முதல்வராகும் ஆசை
நெடுஞ்செழியன் மனைவி கோப்பெருந்தேவியுடன் வீற்றிருந்தான், சோழமன்னன் தன் மனைவியோடு வீற்றிருந்தான், ஏன் ராவணனே தன் மனைவி மண்டோதரியுடன் வீற்றிருந்தான் என்ற காட்சிகள் பழங்காலத்தில் உண்டு
பின்னாளில் அது மாறிற்று
மன்னராட்சியில் இருந்து மக்களாட்சிக்கு தமிழகம் மாறிய புதிதில் ராஜாஜி போன்ற தலைவர்கள் மனைவியோடு வந்தவர்கள் அல்ல
காமராஜருக்கு மனைவியே கிடையாது, ஆம் ஒரு மனைவி கூட கிடையாது
அண்ணாவின் மனைவி ராணி என்றொருவர் உண்டு என்பதே சிலருக்கு தெரியாது
முதன் முதலில் மனைவியோடு வலம் வந்தவர் புரட்சி தலைவர், அவர் செய்த புரட்சி அது ஒன்றுதான்
ஏன் அவர் மனைவி அவரோடு வந்தார் என்பதற்கு பல காரணங்கள் பல கண்காணிப்புகள் என்றாலும் முதலில் மனைவியோடு பல பொது இடங்களுக்கு வந்தவர் அந்த புரட்சிதான்
அதனால்தான் புரட்சி தலைவர் என அறியபட்டார், இதனால் தாய்குலங்களுக்கும் அவர்மேல் மரியாதை வந்தது
அவருக்கு பின் அவர் மனைவி வி.என் ஜாணகி முதலமைச்சருமானார்
தமிழக பெண்களுக்கு குறிப்பாக அரசியல்வாதி வீட்டு மனைவி மற்றும் வேலைகாரிகளுக்கு முதல்வர் ஆசையினை விதைத்தது இந்த வி.என் ஜாணகியே
அவரை தொடர்ந்துதான் ஜெயா சசிகலா என ஒருபக்கமும் இந்த பிரேமலதா போன்றோர் இன்னொரு பக்கமும் கிளம்பி வந்துவிட்டார்கள்
இந்த வி.என் ஜாணகியே எல்லாவற்றிற்கும் காரணம், அதைவிட முக்கியம் அந்த மாபெரும் புரட்சியினை செய்த “புரட்சி தலைவர்”
அதனால்தான் கருப்பு எம்ஜிஆர் மனைவிக்கும் வி.என் ஜாணகி வழியில் முதல்வராகும் ஆசை பொத்துகொண்டு வந்திருக்கின்றது