தேர்தல் துளிகள் 18/03/2019 (2)
இருபக்கமுமே பாராளுமன்ற தேர்தலை பற்றி சொல்ல விஷயமே இல்லை
அதிமுக எம்பிக்கள் என்ன செய்தார்கள் என திமுக தரப்பு கேட்டால் எதிர்கோஷ்டி ஒரே வார்த்தையில் இவர்களை அடக்கிவிட முடியும்
ஆம் ஒற்றை வார்த்தை போதும்
10 வருடம் மன்மோகன்சிங் ஆட்சியில் திமுக இருந்தது, ஆனால் கலைஞருக்கு அஞ்சலி செலுத்த அந்த மன்மோகன்சிங் ஏன் வரவில்லை?
எவ்வளவுக்கு பாதிக்கபட்டிருந்தால் அவர் வராமல் இருந்திருப்பார்?
இந்த கேள்விக்கு காங்கிரசிடமே பதில் இல்லை எனும்பொழுது திமுகவிடம் எப்படி இருக்கும்?
பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை , பக்தாஸ் பரவசம்
அங்கிருக்கும் நபர்களை பாருங்கள். வாஜ்பாய், மோடி, யோகி, உமா பாரதி, பொன்னார் இன்னபிற
இதில் யாருக்கு குடும்பம் இருக்கின்றது? பின் எங்கிருந்து வாரிசு வரும்?
சுத்த சாமியார் கோஷ்டி அது, இந்த மடங்களில் இருப்பதை போலவே நாடும் அரசியலும் இருக்கவேண்டும் என எதிர்பார்த்தால் எப்படி?
இந்த தேர்தலில் அவர் இருந்தால் இப்படித்தான் கேட்டிருப்பார்
“அவர் காவல்காரனா?
யாருக்கு?
நாட்டுக்கா? மாட்டுக்கா? இல்லை அம்பானி வீட்டுக்கா?”
சவுக்கிடார்ன்னா என்ன அர்த்தம்னுதான?
அது தெரியாதா? அந்த ஆளு
சாவ கிடக்காராம்
