தவறுமல்ல, புதிதுமல்ல‌

தலைவியினை தற்காப்பது சங்கத்து கடமை என்பதால் அந்த அற்ப மானிட பதர்களை வன்மையாக எச்சரிக்கின்றோம், இத்தோடு விஷயத்தை விட்டுவிட்டால் அவர்களுக்கு நல்லது

ஒருசிலர் மிக கடுமையாக தலைவி தமிழச்சியா என கேட்க தொடங்கிவிட்டனர்

ஜெயலலிதாவும் ராமசந்திரனும் எப்படி தமிழர்களாக வாழ்ந்தார்களோ அப்படி எங்கள் தலைவியும் தமிழச்சி, தமிழ்நாட்டு மருமகளான தமிழச்சி என்பதை மிக வலுவாக சங்கம் பதிவு செய்கின்றது.

_____________________________________________________________________________

தமிழக மக்களுக்கு 2000ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தபடும் தமிழக அரசு அறிவிப்பு

பொங்கலுக்குத்தான் 1000 கொடுத்தார்கள், இப்பொழுது 2000ம் ரூபாயாம்

நிச்சயம் அடுத்ததாக 3 ஆயிரம் கிடைக்கும்

ஆக அந்த மகான் பாண்டியராஜன் ஒரு மாபெரும் தீர்க்கதரிசி, இதை எல்லாம் எப்பொழுதோ சொல்லி முடிவினையும் சொல்லிவிட்டார்.

ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம்..என தொடங்கினால் முடிவு பிஸ்கோத்தில்தான் முடியும்..

தேர்தலுக்கு பின் தமிழக நிலை பிம்பிலிக்கி பிலாப்பிதான்

(அந்த பக்கம் மகான் பாண்டியராஜனும் செந்திலும் , இந்த பக்கம் பன்னீரும் பழனிச்சாமியும்

வரலாறு எப்படி எல்லாம் திரும்புகின்றது?

எது திரும்பினாலும் திருந்தாதது இந்த ” மாமா பிஸ்கோத்து” கோஷ்டிதான்)

______________________________________________________________________________

விஜயகாந்த் மகனின் இம்சை உதயநிதியினை மிஞ்சிவிடும் போலிருக்கின்றது

அரசியல் காமெடியன் என்றாலும் வாரிசு விஷயங்களில் வைகோ கெட்டிக்காரர், தனக்கே இந்தபாடு என்றால் தன் மகனுக்கு என்னபாடோ என யோசிக்கும் ஒரே தலைவர் அவர்தான்