வா திருமகனே வா. மறுபடியும் பகைமுடிக்க வா
முப்படை தளபதிகளும் சற்றுமுன் கூடி பல சந்தேகங்களை தீர்த்திருக்கின்றனர், இந்த விஷயங்களுக்கு சம்பந்தமில்லா கடற்படை தளபதியும் உடனிருந்தார் கவனித்தீர்களா? எதற்காக? நாங்கள் எந்த யுத்தத்திற்கும் தயார் என காட்டுவதற்காக
இந்திய அதிகாரிகள் பாகிஸ்தானின் எப் 16 வீழ்த்தபட்ட விஷயத்தை சொன்னார்கள், உண்மையில் மிக் 21 ரக விமானம் ஏவுகனைகளோடு எழும்பி வானிலிருந்து விமானங்களை தாக்கும் வகைக்கே பயன்பட்டிருக்கின்றது
அப்படித்தான் பாகிஸ்தான் எப்16 விமானங்களை ஏவுகனையால் அடித்திருக்கின்றார்கள் ஒரு விமானம் விழுந்திருக்கின்றது, மற்றவை திரும்பி சென்றிருக்கின்றன
அபிநந்தன் அந்த விமானங்களை விரட்டி சென்று பாகிஸ்தானில் சிக்கி இருக்கின்றார்
பாகிஸ்தான் ஒன்றும் அவரை இந்தியர் என்பதற்காக கவுரவமாக நடத்தவில்லை, விமானிகள் பிடிபட்டால் அவர்கள் தரத்திற்கேற்ப கவுரவமாக நடத்தவேண்டும் என்பது பாகிஸ்தானும் ஏற்றுகொண்ட சர்வதேச விதி
அதனால்தான் சிலரிடம் சிக்கி அடிபட்ட அபி காயம் துடைக்கபட்டு மிக அழகாக தேநீர் எல்லாம் கொடுக்கபட்டு காட்சிபடுத்தபட்டார், உலக பொது நியதி இது
மற்றபடி பாகிஸ்தானியர் உத்தமர் எல்லாம் இல்லை
அபியும் தன் பெயர் அடையாளம் மட்டும் சொன்னார், பொதுவாக எதிரி விமானி அகப்படும்பொழுது விமானபடையின் மொத்த ரகசியத்தையும் அறிய சம்பந்தபட்ட நாடு முயலும் இதனால் பிடிபடுபவர்கள் இத்தோடு நிறுத்துவார்கள் இது உலக வழக்கம்
அபியும் அதை கம்பீரமாக செய்தார்
இந்தியாவும் பாகிஸ்தானும் எத்தனையோ போர்களை நடத்தியிருக்கின்றன, அடிக்கடி இதுபோல் பட்சிகள் அகப்படும் கொஞ்சநாளில் விட்டுவிடுவார்கள்
(உளவாளிகள் விவகாரம் வேறு, அதனை இன்னொரு பதிவில் காணலாம்)
ஏகபட்ட சம்பவம் உண்டு எனினும் சில விஷயங்கள் வரலாறாவை
அப்பொழுது 1965 இந்திய பாகிஸ்தான் யுத்தம் நடந்தது இங்கு லால்பகதூர் சாஸ்திரியும் அப்பக்கம் ராணுவ ஆட்சியாளார் ஜெனரல் அய்யூப்கானும் ஆண்டுகொண்டிருந்தனர்
ஒரு இந்திய விமானம் ராவல்பிண்டி அருகே வீழ்த்தபட்டது , விமானி பிடிக்கபட்டார், அவரிடம் விவரம் கேட்கபட்டது என் பெயர் கே. சி கரியப்பா என்பதோடு நிறுத்திகொண்டார் விமானி
முழு பெயரை அவர்கள் கேட்க “கொண்டாரா எம் கரியப்பா” என விரிந்தது அந்த பெயர், அதை கேட்ட அதிகாரிகளுக்கு பொறி தட்டியது, பின் அய்யூப்கானுக்கு விஷயம் கொண்டுசெல்லபட்டது
அய்யூப்கான் விரைந்து வந்தார், நீங்கள் ஜெனரல் கரியப்பா மகனா என வியந்து கேட்டார், அவ்வளவுதான் ரேடியோவினை தட்டினார்
“கேசி கரியப்பா என்றொரு இந்திய விமானி பிடிபட்டிருக்கின்றார், விரைவில் விடுதலை செய்வோம்” என அறிவித்துவிட்டு தன் சகாக்களிடம் பழைய விஷயங்களை அசைபோட்டார்
அய்யூப்கானும் கரியப்பாவும் பிரிட்டன் ராணுவத்தில் சுதந்திரத்திற்கு முன்பு பணியாற்றியவர்கள், கரியப்பா மேல் அய்யூப்கானுக்கு பெரும் மரியாதை இருந்தது
விஷயத்தை இந்தியாவிலுள்ள பாகிஸ்தான் தூதரிடம் போனில் சொல்லிவிட்டு விஷயத்தை முடித்தார் கான்
