இன்றைய துளிகள் (1)

காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரையிலும் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் : அமித்ஷா

ஈழதமிழரிலும் சட்டவிரோதமாக சுற்றுவோர் உண்டு, இந்த ராஜிவ் கொலையாளி முருகன் கோஷ்டி கூட சட்டவிரோதமாக வந்த கும்பலே

புலியினை பார்த்து பூனை சூடுபோட்ட கதை

சட்டவிரோத குடியேறிகளை விரட்டுவோம் என அந்த‌ முருகன் கும்பலையும் அமித்ஷா விரட்டிவிட கூடாது.

காங்கிரஸை மானம் கெட்ட கேள்வி கேட்டபின்பும் அதோடு ஒட்டிகொண்டு சாகச அரசியல் செய்த கலைஞர் அரசியல் சாணக்கியர் என்றால் நாங்கள் செய்வதன் பெயர் என்ன? என கேட்கின்றார் லவ்பெல்

புலியினை பார்த்து பூனை சூடுபோட்ட கதை என்பது இதுதான்

புதிய கட்சி

அங்கிள் சைமனுக்குத்தான் எத்தனை எதிரிகள்?, எத்தனை துரோகிகள்?

காங்கிரசும், பாஜகவும் அவருக்கு எதிரிகள் திமுக உட்பட மற்றவர்கள் எல்லாம் துரோகிகள்

இதோ புதிய துரோகி…

எப்படியோ ஐரொப்பிய ஈழ குழந்தைகளுக்கு புது அங்கிள் கிடைத்துவிட்டார்

அங்கிள் சைமன் வரிசையில் அங்கிள் கவுதமன்

ஆதார் அட்டையிலும் அவள் அழகானவள்

வைரமுத்து ஒரு பாடல் எழுதியிருக்கின்றாராம், பாடல் “ஆதார் அட்டையிலும் அவள் அழகானவள்” என தொடங்கி சிறப்பாக வந்திருக்கின்றதாம்

இதை கேட்ட சீனுராமசாமி பாடலுக்காக 10 லட்சம் கொடுக்க முன்வந்தாலும் சொன்ன சொல் தவறமாட்டான் வைரமுத்து என ஒப்பந்தபடி சீமானுக்கே குறந்தை விலையில் கொடுத்தாராம் வைரமுத்து

வைரமுத்து சொன்ன சொல் தவறாதவராக இருக்கட்டும், அந்த அழகிய பாடலை எந்த அழகான பெண்ணை நினைத்து எழுதியிருப்பார்?

ஏதேனும் பாடகி வந்து அவர் எனக்காகத்தான் எழுதினார் என‌ ராயல்டி கேட்டு பிராது கொடுக்காதவரை சிக்கல் இல்லை