மில்லியன் டாலர் விலையாக இருக்கலாம்

தொன்மையான ஆவணம் என்றாலும் குறிப்பு என்றாலும் ஆங்கிலேயனாலும், சீனராலும் அவர்கள் மொழியில் படிக்கமுடிகின்றது

லத்தீன் மொழி ஜூலியஸ் சீசர் காலத்து குறிப்புகளை படிக்களவும் இன்றும் அப்படியே இருக்கின்றது

யூத இனம் தொலைந்து போன ஹீப்ரு மொழியிக்கே உயிர்கொடுத்து பண்டைய வரலாற்றினை புள்ளிமாறாமல் படிக்கின்றது

ஆனால் 100 வருடம் முந்தைய நிலபத்திரங்களை கூட தமிழன் படிக்க முடியாமல் தடுமாடுகின்றான்

அவனுக்கும் 3 தலைமுறைக்கு முந்தைய தமிழுக்கும் கூட தொடர்பே இல்லை

இதில் பண்டைய தமிழும், ஓலைசுவடி தமிழும் எப்படி புரியும்?

மொழி சீர்திருத்தம் என்பது நடந்திருக்க கூடாத ஒன்று, பன்னெடுங்காலமாக இருந்த சங்கிலியினை அது தகர்த்துவிட்டது

சீர்திருத்தபட்ட தமிழ் என்பது ஒலைசுவடி போன்ற தொன்மங்களை படிக்கவிடாத தலைமுறையினை உருவாக்கிவிட்டது

சில விஷயங்களில் கை வைக்க கூடாது, அதன் போக்கில் விட்டால்தான் பண்டைய தொடர்ச்சி வருங்காலத்திற்கு கிடைக்கும் என்பது இப்பொழுதுதான் புரிகின்றது

தமிழை காட்டுமிராண்டி மொழி , அதை திருத்த போகின்றேன் என சொன்னவர்களை அன்றே அடித்துவிரட்டியிருந்தால் இந்நிலை வந்திருக்காது

தமிழ் அரை நூற்றாண்டாக எப்படி இங்கு வளர்ந்திருக்கின்றது என்றால் அந்த பரிதாபம் வார்த்தையால் சொல்ல கூடியது அல்ல‌

இன்னும் 100 ஆண்டுகளில் தமிழை எழுத வாசிக்க தெரிந்தவர்களை கண்டறிவது மில்லியன் டாலர் விலையாக இருக்கலாம்

பழைய சொத்து ஆவணங்களை, ஓலை குறிப்புகளை அவர்கள் படித்து சொல்ல பல கோடிகள் கேட்கலாம்