சீனியர் கரியப்பாவினை சந்தித்த பாகிஸ்தான் தூதர் “உங்கள் மகன் கேசி கரியப்பாவினை நாளை விடுதலை செய்வோம்” என அறிவித்தார், மறுத்து சொன்ன கரியப்பா “பாகிஸ்தான் சிறையிலுள்ள எல்லா இந்தியரும் என் மகனே முடிந்தால் எல்லோரையும் மொத்தமாக விடுவியுங்கள் என் மகனை மட்டும் என்றால் வேண்டாம்” என்றார்
யோசித்த அய்யூப்கான் எல்லா வீரர்களையும் விடுவித்தார்
ஆம் பாகிஸ்தான் ஆட்சியாளர்களில் கொடூரமானவர் என்ற கானுக்கு இப்படியும் ஒரு பக்கம் இருந்தது
வெளிவந்த ஜூனியர் கரியப்பா என்ன செய்தார்? 1971ம் ஆண்டு யுத்தத்தின்பொழுது மறுபடியும் பாகிஸ்தான் மேல் குண்டு வீசினார்
இப்படி வீரர்கள் கைது செய்யபடுவதும் விடுவிக்கபடுவதும் உலகெங்கும் காணும் நிகழ்வுகள், அதுவும் இந்தியா பாகிஸ்தானுக்கு சாதாரணம்
இதனால் இம்ரான்கான் ஒன்றும் உத்தமராகிவிடமாட்டார்
சமாதானம் பேசவருபவர் அந்த மசூத் அசாரை கொன்றுவிட்டு, லஷ்கர் கமாண்டரை சுட்டுவிட்டு தாவுத் இப்ராஹிமை ஒப்படைத்துவிட்டு பேச வரட்டும் , நாமும் பேசலாம்
சும்மா நடிப்பெல்லாம் இங்கு எடுபடாது, சிவாஜி நடிபினையே பார்த்த நாடு இது
இம்ரான்கான் மிகசிறந்த நடிகன், தன் நாடு வசமாக சிக்கிவிட்ட தருணத்தில் மிகசிறந்த நடிப்பினை வெளிபடுத்துகின்றார்
குறுக்குவழி ஒன்றும் அவருக்கு புதிதல்ல, கிரிக்கெட்டிலே பந்தின் நூலை பிரித்து அவர் செய்த சர்ச்சைகள் ஏராளம்
மனிதர் நம்ப கூடியவர் அல்ல, அல்லவே அல்ல
அய்யூப்கானே கைதிகளை விடுவித்த பாகிஸ்தானில் இது ஒன்றும் புதிதல்ல
நாளை வாகா எல்லையில் அபி ஒப்படைக்கபடுகின்றார்
ஒரு விஷயத்திற்காக அவரை பெரும் ஆராவாரத்தோடு கன்ணீர் சிந்தி வரவேற்கின்றோம்
ஆம் அவர் வீழ்ந்துகிடந்ததும் நடந்த சம்பவத்தை பார்த்த சாட்சி இப்படி சொல்கின்றது
‘அவர் கீழே விழுந்து எழும்பினார், உடலில் காயம் இருந்தது, இது இந்தியாவா பாகிஸ்தானா என கேட்டார், நாங்கள் இந்தியா என்றோம்
உடனே ஜெய் ஹிந்த் என உரக்க கத்தினார், நாங்கள் அடித்தோம் இது பாகிஸ்தான் என உணர்ந்த அவர் ஓடிசென்றார்
சில வரைபடங்கள் அடங்கிய பேப்பரை விழுங்கினார், இன்னும் சில ஆதாரங்களை அழித்தார், இறுதியாக கைதுப்பாக்கி எடுத்து எங்களையும் சுட்டுவிட்டு தானும் சுட்டுகொள்ளும் முடிவில் இருந்த பொழுதுதான் பாகிஸ்தான் ராணுவம் வந்து பிடித்தது”
ஆம் வானிலிருந்து விழுந்து மறுபிறப்பு பெற்றதும் அவர் எவ்வளவு கம்பீரத்துடன் ஜெய்ஹிந்த் என சொல்லியிருக்கின்றார் பார்த்தீர்களா?
கடைசி நிமிடத்திலும் ஒரு தகவலையும் எதிரி பெற்றுவிட கூடாது என எப்படி போராடியிருக்கின்றார் பார்த்தீர்களா?
அந்த தியாக திருமகனின் பெரும் வீரத்தில் அசந்து போய் இருக்கின்றது தேசம்
அவரை உச்சிமுகர்ந்து வரவேற்க இந்தியர் எல்லோரும் காத்திருகின்றோம்
“உன்னை போல் மாவீரர்களின் தன்னலமற்ற சேவையில் நிலைத்த்து நிற்குதையா இந்த தேசம்…
இத்தேசத்து ஒவ்வொருவர் நாவும், இதேசத்து காற்றும் முக்கடலும் அதன் அலைஉம் உன்பெயரை சொல்லி சொல்லி பெருமையுடன் அழைக்கின்றது
வா திருமகனே வா. மறுபடியும் பகைமுடிக்க வா”