வித்தியாசம் தெரியாது?
என்ன அநியாயமோ தெரியவில்லை, பரிதாபத்திலும் படுபயங்கர பரிதாபம்
சொந்த நாட்டு ராணுவத்திற்கும் அந்நிய நாட்டு தீவிரவாத கூட்டம் அதுவும் இந்திய ராணுவத்தையும் சொந்த நாட்டு பிரதமரையும் கொன்று குவித்த கூட்டத்திற்குமா வித்தியாசம் தெரியாது?
சொந்த நாட்டு சீருடைக்கும் லோகோ எனப்படும் சின்னமுமா தெரியாத தேசம் இது?
இதோ இந்திய வீரர்களுக்கு அஞ்சலி என்ற பெயரில் படுபயங்கர புலிகளுக்கு பல இடங்களில் அஞ்சலி செலுத்துகின்றார்கள்
அரசியல்வாதிகளுக்கு ஒரு மண்ணும் தெரியாது, ஈழம் என்பது காஷ்மீருக்கு அருகில் இருக்கின்றது என்றால் உடனே நம்பிகொள்வார்கள்
ஆனால் அரசின் காவல்துறை அப்படி செய்யலாமா?
அதுவும் இந்தியாவினை எதிரியாக நினைத்து போராடிய அந்த கொடூர இயக்கத்திற்கு இந்திய கொடியோடு இந்திய காவலர் அஞ்சலி செலுத்தலாமா?
இதெல்லாம் தேசிய அவமானம் என்ற வகையில் வராதா?
இதெல்லாம் மாபெரும் அவமானம், மாபெரும் இழுக்கு , களங்கம்
இதோ கம்பீரமாக அஞ்சலி செலுத்துகின்றார்கள்

சொந்த ராணுவே தெரியாத மாநிலத்தில் எடப்பாடி முதல்வராகவும், தமிழிசை பிரபல அரசியல்வாதியாகவும் சீமான் தமிழின உணர்வாளராகவும் அறியபடுவதில் என்ன ஆச்சரியம்?
அட ரஜினியும் கமலும் விஜயும் அஜித்தும் அரசியல் முகமாக அறியபடுவதிலும் என்னதான் ஆச்சரியம்
இந்த அஞ்சலி உணர்வு வரவேற்கதக்கது ஆனால் சொந்த ராணுவம் எது என தெரியாத விஷயம் சோகமானது
இனி ராணுவத்திற்கு அஞ்சலி என்ற பெயரில் சந்த வீரப்பனுக்கும், சேத்துகுளி கோவிந்தனுக்கும் செலுத்திவிட கூடாதே என்பதுதான் சோகம்
காஷ்மீரில் தாக்கிய தீவிரவாதிகளை விட மகா மோசமான காரியத்தை செய்திருக்கின்றார்கள், தேசிய அவமானம் இது
(விஷயம் இப்படி இருக்க, நாம் தமிழர் ஆட்சியில் இதுதான் நடக்கும் என ஆனந்த கண்ணீர் வடிக்கின்றனர் தும்பிகள்..)