எல்லையில் நிலமை சுமூகமாக இல்லை

இந்தியா தேர்தல் பரபரப்பில் இருந்தாலும் எல்லையில் நிலமை சுமூகமாக இல்லை

பாகிஸ்தானின் கப்பல்களை இந்தியா அனுமானித்தால் அவற்றில் பல திசைமாறி நிற்கின்றன, காரணம் எளிது

அதாவது யுத்தம் தொடங்கினால் கராச்சியினை தாக்க செல்லும் இந்திய கப்பல்களை சுற்றி வளைத்து தாக்கும் ஒருவித தந்திரத்துடன் பாகிஸ்தான் தன் கப்பல்களை வேறு வேறு இடங்களில் நிறுத்தியிருகின்றது

பாகிஸ்தானிய விமானங்கள் எல்லைக்கு மிக அருகில் பறக்கின்றன, நேற்று எப்16 ரக விமானங்கள் எல்லைக்கு அருகே வந்து வந்து திரும்பியிருக்கின்றது

இந்திய விமானபடையும் வீரர்களின் விடுமுறையினை ரத்து செய்துவிட்டு எந்த சூழலுக்கும் தயாராய் நிற்கின்றது

ஏதும் சிறு உரசல் நடந்தாலும் நிலமை சிக்கல், தேர்தலும் சிக்கல்

இதனிடையே பாகிஸ்தானின் வடக்கில் உள்ள சர்வதேச தொண்டு நிறுவணம் ஒன்று பாகிஸ்தான் ராணுவம் சுமார் 200 உடல்களை கைபர் பகுதியில் இருக்கும் மக்களிடம் ஒப்படைத்தது என்ற செய்தியினை வெளியிட்டிருக்கின்றது

அதை உறுதி செய்யும் விதமாக பாகிஸ்தான் ராணுவமும் இந்தியா தாக்கிய தீவிரவாத முகாமை சீல் வைத்திருக்கின்றது, யாருக்கும் அனுமதி இல்லை

ஆக ஏதோ பெரும் சேதம் ஏற்பட்டிருக்கலாம், இந்தியா வீசியது சுரங்கத்தை அழிக்கும் அதாவது துளையிட்டு உட்புகுந்து வெடிக்கும் வகை என்பதால் கூரையினை துளைத்து உள்ளே வெடித்திருக்கலாம்

ஆனால் என்ன வகை குண்டு என்பதுதான் மர்மம், அதை பற்றி நாமும் சொல்லமுடியாது இந்திய ராணுவமும் சொல்லமுடியாது

கட்டடத்திற்கு அதிக சேதமின்றி ஆட்களை கொல்லும் ரகம் அது

அது துளையிட்ட இடத்தை அடைத்தால் கட்டடத்திற்கு அதிக சேதமிலாதவாறு காட்ட முடியும், பாகிஸ்தான் அதை செய்திருக்கலாம் என்கின்றது தியரி

ஆக இந்திய தாக்குதல் ஏராளமானோரை கொன்றிருகின்றது என்பதும் அந்த கோபத்தில் பாகிஸ்தான் கொதித்து நிற்கின்றது என்பதும் உண்மையாகின்றது