இலக்கை விட்டிருக்குமா?

பாகிஸ்தானில் இந்தியா தாக்குமுன் பல தந்திரங்களை காட்டியிருகின்றது, பல விதங்களில் பாகிஸ்தானை ஏமாற்றி அலையவிட்டு தாக்கி இருக்கின்றார்கள் எனும் தகவல் இப்பொழுது ஒவ்வொன்றாக வெளிவருகின்றது

பாகிஸ்தானுக்குள் புகுந்துதாக்குவது பிரச்சினை அல்ல, ஆனால் அதன் விமானங்கள் உடனே வந்துவிட்டால், பின்லேடன் கொல்லபட்டதில் இருந்து அவர்கள் மிக அலர்ட்டாக இருப்பது வேறுவிஷயம்

இதனால் பாகிஸ்தானை திசைதிருப்ப திட்டமிட்டிருக்கின்றார்கள்

முதலில் ராஜஸ்தான் பக்கம் பாகிஸ்தானுக்குள் இந்தியா ஊடுருவதாக பாவலா காட்டியிருக்கின்றார்கள், எல்லை பக்கம் போய் பாகிஸ்தான் ரேடார்கள் எப்படி என சோதித்திருக்கின்றார்கள் அவை அலறியிருக்கின்றன‌

உடனே பாகிஸ்தான் விமானங்கள் தாக்க வர திரும்பியிருக்கின்றார்கள்

அதன்பின் பஞ்சாபின் பதான்கோட்டில் இதே ஆட்டம்

ராஜஸ்தான் எல்லை பஞ்சாப் எல்லை இதே ஆட்டத்தை பலமுறை ஆட குழம்பியிருக்கின்றது பாகிஸ்தான்

ஆயினும் முழு கவனத்தை இங்கே திருப்பி பல விமானங்களை பாகிஸ்தானை இப்பக்கமே சுற்ற வைத்திருக்கின்றார்கள்

தீடீரென பறப்பதும் பின் இந்தியா திரும்புவதுமாக கொஞ்சநேரம் ஆட்டம் காட்டிகொண்டே இருக்கும்பொழுது வடக்கே இன்னொரு பிரிவு சட்டென இறங்கி தாக்கியிருக்கின்றது

அதுவும் இந்தியாவின் பல இடங்களில் இருந்து கிளம்பிய இந்தியாவின் 12 விமானங்கள் திடீரென உட்புகுந்து நொறுக்கியிருக்கின்றன‌

தங்களுக்கு தெற்கே போக்கு காட்டிவிடு வடக்கே தாக்குதல் நடப்பதை தெரிந்து பாகிஸ்தான் விமானங்கள் வருமுன் இந்திய விமானங்கள் திரும்பிவிட்டன‌

இவ்வளவு திட்டமிட்டு மிக நுட்பமாக தாக்கிய இந்திய விமானபடை இலக்கை விட்டிருக்குமா?

ஏராளமான பலிகள் நடந்திருக்கின்றன, ஆனால் அதை சொல்லமுடியாமல் பல்லை கடித்துகொண்டு நடித்துகொண்டிருக்கின்றது பாகிஸ்தான்