பணம் நமக்கு சாவு அவர்களுக்கு

“உங்கள் எப்16 விமானத்தை எங்கள் நாட்டு மிக் வீழ்த்திவிட்டது பார்த்தீர்களா?

ஆமாம் நன்றாக இன்னும் வேலை செய்கின்றது

இனி பாகிஸ்தானுக்கு எப்117 எப்பொழுது கொடுப்பீர்கள்?

நீங்கள் இந்தியாவுக்கு AMRAAM லேட்டஸ்ட் எப்பொழுது கொடுப்பீர்களோ அப்பொழுது

நாங்கள் AMRAAM R- 77ல் இருக்கின்றோம் அது R-100 ஆகும் பொழுதுதான் R-77 கொடுப்போம்

நாங்கள் 6ம் தலைமுறை விமானம் F 200 செய்துவிட்டபின்புதான் F117 கொடுப்போம்

ஆக அவர்களால் நமக்கு எவ்வளவு லாபம் பார்த்தீர்களா?

பின்னே நமக்கு பணம் அவர்களுக்கு அழிவு, இதற்காகத்தானே பாகிஸ்தான் என்றொரு நாடே முன்னோர்கள் உருவாக்கி வைத்தார்கள், காஷ்மீரை தீர்க்காமல் வைத்தார்கள்

ஆமாம் தீர்ந்திருந்தால் என்னாயிருக்கும்? நம் ஆயுதங்களை யார் தேடுவார்கள்? துருபிடித்திருக்காதா?

ஒரு காலத்தில் பிரிட்டன் அரசுக்கு சென்ற பணமெல்லாம் இப்பொழுது நம் இருவருக்கும் வருகின்றது பார்த்தீர்களா?

ஆமாம், ஆமாம்

இடையில் பிரான்ஸ்காரன் வேறு

விடுவானா? அவனும் பாண்டிச்சேரி எல்லாம் ஆண்டிருக்கின்றான் அல்லவா? அதனால அவனும் ரபேல் விற்று சம்பாதிக்கட்டும்

ஆமாம், பாவம் சம்பாதிக்கட்டும்

இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டதாக அவர்களாக நினைக்கின்றார்கள் மடையர்கள், இன்றும் அவர்கள் நமக்கு ஆயுதவரிகட்டுவதை உணர்வதே இல்லை

பணம் நமக்கு சாவு அவர்களுக்கு

ஆமாம் அப்பொழுதும் நாம் கழித்துபோட்ட ஆயுதங்களை வாங்கி அடித்து சாகின்றார்கள் மடையர்கள்

அவர்கள் அப்படி இருக்கும் வரைதான் நாம் இந்தியாவினை உருட்டி ஆளமுடியும், இந்த பந்தை போல உதைத்து ஆடமுடியும்

அங்கு மதவெறி இருக்கும் வரை நமக்கு என்ன குறை?

ஆமாம் இப்பக்கம் இஸ்லாமிய வெறியும் அப்பக்கம் இந்துவெறியும் இருக்கும் வரை வியாபாரத்திற்கு சிக்கலே இல்லை

நாம் இருவரும் பல ஆயுதங்களை சோதிக்க வேண்டும், ஒருவொருக்கொருவர் மிரட்ட வேண்டும், அதன் பின் உலகெல்லாம் விற்றுகொண்டே இருக்க வேண்டும்

ஆமாம் நம் ஆயுதம் உலகின் எந்த மூலையிலும் வெடிக்கலாமே தவிர நாம் மோதவே கூடாது

அது எப்படி மோதுவோம், எங்காவது எவனையாவது மோதவைத்து விற்றுகொண்டே இருப்போம்

அதுதானே நம் வருமானம் , விடுவோமா?

ஒருகாலத்தில் பிரிட்டன் சுரண்டிய இந்தியாவினை , அது இன்றுஇரண்டாக பிரிந்தாலும் எப்படி நான், நீங்கள், பிரான்ஸ் எல்லாம் மறுபடியும் சுரண்டுகின்றோம் பார்த்தீர்களா?

ஆம் இதன் பெயர்தான் அறிவு

அது அவர்களுக்கு இல்லாதவரை சிக்கல் இல்லை

ஆமாம் அவர்களுக்கு அது இல்லாதவரை நாம் வல்லரசாக நீடித்து கொண்டே இருக்கலாம்”