ரஷ்யா கனத்த அமைதி

புல்வாமா தாக்குதல் அதை தொடர்ந்த சிக்கல்கள் என எதிலும் ரஷ்யாவோ புட்டீனோ வாயே திறக்கவில்லை

மாறாக அமெரிக்க துப்பாக்கிகளை விட ரஷ்ய துப்பாக்கிகள் இந்தியாவில் தயாரிக்கபடும் என இந்தியா அறிவித்தது

ஆயினும் ரஷ்யா கனத்த அமைதி, ஏன் இந்த அமைதி என்பதில் பல கணக்குகள் இருந்தன‌

விஷயம் இந்திய விமானபடையில் இருக்கின்றது

கிட்டதட்ட 200க்கு மேலான மிக் விமானங்கள் விபத்துகுள்ளானது, இது மொத்த விமானபடை எண்ணிக்கையில் 4ல் ஒரு பங்கு ஆகும்

ரஷ்யாவின் சுகோய் 30 சில இருந்தாலும் மேலும் வலுபடுத்த ரபேல் பக்கம் சென்றது இந்தியா, தன் மிக் 35 ரகத்தை இந்தியா வாங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரஷ்யாவிடம் இருந்தது

ஆனால் மிக் ரகங்களை இந்தியா ரசிக்கவில்லை

சும்மா மிக் 21 29 என 1970 மாடல்களுக்கு பணத்தை கொட்டிகொண்டே இருக்க வேண்டுமா? பழைய உதவிகளை காட்டி ரஷ்யா நம்மை கட்டி போடுவதா என்ற முணுமுணுப்பு இங்கு இருந்தது

பழைய திராவிட கொள்கைகளை காட்டி தமிழக அச்சுறுத்தல் அரசியல் நடப்பது போல ரஷ்யா எதை எல்லாமோ சொல்லி கனத்த தொகையினை மிக் பராமரிப்பு என கறந்து கொண்டிருந்தது

இதனால் 1990களிலே பிரான்ஸின் டசால்ட்டிடம் இருந்து மிராஜ் ரகங்களை இந்தியா வாங்கியது ஆனால் எண்ணிக்கை குறைவு

இப்பொழுது ரபேல் என மறுபடியும் பிரான்ஸ் கதவினை தட்டியது, காங்கிரஸ் அரசை விட மோடி அரசு வாங்கியது நவீன அம்சமிக்க ரபேல் என்பதால் விலை அதிரித்தது

இதை பார்த்த சில சக்திகள் தங்கள் விமானத்தை வாங்காத இந்தியாவில் சலசலப்பினை ஏற்படுத்த ரபேல் ஊழல் என ஒன்றை கிளறிவிட்டன‌

ரஷ்யாவிடம் ஏராளமான விமானங்களை வாங்கும்போது வராத ஊழல் ரபேலிடம் மட்டும் வருமாம்.

ரபேலோடு விடவில்லை மாறாக அமெரிக்க லாக்கீன் மார்ட்டின் நிறுவணத்திடம் இருந்து எப் 21 விமானத்தை வாங்க ஒப்பந்தம் செய்யபட்டாயிற்று

இது மிகபெரும் நவீன விமானம், சுகோய் 30 விட நவீனமானவை

இது ரஷ்யாவுக்கு பிடிக்கவில்லை, அதனால் கனத்த அமைதி

இந்தியா பழைய மிக் ரக விமானங்களை ஒதுக்கும் நேரத்தில் தன்ன்னிடமே விமானம் வாங்க வேண்டும் என்ற ரஷ்ய நம்பிக்கை ஏமாற்றத்தால் முடிந்ததில் அதற்கு கடும் கோபம்

இனி என்னாகும்?

நம்பினால் நம்புங்கள், ரபேல் சர்ச்சை வெடித்தது போல எப் 21 போன்ற இன்னும் பல சர்வதேச ராணுவ‌ இறக்குமதி ஊழல் பெரிதாக வெடிக்கலாம்

அதை சில நாடுகள் ரசிக்கலாம்

எனினும் எப் 16 விமானத்தை விட பன்மடங்கு நவீனமாது எப் 21, இவை அமெரிக்க விமானபடைக்கு அடுத்து இந்தியாவுக்கு மட்டும் கொடுக்கபட்டுள்ளது என்பது வரவேற்கதக்க விஷயம்

இவை அங்கு உதிரிபாகமாக தயாரிக்கபட்டு இங்கு அசெம்பிள் செய்யபடும்

இந்திய விமானபடை நவீனமயனாகின்றது மிக நல்ல விஷயம், எப் 21 என்பது மாபெரும் ஆயுதம்

ஒன்று புரிகின்றதா? ரஷ்ய ஆயுத பிடியில் இருந்து இந்தியா 1990களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக‌ வெளிவருகின்றது இப்பொழுது முழுக்க வருகின்றது

