எல்லாவற்றிற்கும் எல்லை உண்டு
எல்லாவற்றிற்கும் எல்லை உண்டு, அதை மீறினால் சிக்கல்தான்
தன் எல்லையினை மீறிய அலெக்ஸாண்டர் 33 வயதிலே செத்தான், ஜெர்மனிக்கு மன்னனாக வாழ்ந்திருக்க வேண்டிய ஹிட்லர் எல்லை மீறி ரஷ்யாவிடம் அடிவாங்கி செத்தான்
ஏன் மெரினா புரட்சியே ஜல்லிகட்டுக்கு அனுமதி வழங்கியபின்னும் இளநீர், மோர் இன்னும் என்னென்னமோ சொல்லி திசைமாறி வன்முறையாய் முடிந்தது
இந்த பொள்ளாச்சி விவகாரமும் அப்படித்தான்
அறிவுமயங்கி இல்லை அஞ்சி இல்லை ஏதோ ஒரு நெருக்கடியில் அந்த கயவர்களிடம் பெண்கள் சிக்கியிருக்கின்றார்கள் நடக்க கூடா விஷயமெல்லாம் நடந்தது
நிச்சயம் நல்வழி நடந்த பெண்களை அக்கோஷ்டி பிடித்து சென்று கதற கதற வீடியோ எடுக்கவில்லை, அந்த அளவு இங்கு நிலமை சீரழியவுமில்லை
சீரழிய வழிதேடி அலைந்தவர்கள் சீரழிந்தார்கள்
இதில் இரு பெண்க்கள் கலெக்டரிடம் துப்பாக்கி வைக்க அனுமதி கேட்டார்களாம் அதுவும் 9 எம்.எம் பிஸ்டலாம்
எதற்காம், அவர்களுக்கு பாதுகாப்பில்லையாம் அதனால் வேண்டுமாம்
எத்தனை கோடி பெண்கள் இருக்கும் தமிழகம் இது? எல்லோருக்கும் கொடுக்க முடியுமா?
இவர்களிடம் அந்த தலைவர் பாணியில் ஒரே ஒரு பதில் மட்டும் சொல்லலாம்
“துப்பாக்கியா? எதற்கு?
சிக்கல் இல்லா உறவு என்றால் துப்பாக்கி முனையில் நீட்டிக்கவும், அனுமதி இல்லாமல் வீடியோ எடுத்தால் சுடுவதற்கா”
இந்த பெண்களின் பெயர் என என்று பார்த்தால் ஒரு பெண் பெயர் ஓவியா இன்னொரு பெண்ணின் பெயர் தமிழீழம்
ஓஓ தமிழீழம்
இதற்கு மேலும் சொல்ல என்ன இருக்கின்றது?
இந்த இரு பெண்களிடமும் யாராவது “ஏன் இப்பொழுது உங்களுக்கு துப்பாக்கி ? யாரோ வீடியோ எடுத்துவிடுவார்கள் என சந்தேகமா? யார் அவன்?” என கேட்டால் என்னாகும்?”