இன்றைய துளிகள் (2)

உணர்ச்சி அரசியல்

இதுகாலம் கண்ட முகநூல் அன்பர்களையும் வம்பர்களையும் அலசி ஆராய்ந்தால் இரு கோஷ்டிகளே உணர்ச்சி அரசியலை செய்கின்றன, அதில் துளியும் நியாயம் தர்மம் யாதார்த்தம் கலக்க அவர்கள் தயாராக இல்லை

உணர்ச்சி வேகத்தில் கண்மூடித்தனமான வெறியில் சுற்றும் கோஷ்டிகள் இவை

முதலாவது நாம் தமிழர், இரண்டாவது பாஜக கோஷ்டி

இந்த இருவரும் கூட்டணி வைத்தால் மிகபெரும் காமெடிகளை தேர்தல் முடியும் வரை காணலாம்

ஆனால் விதி அதுவல்ல‌

இரண்டையும் தனி தனியேதான் ரசிக்க வேண்டியிருக்கின்றது

ஜெயலலிதா வாழ்க்கைப்படம்

தலைவி தலைப்பில் ஜெயலலிதா வாழ்க்கைப்படம் : விஜய் இயக்குகிறார்

வழக்கமாக ஆங்கில படங்களை காப்பி செய்யும் விஜய் இப்பொழுது ஜெயாவின் கதையினை காப்பி செய்கின்றார்

ஆக ஒருநாளும் அவர் சொந்த கதையினை படமாக எடுக்க போவதே இல்லை..

பத்திரிகையாளர் சந்திப்பு

பத்திரிகையாளர் சந்திப்பு என்ற பெயரில் மிக கடுமையான கேள்விகளால் துளைக்கபட்டிருக்கின்றார் அன்புமணி

சுருக்கமாக சொன்னால் பாஷா ரஜினி போல கட்டி வைத்து அடித்திருக்கின்றார்கள், கதற கதற அடித்திருக்கின்றார்கள்

மனிதரும் வலிக்க வலிக்க அடிவாங்கிவிட்டு சிரித்து கொண்டே வெளிவருகின்றார்

ஆனால் பாதிதான் அடித்தோம் அதற்குள் தாங்காமல் ஓடிவிட்டார் என்கின்றன பத்திரிகை சங்கங்கள்

ஆக இன்னமும் மீதி அடி இருக்கின்றது

“பார்த்து சூதானமா இருந்துக்கப்பு , பத்திரிகையாளர் சந்திப்புன்னு சொல்லி அன்புமணி படுறபாட்டை பார்த்தல்லே

நம்மளையும் அப்படி பிச்சி கிழிச்சிருவானுக, பெருசுன்னா சமாளிக்கும் நமக்கு அழுகை தவிர என்ன தெரியும்?

தேர்தல் முடியுற வரைக்கும் இவனுக கையில சிக்க கூடாது, சொல்லிபுட்டேன் , கையில அடிச்சி சத்தியம் பண்ணிருக்கீங்க, பார்த்து நடந்துக்கோங்க‌…”