ஜெய்ஹிந்த் சொல்லுங்கள்

ஒவ்வோர் அறிவிப்புக்குப் பிறகும் ஜெய்ஹிந்த் சொல்லுங்கள்: ஊழியர்களுக்கு ஏர் இந்தியா உத்தரவு

மிக நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது

விமானத்தில் புளியோதரை வழங்கியது முதல், பாம்பு எலி புகுந்தது வரை ஏகபட்ட விஷயங்கள்

அது போக விமானம் அடிக்கடி பயமுறுத்தும் விஷயங்களும் உண்டு

இதில் ஏர் இந்தியாவில் ஜெய்ஹிந்த் சொல்ல வேண்டுமாம்

எலி புகுந்துவிட்டது என பயணி கத்தினால் இனி ஜெய்ஹிந்த் என சொல்லியபடியே எலியினை தேடவேண்டும்

மூட்டை பூச்சியினை நசுக்கும் பொழுதும் ஜெய்ஹிந்த் சொல்ல வேண்டும், பாம்பினை அடித்தாலும் அப்படியே

ஜெய்ஹிந்த் என சொல்லி புளியோதரை கொடுத்தால் அடுத்தமுறை பயணி அந்த விமானம் ஏறுவாரா?

இனி கடத்தல்காரர்களும் ஜெய்ஹிந்த் என சொல்லி கடத்தினால் எப்படி இருக்கும்?