தமாகாவில் ஒருவர்தான் உண்டு
“அமர் விலங்கி, ஆற்ற அறியவும்பட்டார்
எமர், மேலை இன்னரால்; யார்க்கு உரைத்தும்’ என்று, தமர் மறையால் கூழ் உண்டு சேறல் அதுவே- மகன் மறையாத் தாய் வாழுமாறு.”
அதாவது ஒருவன் தான் களத்தில் இறங்கி போரிடாமல் தங்கள் முன்னோரின் பெருமை பேசி திரிவதும், அதை சொல்லி உணவு பெறுவதும் இழிவானதாகும்
தன் மகன் இவன் என சொல்ல ஒரு தாய் அஞ்சும் அளவு அது இகழ்ச்சியாகும்
இதெல்லாம் வாரிசு அரசியல் என சொல்லி திரிவோருக்கு பொருத்தமாக இருக்கலாம்
அவ்வகையில் காங்கிரசிலும், திமுகவிலும் நிறைய பேர் உண்டு, தமாகாவில் ஒருவர்தான் உண்டு