பாகிஸ்தானின் எப்16 ரக விமானம் வீழ்த்தபட்டது நிச்சயம்
இந்தியாவில் தாக்க தன் மிகசிறந்த விமானமான எப்16 ரக விமானத்தை அனுப்பியிருகின்றது பாகிஸ்தான்
நிச்சயம் அது மிக தரமான விமானம், அமெரிக்காவுக்கு அதை வழங்க பலத்த கண்டனம் அமெரிக்காவில் அன்று இருந்தது அதையும் மீறி கொடுத்து இந்தியாவுக்கு எதிராக கொம்பு சீவியது அமெரிக்கா
மிகுந்த வேகம், துல்லிய தாக்குதல் வசதி , ரேடாரில் சிக்காத நுட்பம் என பல விஷயங்கள் அதில் உண்டு
தன் துருப்புசீட்டாக அதை வைத்திருந்தது பாகிஸ்தான்
அதனை இன்று ஏவியிருக்கின்றார்கள், இரு விமானங்கள் வந்திருக்கின்றன, ஒன்று தப்பிவிட்டது
ஒன்றை இந்தியா வீழ்த்தி இருக்கின்றது, இது மிகபெரும் விஷயம்
தன் அணுகுண்டுக்கும் ஏவுகனைக்கும் அடுத்ததாக இதைத்தான் பாகிஸ்தான் நம்பி இருந்தது
பாகிஸ்தானின் எப்16 ரக விமானம் வீழ்த்தபட்டது நிச்சயம் அவர்களுக்கு அடி
தாக்குதலில் மட்டுமல்ல தற்காப்பிலும் விமானபடை பின்னுகின்றது
அக்காலத்தில் கண்ணதாசன் எழுதிய வரிகள்தான் இப்பொழுதும்
“எல்லையில் வந்து நின்ற எதிரிகளை
நம் படைகள் பந்து விளையாடுதம்மா..”
