இன்றைய துளிகள் (2)
காஷ்மீர் தாக்குதலை கண்டித்து நியூசிலாந்து நாடு முதலாவதாக பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றியுள்ளது
இந்தியராக அவர்களுக்கு நன்றி சொல்வது நம் கடமை
நீதி நியாயத்தை உணர்ந்த தேசமாக நியூசிலாந்து இருப்பதால் அவர்களை மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் இத்தேசம் வணங்குகின்றது
இனி நம் சகோதர நாடு நியூசிலாந்து
அப்படியே மசூத் அசார் ஒரு சர்வதேச தீவிரவாதி என அறிவித்த ரஷ்யாவிற்கும் கோடி நன்றிகள்
******
நாளை உலக தாய்மொழி தினமாம்
நமக்கு தாய்மொழி, தந்தை மொழி எல்லாம் தமிழ்
தமிழுக்கு பல சிறப்புகள் உண்டு, சொன்னால் சொல்லிகொண்டே இருக்கலாம், செம்மொழி, ஆதிமொழி, தமிழின் வார்த்தைகள் எண்ணமுடியாதவென அதன் சிறப்புகள் ஏராளம்
அதனைவிட மகா சிறப்பு அது இளமை குன்றாதது, அதனால்தான் சுந்தரம்பிள்ளை “உன் சீரிளமை திறம் வியந்து , செயல் மறந்து வாழ்த்துவோமே.” என தமிழை வியந்து பாடினார்
உலகில் இளமை குன்றாத விஷயங்களில் தமிழும் ஒன்று,
******
7 பேர் விடுதலையை வலியுறுத்தி மார்ச் 9ம் தேதி மனித சங்கிலி போராட்டம், 28 ஆண்டுகால வலி, வேதனைக்கு தீர்வு கிடைக்க வேண்டும்: அற்புதம்மாள்
இன்னும் தன் மகன் செய்தது மாபெரும் தவறு என்றோ, பாசிச புலிகளால் தன் மகன் வாழ்வு தொலைந்தது என்றோ சொல்ல அம்மையாருக்கு மனமே இல்லை
ஏதோ ஆங்கிலேயன் கால குற்றங்களுக்காக மகன் சிறையிருப்பது போல பேசிகொண்டிருக்கின்றார்
காஷ்மீரில் 44 வீரர்களை கொன்றது எப்படிபட்ட குற்றமோ அதைவிட பன்மடங்கானது பேரரிவாளனின் குற்றம்
அதை இத்தேசம் எப்படி எளிதாக கடந்து செல்லும்?
தன் மகன் ஏதோ தியாகி என்பது போல அம்மையார் பேசிகொண்டிருப்பது நிச்சயம் சரி அல்ல
அப்படியும் தன் மகனின் விடுதலையினை கோரலாம்,
முருகன் உட்பட அந்நிய நாட்டினர் 4 பேரை விடுவிக்க சொல்ல இவருக்கு என்ன அதிகாரம் உண்டு?
******
‘‘அனில் அம்பானி குற்றவாளி; பணத்தை செலுத்தவிட்டால் 3 மாதங்கள் சிறை’’ – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இப்பொழுதும் அதாவது பலரை பொருளாதார ரீதியாக தெருவுக்கு கொண்டுவந்த மோடி, அம்பானியினையும் கொண்டுவந்த பின்னும் ஒரு கோஷ்டி என்ன சொல்லும் தெரியுமா?
“இதெல்லாம் மோடி நடத்தும் நாடகம், அம்பானியினை உள்ளே தள்ளி தன்னை நல்லவராக காட்டி ஓட்டுவாங்க பார்க்கின்றார்
அம்பானியும் மோடிக்காக உள்ளே போக நடிக்கின்றார், இதெல்லாம் ஆரிய பார்ப்பானிய பனியா சதி”
*******
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்டகோரி கோரிப்பாளையம் தேவர் சிலை முன்பு தேவர் அமைப்பினர் ஆர்பாட்டம் : செய்தி
விமான நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தால் என்னாகும் என தெரிந்து தேவர் சிலை முன்பே தேவர் பெயரை வைக்க ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றார்கள்
“உலகின் மிகசிறிய விமான நிலையம்” என்று வேண்டுமானால் அதற்கு பெயர் சூட்டலாம், இப்போதைய விமான நிலையத்திற்கு தேவர் பெயர் சூட்டினால் அவருக்கு அதைவிட அவமானம் எதுவுமே இல்லை
அது இருக்கட்டும், திருச்சி விமான நிலையத்திற்கு தலைவி குஷ்பு பெயரை சூட்டகோரி மாபெரும் போராட்டத்தை சங்கம் விரைவில் தொடங்க இருக்கின்றது
(கண்ணகி, மங்கம்மாள், வள்ளல் பாண்டிதுரை , மருது பாண்டியர் , வேலு நாச்சியார் என ஏகபட்ட அடையாளங்கள் உள்ள பூமியில் தேவர் பெயரை மட்டும் பிடித்து தொங்குவது நிச்சயம் அரசியலன்றி வேறல்ல..)