பெரும்பாலும் கப்பல் முதல் ஏவுகனை வரை பழைய சமாச்சாரங்களையே ரஷ்யர்கள் கொடுப்பார்கள், இப்பொழுதுதான் எஸ் 400 என்பதை கொடுத்திருக்கின்றார்கள், அது நிச்சயம் இந்தியாவின் சாதனை , நிர்மலா சீத்தாராமனை அதில் மறக்க முடியாது

மற்றபடி ரஷ்யர்கள் ஒருமாதிரி பழைய விஷயத்தைதான் தருவார்கள், உலக அரசியல் இது

முதல் தடவையாக எப் 21 எனும் மாபெரும் நவீன , மிக பலமான விமானத்தை இந்தியா பெறுகின்றது என்பது பல நாடுகளுக்கு பொறுக்கவில்லை ரஷ்யா உட்பட‌

ஏற்கனவே பனி அள்ளும் இயந்திரத்தை இந்தியாவுக்கு அனுப்பி காசு பார்த்த நாடு ரஷ்யா, அதாவது எங்களிடமிருந்து வாங்கியே தீரவேண்டும் என்ற நிர்பந்தம் அது

1970களில் பனி அள்ளும் இயந்திரத்தை அரக்கோணத்தில் இந்தியா வெறுமனே நிறுத்தியபொழுது அது சர்ச்சையானது, அன்றே ரஷ்ய பிடியிலிருந்து இந்தியா வெளிவரவேண்டுமென்ற குரல்கள் இருந்தன, இந்திய பணம் வீணாக ரஷ்யாவில் கொட்டபடுகின்றது என்ற சர்ச்சை எல்லாம் இருந்தது

பழைய மிக் விமானங்களை அடிக்கடி ரஷ்யாவிடம் கொடுத்து பழுது பார்க்காமல் மொத்தமாக தலைமொழுகலாம் என்ற கோரிக்கையினை பழைய அரசுகள் ஏற்கவில்லை, அது செய்ய வேண்டியதும் கூட‌

இப்பொழுது அது நடந்திருக்கின்றது

செய்தது யாரென்றால் மோடியும், நிர்மலா சீத்தாராமனும் மறைந்த மனோகர் பாரிக்கரும்

இந்தியாவின் மிகபெரும் ராஜதந்திர அதே நேரம் துணிச்சலான வெற்றி இது

காங்கிரஸின் கொள்கையிலிருந்து விலகி தேசத்திற்கு புதுவலிமை கொடுக்கும் திட்டங்களை தைரியமாக செய்யும் இந்த அரசினை வாழ்த்தத்தான் வேண்டும்

உண்மை இதுதான்

எப் 21 என்ற நவீன விமானத்தை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் வெற்றி அடைந்திருக்கும் இந்திய அரசின் நிலைப்பாட்டை வாழ்த்தியே தீரவேண்டும்

இனி பழைய மிக் விமானங்களுக்கு பதிலாக ரபேலும் சுகோயும் எப் 21 ரகமும் இருக்கும் , ரஷ்யாவுக்கு மிக் பராமரிப்பு என செல்லும் பணமும் மிச்சம்

மிகபெரும் ராஜதந்திர நகர்வு மற்றும் வெற்றி இது, சந்தேகமில்லை தேசத்தின் புதுபாதை இது

அந்த மனோகர் பாரிகரும் இதில் மறக்கமுடியாதவர்

தமிழகத்து இரும்பு பெண்மணி நிர்மலா சீத்தாராமனின் மகத்தான சாதனை இது

நிஜமாகவே மோடி சவுக்கிட்டார்தான் போல..

நாட்டுக்கு எது தேவையோ அதை சரியாக செய்திருகின்றார்

( இது அரசியலுக்காக அல்ல, உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஒரு விஷயத்தினை பற்றி எழுதபட்டது அவ்வளவுதான் விஷயம்..

இந்திய அமெரிக்க ஒப்பந்தம் மிக ரகசியமானது என்பதாலும் அதன் பல விதிமுறைகளும் பலவும் வெளிதெரிந்தால் பெரும் சர்ச்சைகள் உலகளவில் வரலாம் என்பதாலும் இந்திய அரசு இது பற்றி வாய்திறக்க கூடாது என்பது விதி, அதனாலே விஷயம் பரபரப்பாக இல்லை, மவுனிக்கபடுகின்றது)