மோடிக்கு விருது

இந்தியாவில் ஏழை பணக்காரர் இடைவெளியினை குறைத்ததற்காக மோடிக்கு விருது : தென் கொரியா விளக்கம்

எப்படி இடைவெளியினை குறைத்தார் மோடி

தன் குழப்பமான திட்டங்களால் கோடீஸ்வரர்கள் லட்சாதிபதி ஆனார்கள், லட்சாதிபதிகள் தெருவுக்கு வந்தார்கள்

ஆக பணக்காரர்கள் ஏழைகளோடு ஏழைகளாக ஆகிவிட்டார்கள், இந்த சமத்துவத்தை கொண்டுவந்ததற்கு விருதாம்

அதைவிட கொடுமை மோடி உலக அமைதிக்கு பாடுபட்டாராம்?

சிரிய போரை நிறுத்தினாரா? இல்லை கொரிய பதற்றத்தை தணித்தாரா? இல்லை ஈரான் இஸ்ரேல் இடையே சமாதானம் பேசினாரா என்ன செய்தார் என தலைகீழாக யோசித்தாலும் ஒன்றும் புரியவில்லை

மிக ஆழமாக யோசித்தால் ஒன்று புரிந்தது

அதிமுகவும் ஓபிஎஸ் இபிஎஸ் சமாதானத்திற்கும் நட்புறவிற்கும் மிகுந்த பாடுபட்டவர் மோடி

அதற்குத்தான் தென்கொரியாவில் விருது கொடுத்திருப்பார்களோ?

அடேய் சவுத் கொரியன்ஸ், ஹூண்டாய் கார்முதல் சாம்சுங் போன்வரை விற்க‌ இந்திய சந்தை வேண்டும் என கேட்டால்தான் என்ன?

ஏன் இந்த பில்டப்?

உங்களுக்கெல்லாம் வடகொரிய அதிபர்தான் சரி