சிதறல்கள்

கருணாநிதி தமிழர் இல்லை என்பது திமுக தொடங்கிய காலத்தில் இருந்தே வரும் ஒருவித செய்தி

ராம சந்திரன் மலையாளி என திமுக கொக்கரித்த காலத்தில் கலைஞர் எப்படி தெலுங்கு வம்சம் என பலத்த ஆதாரங்களோடு சொன்னது அதிமுக, அதெல்லாம் வரலாறு
கலைஞரே அதுபற்றி அலட்டிகொள்ளவில்லை என்பதுதான் உண்மை

குஷ்பு அதை புதிதாக ஒன்றும் சொல்லவில்லை, தமிழகம் சொன்னதைத்தான் ஏன் சொல்வதைத்தான் சொன்னார்

அதற்குள் திமுக காங்கிரஸுக்கும் ராகுலுக்கும் நெருக்கடி கொடுத்து குஷ்புவினை கண்டிக்க போகின்றது என திமுக உபிக்கள் மனக்கோட்டை கட்டுகின்றன‌

அடுத்த கட்சி தலைவர் தன் கட்சியில் என்ன முடிவெடுப்பது என காங்கிரஸ் யோசிக்காதா? அதற்கு தன்மானம் இல்லையா?

காங்கிரஸில் யார் என்ன பேசவேண்டும் எப்படி பேசவேண்டும் என முக ஸ்டாலினிடம் உத்தரவு வாங்கிகொண்டா பேசவேண்டும்?

ஒரு காலத்தில் திமுக காமராஜரை எப்படி எல்லாம் பேசியது? அதெல்லாம் மறக்க கூடிய விஷயமா? திமுக என்ன யோக்கிய சிகாமணிகளால் நிரம்பியதா

நேரு, இந்திரா, ராஜிவ் வரை எப்படி எல்லாம் கேவலமாக பேசினார்கள்? அதெல்லாம் வரலாற்றில் இல்லையா?

அவர்கள் ஆயிரம் பேசலலாமாம் ஆனால் காங்கிரஸ் குஷ்பு ஒன்றுமே சொல்ல கூடாதாம்

காங்கிரஸ் என்ன கோபாலபுரத்து நாய்குட்டியா?

ஏதோ மொத்த இந்தியாவும் தங்கள் கட்டுபாட்டில் இருப்பது போல திமுகவினர் நினைத்துகொண்டிருக்கின்றார்கள்

திமுக இல்லாவிட்டால் தினகரனுடன் இன்னும் ஏராளமான கட்சிகளுடன் கூட்டணி வைக்க காங்கிரசுக்கு ஏராளமான வாய்ப்பு இருக்கின்றது

தன் கட்சி போலவே எல்லா கட்சியும் அடிமைகளால் நிரம்பியது என திமுகவினர் நினைத்து கொண்டால் அது அந்தோ பரிதாபம்

************************************************************************

குஷ்பு கலைஞர் தெலுங்கர் என சொல்லிவிட்டார் என பொங்கும் திமுகவின் ஸ்டாலின் மற்றும் உபிக்களுக்கு சங்கம் சொல்வது இதுதான்

இந்த கலைஞர் தெலுங்கு என்பதை முதலில் சொன்னது 1984ல் அதிமுக அமைச்சரான குழந்தை வேலு, அதுவும் சட்டமன்றத்திலே சொன்னார்

தட்சினா மூர்த்தி எனும் கலைஞரின் இயற்பெயரோடு தொடங்கிய அவரின் பேச்சு பலத்த ஆதாரங்களை சபைக்கு கொடுத்தது , அது இன்றுவரை சபைகுறிப்பில் உண்டு

கலைஞர் அதை மறுக்கவோ நீக்கவோ இல்லை, ஆனால் அதன்பின் எம்ஜிராமசந்திரன் மலையாளி என சொல்வதை நிறுத்தினார்

ஆக கலைஞரே அமைதியாய் போன இடத்தில்தான் இன்று திமுகவும் ஸ்டாலினும் குதிக்கின்றார்கள், வரலாறு சுத்தமாக தெரியவில்லை

இது போக தெலுங்கு வருடபிறப்புக்கு விடுமுறை அளித்தவர் என ஏகபட்ட விமர்சனங்கள் அவர்மேல் உண்டு, அதையும் எதிர்கட்சி அவ்வப்போது சாட்டும்

தட்சினா மூர்த்தி எனும் தெலுங்கு பெயரை கருணாநிதி என அவர் மாற்றினாலும் அது தமிழ்பெயரே அல்ல, நிதி என்பது தமிழ் இலக்கியங்களில் எங்கிருக்கின்றது? கருணாளன் எனும் சமஸ்கிருத வார்த்தைக்கு அருளாளன் என்றே பொருள்படும்

நிதி என்ற வார்த்தை தமிழில் செல்வம் என்றே வரும் , ஆக அருட்செல்வம் என்றெல்லவா மாற்றவேண்டும், கருணாநிதி எப்படி வந்தது?

இப்படி எல்லாம் அன்று அவரை கேட்டு படாதபாடு படுத்தினார்கள்

அவரோ அமைதி காத்தார், எந்த இடத்திலும் தான் தெலுங்கன் அல்ல என நீருபிக்க முயற்சி செய்ததாக தெரியவில்லை

மிக சில இடங்களில் அமைதிகாப்பது அவரின் ராஜதந்திரம் அதை அப்பொழுது செய்தார்

இந்த அமைதியால் ராமசந்திரனுக்கு இருந்த மலையாளி எனும் பட்டம் காணாமல் போனது அவர் சிரித்து கொண்டார்

இதே வித்தையில் கலைஞர் தன்னை கன்னடத்தி என சொல்லாமல் பார்த்துகொண்டார் ஜெயலலிதா

ஆக அந்த அமைச்சர் குழந்தைவேலு சட்டமன்றத்தில் சொல்லலாம், கலைஞரும் அமைதி காப்பார்

அதை குஷ்பு சொல்ல கூடாது சொன்னால் விட மாட்டார்களாம், எப்படி இருக்கின்றது இவர்கள் நியாயம்?

திமுகவின் இக்கால தலைமுறைக்கு இவ்வரலாறு தெரியாமல் இருக்கலாம், உதயநிதிக்கு தெரியாமல் இருக்கலாம்

முக ஸ்டாலினுக்குமா தெரியவில்லை?

தலைவி சொன்னதில் எந்த தவறுமில்லை, சங்கத்திடம் தலைவி பற்றிய எல்லா கேள்விக்கும் பதிலிருக்கின்றது