உப்புக்கு உரிமை

அன்று எல்லா கிராமங்களிலும் எல்லாம் கிடைத்திருக்கிறது, சுருக்கமாக சொன்னால் தன்னிறைவு பெற்ற கிராமங்கள்

வாழ்விற்கு தேவையான எல்லாமும் அங்கேயே கிடைத்திருக்கிறது, மக்கள் உடைமுதல் கொல்லபட்டறை வரை அங்கேயே பெற்றிருக்கின்றார்கள்

தலைச்சுமையும், சிறிய மாட்டுவண்டிகளுமே சரக்கு கொண்டு செல்லும் வழிகளாக இருந்த காலத்தில் பண்டமாற்றிலும் சில பொருட்கள் வியாபாரம் இருந்திருக்கின்றது

சுருக்கமாக சொன்னால் வெளியிலிருந்து வரும் பொருள் என எதுவுமில்லை

எவற்றில் எல்லாம் வரிபோடலாம் என துடியாய் துடித்த வெள்ளையனுக்கு ஒரு பொருள் கிடைத்தது, அதன் பெயர் உப்பு

அது ஒன்றுதான் கிராமங்களில் விளையாத கிடைக்காத பொருளாய் இருந்தது அது மட்டும் வெளியே இருந்து வந்தது, அதற்கு வரி விதித்தால் என்ன?

ஆம் உப்புக்கு வரிவிதித்தான் அவன், அது காந்தி காலத்தில் தொடங்கவில்லை முன்பே உப்பு வியாபாரத்தை கட்டுபடுத்த அவன் மகா நீண்ட உப்புவேலி அமைத்த காட்சிகளும் உண்டு

காந்தி காலத்தில் அது தீவிரமானது

உப்பில் கைவைக்கபட்ட உடன் இந்தியா பொங்கியதும், நடந்த போராட்டங்களும் வரலாறு

மிகுந்த போராட்டத்துக்கு பின் முடிவுக்கு வந்தது, உப்பு மீதான கட்டுபாடு நீக்கபட்டது

இதே நாளில் 1931ல் நீக்கபட்டது

இந்தவெற்றிதான் காந்திமேல் மிகபெரிய நம்பிக்கையினை கொடுத்தது

உப்பு போட்டு உண்பவர்களுக்கு உப்பு உரிமையாக கிடைத்த நாள் இது

இந்த அரசியல்வாதிகளை விட மற்றவர்கள் எல்லா இந்தியரும் அதை கொண்டாடலாம்

இதை கொண்டாட அரசியல்வாதிகளுக்கு மட்டும் தகுதியே இல்லை