நிச்சயம் சரி அல்ல
ஒரு பொறுப்பான குடியரசு தலைவர் இப்படி ஜக்கிசாமி ஆட்டத்திற்கு எல்லாம் வருவது நிச்சயம் சரி அல்ல
பொற்கோவில் தாக்கபட்டபொழுது சீக்கியர் எதிர்த்தும் ஜனாதிபதியாக காண சென்றார் ஜெயில்சிங், தீவிரவாதி சுட்டதில் அவரின் காதோரம் உரசி சென்றது தோட்டா
அப்படிபட்ட நாட்டுபற்று மிக்க ஜனாதிபதிகள் இருந்த தேசத்தில் ஒரு சாமியாரின் நிகழ்சிக்கு ஜனாதிபதி வருவது ஏற்றுகொள்ள கூடியது அல்ல
நாமே கேட்கின்றோம்
புயலாலும் தூத்துகுடி சம்பவத்தாலும் தமிழகம் பாதிக்கபடும் பொழுது இங்கு வராத அதுபற்றி பேசாத ஜனாதிபதி சாமியார் ஆசிரமத்திற்கு வரும் மர்மம் என்ன?
யார் அழைத்தாலும் ஜனாதிபதி வருவாரா?
மத விழா என்றால் கூட இனி தைபூசம் சூரசம்ஹாரம் போன்ற விஷேசங்களுக்கு ஜனாதிபதி வருவாரா?
இதெல்லாம் ஏற்றுகொள்ளமுடியா விஷயங்கள்
சாமி முக்கியம் என்றால் இமயமலை சாரலில் ஆசிரமம் அமைத்து ஜக்கியினை அங்கே தூக்கி செல்லட்டும்
சந்திராசாமி போல இந்த ஜக்கி ஒரு மர்ம சாமியாராக அரசியல் சாமியாராக மாறுவது தமிழகத்திற்கு நல்லதே அல்ல
அதுவும் புனிதமான ரமலான் மாதத்து விருந்து ஜனாதிபதி மாளிகையில் நடக்காது என அறிவித்த ஜனாதிபதி, ஜக்கிசாமி ஆட்டத்திற்கு மட்டும் ஓடிவருவதை எந்த மதசார்பற்ற இந்தியனால் ஏறக் முடியும்?