அவரவர் எல்லைக்குள் போராடலாமே

GobackModi எனும் கோஷம் பாகிஸ்தானில் இருந்து வரட்டும், பங்களாதேஷில் இருந்தும் வரட்டும், ஏன் அண்ட சராசர விண்வெளிக்கு அப்பால் இருந்தும் வரட்டும்

ஆனால் வோட்டு இந்திய மக்கள்தான் செலுத்த வேண்டும்,

மிக சில காலங்களை தவிர தமிழக பாராளுமன்ற முடிவுகள் மத்திய அரசை பாதிப்பதே இல்லை

ராஜிவ் காலத்திற்கு பின் மோடிகாலத்தில் அது திரும்பி விட்டது

இடைபட்ட வாஜ்பாய் காலமுதல் மன்மோகன் காலம் வரை அக்குழப்பம் இருந்தது அதில் திமுக பங்குபெற்று பலனும் வளமும் அடைந்தது

அந்த 20 வருட காலத்தில் மத்தியில் திமுக பங்குபெற்ற காலத்தில் தமிழகத்திற்கு என்ன நன்மை கொணர்ந்தது?

காவேரி தீர்ந்ததா? இல்லை ராமேஸ்வரம் சிக்கல்தான் தீர்ந்ததா?

அணுவுலையினை விரட்டினார்களா? ஸ்டெர்லைட்டை மூடினார்களா? இல்லை மீத்தேன் பூமியினை மீட்டார்களா?

ஒன்றுமே இல்லை ஆனால் அவர்கள் குடும்பத்தார் தொழில் வானளவா உயர்ந்தது

ஒன்றை உறுதியாக சொல்லலாம்

மாநில அரசியல் வேறு, இந்திய அரசியல் வேறு

தமிழக எல்லைக்கும் திமுக அதிமுக குட்டிகரணம் அடிக்கட்டும் சமூக நீதி காக்கட்டும் என்னமும் செய்யட்டும்

நாளை திமுக மாநிலத்தில் ஆட்சிக்கு வந்து மத்தியில் பாஜக வலுவாக இருந்தால் என்ன செய்வார்கள்?

ஆட்சியினை கலைத்துவிட்டு ஓடுவார்களா? அவ்வளவு மானமிக்கவர்களா?

வருங்காலத்தில் எதுவும் நடக்கலாம்

மாநில அரசு மத்தியில் இருக்கும் அரசுடன் ஒத்துழைத்தால்தான் இங்கு பெரும் நலதிட்டங்களை செயல்படுத்தமுடியும் என வாய்விட்டு சொன்னவர் கலைஞர்

இந்திராவுடன் அவர் சமரசமான விஷயம் அதுவே

அதை கலைஞர் செய்தால் ராஜதந்திரம், பழனிச்சாமி செய்தால் அடிமைத்தனமா?

தமிழ்நாட்டில் செய்ய வேண்டிய அரசியலை விட்டுவிட்டு அதாவது பழனிச்சாமிக்கு கூட்டணியாக நெருக்கடி கொடுப்பதை விட்டுவிட்டு அவரை பலம்பெற விட்டுவிட்டு சும்ம்மா மோடி மோடி என திமுக அலறுவதால் ஒன்றும் ஆகபோவதில்லை

அவரவர் எல்லைக்குள் அவரவர் போராடுவதே சரி..