நடிகர் & சன் ஆச்சர்யம்
ரஜினி அமைதியாய் இருப்பதில் அர்த்தமுண்டு, அஜித்குமார் என்பவர் அமைதியாய் இருப்பதிலும் அர்த்தமுண்டு
ஆனால் அந்த நடிகர் & சன் அமைதியாய் இருப்பதுதான் ஆச்சரியம்
பாஜகவினாலும் அதிமுகவினாலும் விஜயும் அவர் தந்தையும் பட்டபாடு கொஞ்சமல்ல
ஆனால் அவர்களுக்கு ஆணி அடித்து புதைக்க வேண்டிய நேரத்திலும் ஏன் அமைதியாய் இருக்கின்றார்கள் என்றால் அதுதான் அரசியல்
இப்பொழுது வந்தால் திமுக காங்கிரஸிடம் சிக்கி கொள்வோம் என்றும், பின்னொருநாளில் திமுகவும் காங்கிரசும் தந்தை மற்றும் மகனின் காலில் விழுந்து கதறவேண்டும், தங்களை மாபெரும் சக்தியாக மாற்ற வேண்டும் என்ற நகர்வு இருக்கலாம்
இல்லாவிட்டால் அரசியல் ஆசையின் உச்சத்தில் ஊறிபோய் இருக்கும் அக்குடும்பம் இந்த வாய்ப்பினை விடாது
இதையும் மீறி அவர்கள் அமைதியாய் இருக்க ஒரே ஓரு காரணம் தான் உண்டு
தங்களின் மொக்கை படத்திற்கு பெரும் விளம்பரம் கொடுக்கும் இந்த பாஜகவினையும் அதிமுகவினையும் ஏன் பகைக்க வேண்டும்? அவர்கள் இல்லாவிட்டால் எப்படி தங்கள் படம் ஓடும்? என்ற சினிமா வசூல் கணக்காக இருக்கலாம்..
