தேர்தலுக்கு பயன்படுத்துகின்றாரா?

மோடி யுத்த நேரத்தை தேர்தலுக்கு பயன்படுத்துகின்றார் என சொல்லும் கூமுட்டைகள் எவரும், தேர்தல் நேரம் பார்த்து இந்தியாவிற்கு தீவிரவாதிகள் செக் வைக்கின்றனர் என யோசிப்பதாக தெரியவில்லை

இந்திராவின் அதிரடி நடவடிக்கையில் எப்படி துளியும் அரசியல் இல்லையோ அப்படியேத்தான் இன்றைய காட்சிகளும் என்பதில் துளியும் சந்தேகமில்லை

ராணுவ நடவடிக்கையில் வெற்றிமேல் வெற்றிபெற்ற இந்திரா தேர்தலில் பகிரங்கமாக தோற்ற வரலாறும் உண்டு

மானெக்ஷா போன்ற மாபெரும் தளபதிகள் மாபெரும் வெற்றிபெற்ற தளபதிகள் அரசியலுக்கு வர தயங்கிய தேசம் இது

ராணுவம் வேறு அரசியல் வேறு என்பதுதான் நிலைப்பாடு, இல்லையேல் பொற்கோவில் சம்பவத்திலே ராணுவம் பிளவுண்டிருக்கும்

பாகிஸ்தான் உளவுதுறை பொல்லாதது, எந்த நேரம் எங்கு அடித்தால் இந்தியாவுக்கும் அதை ஆளும் தலமைக்கும் மகா சிக்கல் வரும் என்பது அதற்கு தெரியும்

அதனால் மிக சரியாக தேர்தல் நேரம்பார்த்து அடித்துவிட்டார்கள்

அதை புரியாமல் இது தேசபாதுகாப்பு என்பதும் புரியாமல் ஏக இம்சைகள்

எம்ஜி ராமசந்திரனும் ஜெயலலிதாவும் பழனிச்சாமியும் எப்படி தமிழக‌ முதல்வரானார்கள் என்பதும்,

முகஸ்டாலின் கூட தமிழக முதலமைச்சராக முடியும் என ஏன் நம்புகின்றார் என்பதும் கண்கூடாக தெரியும் நேரமிது