சீக்கிரம் வந்துவிடுவார்
அபிநந்தன் இன்னும் சிறிது நேரத்தில் இந்தியா வந்துவிடுவார்
நிச்சயம் அவர் பேட்டி கொடுக்க முடியாது என எதிர்பார்க்கலாம், பேட்டி கொடுத்தாலும் ராணுவ விதிகளுக்கு கட்டுபட்ட பேட்டியாகவே இருக்கும்
ஒருவிஷயம் அவர் விளக்குவார் என எதிர்பார்க்கபடுகின்றது
அவர் விழுந்த இடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், அங்கிருந்தவர்கள்தான் அவரை தாக்கியிருக்கின்றார்கள்
முதலில் பார்த்த ரசாக் என்பவர் சொல்வதை கவனியுங்கள், சில விவகாரம் புரியும்
“நான் விமானத்திலிருந்து விமானி விழுவதை பார்த்தேன், தண்ணீர் கேட்டார், நான் இவரை பற்றி இளைஞர்களுக்கு தெரிவித்தேன்
அவர்கள் வந்தார்கள், அவர்களிடம் இது என்ன இடம் என கேட்டார் அபினந்தன் அவர்கள் இந்தியா என்றார்கள், உடனே ஜெய் இந்தியா என கத்தினார், இவர்களோ பாகிஸ்தான் வாழ்க சொல் என்றார்கள், கைகலப்பானது அபினந்தன் தப்பும்பொழுது ராணுவம் வந்தது”
அதுவும் ராணுவம் என்ன செய்தது பார்தீர்களா? கண்ணை கட்டி அழைத்து சென்றது
அதாவது இங்கு அவர் எதையும் பார்த்துவிட கூடாது என்பதில் கவனமாக இருந்திருகின்றார்கள், அதுதான் விஷயம்
இப்போது யோசியுங்கள்
நிச்சயம் பாகிஸ்தானின் மக்கள் சாககிடக்கும் ஒருவனிடம் இது இந்தியா என பரிகசிக்க மாட்டார்கள், அவர்கள் சுபாவம் வேறு
இவரை சூழ நின்று தாக்கிய, பாகிஸ்தான் வாழ்க என சொல்ல சொன்ன அந்த “இளைஞர்கள்” ஏதோ ஒரு தீவிரவாத கூட்டம் என்கின்றது சில தகவல்கள்
ஆக ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தீவிரவாத முகாமை இந்தியா மறுபடியும் குறிவைத்ததா? என்றொரு வாதம் கிளம்பினாலும் ஒரு விஷயம் உண்மை
அபினந்தனை தாக்கியவர்கள் தீவிரவாதிகள் என்றால் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடப்பது என்ன?
ஏன் கண்ணை அவசரமாக கட்டி இழுத்து சென்றார்கள்?
இப்படி பல கேள்விகள் அபினந்தன் வரவையொட்டி எழுகின்றன
மறுபடியும் களம் சூடாகின்றது
நிச்சயம் அபினந்தன் பெரும் பேட்டி கொடுக்க வாய்ப்பு குறைவு எனினும் பல விஷயங்கள் கசியலாம்