இந்தியரின் எதிர்பார்ப்பு
அபிநந்தன்,, தன் குடும்பத்தை இத்தேசம் காக்கும் எனும் நம்பிக்கையில் கம்பீரமாக பாகிஸ்தான் சிறையில் இருக்கின்றார்
இங்கு பல கட்சிகள், பல தலைவர்கள் அவரின் குடும்பத்தாரை சந்திக்க முயற்சி எடுத்திருகின்றார்கள் ஆனால் பல காரணங்களுக்காக அவர் குடும்பத்தார் அதை விரும்பவில்லை
ஆறுதல் எனும் பெயரில் விளம்பரம் தேடுவோர் ஒருபக்கம், பத்திரிகை டிவி இம்சைகள் மறுப்பக்கம்
இன்னும் கணவன் பிரிவு எப்படி? தந்தை பிரிவு எப்படி? என உருகி உருகி இந்த மீடியாக்கள் கேட்கும் கொடூர விஷய கேள்விகள் இன்னொருபக்கம்
மொத்தத்தில் அக்குடும்பத்திற்கு தகுந்த பாதுகாப்பளித்து பெரும் நெருக்கடியின்றி காக்க வேண்டியது கடமை அதைத்தான் அரசும் ராணுவமும் செய்கின்றது
மற்றபடி ஒவ்வொரு இந்தியனும் அக்குடும்பத்திற்கு துணை நிற்கின்றான், அந்த பொய்யா நம்பிக்கையில்தான் அபிநந்தன் அங்கே வேள்வி தீயிலும் நிம்மதியாக இருக்கின்றார்
அவர் வரும்நாளை அக்குடும்பத்தோடு எல்லா இந்தியரும் எதிர்பார்த்தே இருக்கின்றனர்