இன்றைய துளிகள் (1)

இங்கு ஏகபட்ட பீரங்கிகள் இருக்கின்றன, துல்லியமாக சுடும் டாங்கிகளும் உண்டு போதாகுறைக்கு பல்லாயிரம் மைல் பாயகூடிய சக்தி வாய்ந்த ஏவுகனைகளும் இருக்கின்றன‌

பட்டனை தட்டினால் முடிந்தது விஷயம்

இக்காலத்திலும் 300 கிலோ வெடிமருந்து தாருங்கள், முதுகில் சுமந்து பாகிஸ்தானை அழிக்கின்றேன் பேர்வழி என கிளம்பியிருக்கின்றன பல சங்கிகள்

எல்லாவற்றிலும் பலகாலம் பின்னோக்கியே யோசிப்பது அவர்கள் புத்தியிலே கலந்திருக்கும் போல…

*****

கண்ணனும் கருப்பு, ராமனும் கருப்பு கிரண்பேடிக்கு இதை யாராவது எடுத்து சொன்னால் பரவாயில்லை

காக்கையிடமும் நல்ல பண்புகள் உண்டு, இரையினை கண்டுவிட்டால் கூட்டத்தை அழைத்து சேர்ந்தே உண்ணும்.

சுயநலத்தில் நடித்து தனியாக நின்று உண்டு மகிழ்வது வெள்ளையான கொக்கின் குணம்

கிரண் பேடி.. பேட் லேடி….

*****

“வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்ப, 
சூழ் கழல் மன்னா நின் நகர்ப் புகுந்து….”

என்றோ கண்ணகிக்கு இளங்கோ எழுதிய வரிகள் இன்று வெளியூரிலும் , வெளிநாட்டு நகரங்களிலும் வாழும் ஒவ்வொருவருக்கும் பொருந்துகின்றது

ஊழ்வினை நாடுவிட்டு நாடு விரட்டும், எங்கெல்லாமோ அலைய செய்யும் என்பதை அழகாக சொல்லியிருக்கின்றான் இளங்கோ..

இளங்கோவும் தெய்வீக கவிஞனே..

*****

உதயநிதியினை பார்த்தால் பொறாமையாக இருக்கும் : தமன்னா

உதயநிதியோடு அம்மணி நடித்த படத்தின் விழா ஒன்றில் இப்படி சொல்லியிருக்கின்றார் தமண்ணா

ஆக அம்மணி திமுகவில் இணையும் நாள் தொலைவில் இல்லை போலிருக்கின்றது

*****

அமித்ஷாவும் எடப்பாடியும் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை : செய்தி